valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 29 August 2013

ஷிர்டி சாயி சத்சரிதம்

ஜன்மத்தில் செய்த பாவங்களையும் அழிக்குமோ, அவருடைய பெருமையை பாடுவோமாக.

எட்டாவது அத்தியாயத்தில் மனித ஜன்மம் கிடைத்ததன் பயன் என்ன என்பது சொல்லப்பட்டது. ஒன்பதாவது அத்தியாயத்தில் பாபா பிச்சை எடுத்துப் பிழைத்ததன் சூக்குமமான காரணம் சொல்லப் பட்டது.

பாயஜாபாயி மதியத்தில் சோள ரொட்டியும் பாஜியும்  அளித்தது, குசால்சந்தின்  நல்வாழ்வுபற்றி பாபா கொண்ட அக்கறை, தாத்யா , மகால்சாபதி இவர்களுடன் பாபா உறங்கியது பற்றியும்கூட பிரவசனம் செய்யப் பட்டது. பக்தர்கள் கேட்டு மகிழ்ந்தனர்.

கதை கேட்பவர்களே! பாபா எப்படி வாழ்ந்தார், எங்கு உறங்கினார், எவ்வளவு அலட்சியமாக சுற்றி வந்தார் (சூக்கும சரீரப் பயணங்கள்), என்பன சம்பத்தப் பட்ட சரித்திரப் பகுதியை இப்போது சொல்கிறேன்; கவனமாக கேளுங்கள்.

பாபாவினுடைய உலகியல் வாழ்க்கை எவ்வளவு போற்றுதற்குரியது! ஹிந்துக்களுக்கும் முஸ்லீம்களுக்கும் அவர் அன்னை; புலியும் ஆடும் பயமின்றிப் பிரேமையுடன் உலவி வந்த சூழ்நிலையை அளித்த, நம்பிக்கைகுந்த புகலிடம் அவர்.

செவிமடுப்பவர்களே! சாயி எப்படி வாழ்ந்தார்? எங்கு உறங்கினார்? என்பன பற்றியெல்லாம் இப்பொழுது சிரத்தையுடன் கேளுங்கள். பாபா வாழ்க்கை நடத்திய முறை இதுவே!

நான்கு முழம் நீளமும் ஒரு சாண்  அகலமுள்ள ஒரு மரப்பலகை இரண்டு பக்கங்களிலிருந்தும் கந்தைத் துணிகளால பிணைக்கப் பட்டு தூலத்தில் இருந்து ஓர் ஊஞ்சலைப் போல் தொங்கவிடப் பட்டிருந்தது.

அந்தப் பலகையின் மேல் பாபா தூங்கினார். அவருடைய படுக்கையின் தலைமாட்டிலும் கால்மாட்டிலும் அகல் விளக்குகள் எரிந்தன. எப்பொழுது ஏறினார், எப்பொழுது இறங்கினார், என்பது ஒருவருக்கும் தெரியாது.

அப்பலகையின் மேல் அவர் தலையைக் கவிழ்ந்துகொண்டு உட்கார்ந்திருப்பார். அல்லது உறங்கிகொண்டிருப்பார். ஆனால், அவர் எப்பொழுது பலகையின் மேல் ஏறினார், எப்பொழுது இறங்கினார், என்பதை எவரும் பார்த்ததில்லை.

பலகை கந்தல் துணிப்பட்டைகளால் பிணைக்கபட்டிருந்தது; அது எப்படி பாபாவின் பளுவை தாங்கியது ? அஷ்டமஹா சித்திகள் ஒருவரிடம் உறைந்திருந்தால் பலகை எல்லாம் பெயரளவுக்கு தானே !

அணிமா  சித்தியைப் பெற்றவர், கண்ணில் விழும் தூசியலவிலுங்கூட சௌகரியமாக மறைந்து கொள்ளலாம். ஈயினுடைய உருவத்திலோ, எறும்பினுடைய ரூபத்திலோ, புழுவினுள்ளோ  பாபா சுலபமாக சஞ்சாரம் செய்தது இவ்விதமாகவே.

அணிமா சித்தியை அடிமையாகக் கொண்டவருக்கு ஓர் ஈயாக மாறுவதற்கு எவ்வளவு நேரம் ஆகும்? வானத்தில் பறக்க முடிந்தவருக்கு  மரப்பலகை இருந்தால் என்ன, இல்லாவிட்டால் என்ன?


No comments:

Post a Comment