ஷிர்டி சாயி சத்சரிதம்
சிறிது நேரம் அங்கு மௌனமாக அமர்ந்து கொண்டிருந்துவிட்டு, மற்றவர்களுடன் வாடாவிற்கு திரும்பிவிட்டார். ஸ்நானம் செய்த பின், சோவலாவை (மடி ஆடைகளை) உடுத்துக் கொண்டு, தாம் தினமும் செய்யும் அக்கினி ஹோத்திரதைச் செய்ய ஆரம்பித்தார்.
பாபா, "இன்று நம்முடன் கொஞ்சம் காவிச்சாயம் எடுத்துக் கொண்டு செல்லலாம். இன்று காவி உடை உடுத்துக் கொள்ளலாம்" என்று சொல்லிக்கொண்டே எப்பொழுதும் போல லெண்டிக்கு கிளம்பினார்.
காவிச்சாயத்தை வைத்துக் கொண்டு பாபா என்ன செய்யப் போகிறார் என்றும், என்றுமில்லாமல் திடீரென்று இன்று ஏன் காவி உடையைப் பற்றி நினைக்கிறார் என்றும் அனைவரும் வியப்படைந்தார்.
இம்மாதிரி சங்கேத பாஷையில் பேசுவது பாபாவுக்கே கைவந்த கலை. இதிலிருந்து என்ன புரிந்து கொள்ள முடியும்? ஆனால், அவ்வார்த்தைகளை ஞாபகத்தில் ஏற்றிக் கொண்டு அதைப் பற்றி யோசிக்க ஆரம்பித்தால் பலவிதமான விளக்கங்களை கண்டு பிடிக்கலாம்.
மேலும், ஒரு ஞானியினுடைய திருவாய் மொழி என்றுமே அர்த்தமற்றதாக ஆகாது. அவர்களுடைய சொற்கள் பொருள் பொதிந்தவை, யாரால் அச்சொற்களை எடை போட முடியும்?
முதலில் கவனமுள்ள எண்ணம், பிறகு பேச்சு. இதுவே ஞானிகளின் வழி முறை . பிறகு, அவர்களுடைய சொல் நேர்மையான முறையில் செயலாகவும் மாற்றமடைகிறது.
இந்த சித்தாந்தத்தின் அடைப்படையில் ஞானிகளின் சொல் என்றுமே அர்த்தமில்லாமல் போகாது. ஆழமான தியானம் அச்சொற்களின் முழுப் பரிமாணத்தையும் வெளிப்படுத்தும்.
பாபா லெண்டியிலிருந்து திரும்பி வந்தார். முரசுகளும் கொம்புகளும் ஒலிக்க ஆரம்பித்தன. பாபு சாஹேப் ஜோக் சட்டென்று முலே சாஸ்திரிக்கு யோசனை சொன்னார்,-
"ஹாரதி நேரம் நெருங்கிவிட்டது. நீங்கள் மசூதிக்கு வருகிறீர்களா?" மடி ஆசாரத்தை விடாபிடியாக கடைப் பிடித்த முலே சாஸ்திரி, தம்முடைய தர்மசங்கடமான நிலையை உணர்ந்தார்.
ஆகவே அவர் பதிலுரைத்தார், "நான் அப்புறமாகப் பிற்பகலில் தரிசனம் செய்து கொள்கிறேன்". ஜோக் ஹாரதிக்கு ஏற்பாடு செய்ய ஆரம்பித்தார்.
பாபா திரும்பி வந்து விட்டிருந்தார்; ஆசனத்தில் அமர்துகொண்டு ஜனங்களோடு பேசிகொண்டிருந்தார். ஒவ்வொருவராக தங்கள் பூஜையை முடித்தனர்; ஹாரதி ஆரம்பிப்பதற்கு எல்லாம் தயாராக இருந்தன.
*ஜோக் - P.W.D இலாகாவில் மேற்பார்வையாளராக வேலை பார்த்த இவர், 1909 ஆம் ஆண்டு ஓய்வு பெற்ற பின் மனைவியுடன் ஷீரடியில் குடியேறிவிட்டார். தினமும் பாபாவுக்கு பூஜை செய்து ஹாரதி எடுக்கும் சேவையை செய்தார்.
No comments:
Post a Comment