ஷிர்டி சாயி சத்சரிதம்
எவர் சகல உலகங்களின் நன்மைக்காக பாடுபடுகிறாரோ, எவர் பிரம்மதிலேயே சதா லயித்திருக்கிராரோ , அவரைப் பிரேமை நிரம்பிய மனத்தால் எந்நேரமும் நினைத்துக் கொண்டிருப்போமாக!
யாரைப் பற்றிய நினைவே நம்மை ஜனன மரணச் சுழலிலிருந்து விடுவிப்பதற்கு போதுமானதோ, அந்த நினைவே ஆன்மீக பயிற்சிகளில் சிறந்த பயிற்சியாகும். இப்பயிற்சிக்கு ஒரு பைசாவும் செலவு இல்லை.
சொற்பப் பயிற்சியால் பெரும்பலன் அனாயசமாகக் கைக்கு வருகிறது. ஆகவே, உடலுறுப்புகள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கும்போதே சதா இம்முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.
இதர தேவதைகள் அனைத்தும் மாயை; குருவே சாசுவதமான ஒரே தேவன். அவரிடம் விசுவாசம் செலுத்தினால், நம்முடைய தலைஎழுத்தையே மாற்றி விடுவார்.
எங்கே தூய நேர்மையான குரு சேவை இருக்கிறதோ, அங்கே சம்சார பந்தம் நிர்மூலமாகிவிடுகிறது. நியாயம், மீமாம்சை, போன்ற சாஸ்திரங்களைப் படித்துவிட்டு ஒரு தலை முடியை இரண்டாகப் பிளக்கும் விதண்டாவாதங்கள் செய்யவோ புத்திபூர்வமான பயிற்சிகளோ தேவையே இல்லை.
சத்குரு நாவாயைச் செலுத்தும்போது ஆதிபௌதிகம், ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம் ஆகிய இன்னல்களிலிருந்து விசுவாசமுள்ள பக்தர்கள் விடுவிக்கப் படுகிறார்கள்.
கடலைக் கடப்பதற்கு கப்பலின் தளபதியின்மீது விசுவாசம் வைக்க வேண்டும்; அதுபோலவே, சம்சார சாகரத்தைக் கடப்பதற்கு குருவின் மீது விசுவாசம் வைக்க வேண்டும்.
ஐக்கிய பக்தியை அடைந்தவர்களுக்குக் கைத்தலத்தில் இருப்பதை சுலபமாக அறிவது போன்று, குரு பரஞானத்தை அளிக்கிறார். தம்முடைய லீலையால், ஆனந்தத்தை லக்ஷணமாக உடைய மோக்ஷத்தை அளிக்கிறார்.
எந்த சத்குருவின் தரிசனம் ஹிருதயத்தின் முடிச்சுக்களை அவிழ்க்கமுடிய்மோ, புலனடக்கம் கிடைக்கச் செய்யுமோ, முன்ஜன்மங்களில் சேர்த்த பாவமூட்டைகளையும் இந்த
எவர் சகல உலகங்களின் நன்மைக்காக பாடுபடுகிறாரோ, எவர் பிரம்மதிலேயே சதா லயித்திருக்கிராரோ , அவரைப் பிரேமை நிரம்பிய மனத்தால் எந்நேரமும் நினைத்துக் கொண்டிருப்போமாக!
யாரைப் பற்றிய நினைவே நம்மை ஜனன மரணச் சுழலிலிருந்து விடுவிப்பதற்கு போதுமானதோ, அந்த நினைவே ஆன்மீக பயிற்சிகளில் சிறந்த பயிற்சியாகும். இப்பயிற்சிக்கு ஒரு பைசாவும் செலவு இல்லை.
சொற்பப் பயிற்சியால் பெரும்பலன் அனாயசமாகக் கைக்கு வருகிறது. ஆகவே, உடலுறுப்புகள் ஆரோக்கியமாகவும் பலமாகவும் இருக்கும்போதே சதா இம்முயற்சியை மேற்கொள்ளவேண்டும்.
இதர தேவதைகள் அனைத்தும் மாயை; குருவே சாசுவதமான ஒரே தேவன். அவரிடம் விசுவாசம் செலுத்தினால், நம்முடைய தலைஎழுத்தையே மாற்றி விடுவார்.
எங்கே தூய நேர்மையான குரு சேவை இருக்கிறதோ, அங்கே சம்சார பந்தம் நிர்மூலமாகிவிடுகிறது. நியாயம், மீமாம்சை, போன்ற சாஸ்திரங்களைப் படித்துவிட்டு ஒரு தலை முடியை இரண்டாகப் பிளக்கும் விதண்டாவாதங்கள் செய்யவோ புத்திபூர்வமான பயிற்சிகளோ தேவையே இல்லை.
சத்குரு நாவாயைச் செலுத்தும்போது ஆதிபௌதிகம், ஆத்யாத்மிகம், ஆதிதைவிகம் ஆகிய இன்னல்களிலிருந்து விசுவாசமுள்ள பக்தர்கள் விடுவிக்கப் படுகிறார்கள்.
கடலைக் கடப்பதற்கு கப்பலின் தளபதியின்மீது விசுவாசம் வைக்க வேண்டும்; அதுபோலவே, சம்சார சாகரத்தைக் கடப்பதற்கு குருவின் மீது விசுவாசம் வைக்க வேண்டும்.
ஐக்கிய பக்தியை அடைந்தவர்களுக்குக் கைத்தலத்தில் இருப்பதை சுலபமாக அறிவது போன்று, குரு பரஞானத்தை அளிக்கிறார். தம்முடைய லீலையால், ஆனந்தத்தை லக்ஷணமாக உடைய மோக்ஷத்தை அளிக்கிறார்.
எந்த சத்குருவின் தரிசனம் ஹிருதயத்தின் முடிச்சுக்களை அவிழ்க்கமுடிய்மோ, புலனடக்கம் கிடைக்கச் செய்யுமோ, முன்ஜன்மங்களில் சேர்த்த பாவமூட்டைகளையும் இந்த
No comments:
Post a Comment