ஷிர்டி சாயி சத்சரிதம்
மாதவராவ் அப்பொழுது சொன்னார், "பொறுங்கள்! சிறிது ஓய்வெடுங்கள்! இவ்விறைவனுடைய லீலைகள் தனித்தன்மை வாய்ந்தன என்றுதான் உமக்கு நன்கு தெரியுமே!
"இந்த வெற்றிலைபெட்டியை எடுத்துகொள்ளுங்கள்; வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை ஆகிய எல்லாப் பொருள்களும் இதில் இருக்கின்றன. ஒரு தாம்பூலம் தயார் செய்துகொண்டு மெல்லுங்கள். நான் என்னுடைய குல்லாயைப் போட்டுகொண்டு ஒரு கணத்தில் வந்துவிடுகிறேன்.-
"சாயி பாபாவினுடைய லீலைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! ஓ, நான் எத்தனை நிகழ்சிகளைப் பற்றி சொல்லுவேன்? நீங்கள் ஷீரடிக்கு வந்தபிறகு, நாம் நிறையவே பார்க்கவில்லையா?-
"நான் ஒரு படிப்பறிவில்லாத ஒரு பட்டிக்காட்டான்; நீங்கள் எல்லாம் பட்டனவாசிகள். புரியாத புதிரான அவருடைய லீலைகளைப் பற்றி உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்?"
இதைச் சொல்லிக் கொண்டே அவர் வீட்டின் உள்ளே சென்று, தேவதைகளுக்குப் புஷ்பாஞ்சலி செய்துவிட்டுக் குழாயை மாட்டிக்கொண்டு உடனே திரும்பி வந்தார். பிறகு, அவர் உட்கார்ந்து என்னுடன் பேச ஆரம்பித்தார்.
"ஓ! அவருடைய லீலைகள் கற்பனை செய்யமுடியாதவை! அவருடைய சாமர்த்தியமான வழிமுறைகளை எவர், எப்பொழுது புரிந்து கொள்ளபோகிறார்? அவருடைய லீலைகளுக்கு எல்லையே இல்லை. அவர்தான் விளையாட்டை நடத்துகிறார்; ஆயினும் அவர் விளையாட்டில் மாட்டிக்கொள்வதில்லை !-
"ஒருவரைவிட மற்றவர் உயர்ந்த அறிவாளிகளான நீங்கள் எல்லாம் அறிவு ஜீவிகள். கற்பனைக் கெட்டாத பாபாவின் வாழ்கையை பட்டிக் காட்டு மக்களாகிய நாங்கள் எவ்வாறு அறிவோம்?
"அவரே அவருடைய கதையைச் சொல்லாமல், உங்களை என்னிடம் எதற்காக அனுப்புகிறார்? அவருக்கு மாத்திரந்தான் அவருடைய வழிமுறைகள் தெரியும்; அவை மானிடமானவை அல்ல. -
"இத் தருணத்தில் எனக்கு ஒரு நல கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஆகவே நமது நேரத்தை உபயோகமாக செலவழிக்கும் வகையில் ஏதாவது பேசுவோம்.-
"என்னுடைய கண்ணெதிரிலேயே இங்கு நடந்த சம்பவம் ஒன்றை விவரிக்கிறேன். நம்முடைய மனதில் என்ன நிர்த்தாரணம் செய்து கொள்கிறோமோ அதை பாபா நிறைவேற்றி வைப்பார். -
"சில சமயங்களில் பாபா மனிதனை எல்லைவரை இழுத்து விடுகிறார். அவனுடைய பக்திக்கும் பிரேமைக்கும் கடுமையான பரீக்ஷை வைத்து விடுகிறார். அதன்பிறகே அவனுக்கு உபதேசம் அளிக்கிறார்."
உபதேசம் என்கிற வார்த்தை என் காதில் விழுந்தவுடனே என் மனத்துள்ளே ஒரு மின்னல் பாய்ந்தது. உடனே எனக்கு சாடேவின் குரு சரித்திர பாராயண நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்தது.
மாதவராவ் அப்பொழுது சொன்னார், "பொறுங்கள்! சிறிது ஓய்வெடுங்கள்! இவ்விறைவனுடைய லீலைகள் தனித்தன்மை வாய்ந்தன என்றுதான் உமக்கு நன்கு தெரியுமே!
"இந்த வெற்றிலைபெட்டியை எடுத்துகொள்ளுங்கள்; வெற்றிலை, பாக்கு, சுண்ணாம்பு, புகையிலை ஆகிய எல்லாப் பொருள்களும் இதில் இருக்கின்றன. ஒரு தாம்பூலம் தயார் செய்துகொண்டு மெல்லுங்கள். நான் என்னுடைய குல்லாயைப் போட்டுகொண்டு ஒரு கணத்தில் வந்துவிடுகிறேன்.-
"சாயி பாபாவினுடைய லீலைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை! ஓ, நான் எத்தனை நிகழ்சிகளைப் பற்றி சொல்லுவேன்? நீங்கள் ஷீரடிக்கு வந்தபிறகு, நாம் நிறையவே பார்க்கவில்லையா?-
"நான் ஒரு படிப்பறிவில்லாத ஒரு பட்டிக்காட்டான்; நீங்கள் எல்லாம் பட்டனவாசிகள். புரியாத புதிரான அவருடைய லீலைகளைப் பற்றி உங்களுக்கு நான் என்ன சொல்லுவேன்?"
இதைச் சொல்லிக் கொண்டே அவர் வீட்டின் உள்ளே சென்று, தேவதைகளுக்குப் புஷ்பாஞ்சலி செய்துவிட்டுக் குழாயை மாட்டிக்கொண்டு உடனே திரும்பி வந்தார். பிறகு, அவர் உட்கார்ந்து என்னுடன் பேச ஆரம்பித்தார்.
"ஓ! அவருடைய லீலைகள் கற்பனை செய்யமுடியாதவை! அவருடைய சாமர்த்தியமான வழிமுறைகளை எவர், எப்பொழுது புரிந்து கொள்ளபோகிறார்? அவருடைய லீலைகளுக்கு எல்லையே இல்லை. அவர்தான் விளையாட்டை நடத்துகிறார்; ஆயினும் அவர் விளையாட்டில் மாட்டிக்கொள்வதில்லை !-
"ஒருவரைவிட மற்றவர் உயர்ந்த அறிவாளிகளான நீங்கள் எல்லாம் அறிவு ஜீவிகள். கற்பனைக் கெட்டாத பாபாவின் வாழ்கையை பட்டிக் காட்டு மக்களாகிய நாங்கள் எவ்வாறு அறிவோம்?
"அவரே அவருடைய கதையைச் சொல்லாமல், உங்களை என்னிடம் எதற்காக அனுப்புகிறார்? அவருக்கு மாத்திரந்தான் அவருடைய வழிமுறைகள் தெரியும்; அவை மானிடமானவை அல்ல. -
"இத் தருணத்தில் எனக்கு ஒரு நல கதை ஞாபகத்திற்கு வருகிறது. ஆகவே நமது நேரத்தை உபயோகமாக செலவழிக்கும் வகையில் ஏதாவது பேசுவோம்.-
"என்னுடைய கண்ணெதிரிலேயே இங்கு நடந்த சம்பவம் ஒன்றை விவரிக்கிறேன். நம்முடைய மனதில் என்ன நிர்த்தாரணம் செய்து கொள்கிறோமோ அதை பாபா நிறைவேற்றி வைப்பார். -
"சில சமயங்களில் பாபா மனிதனை எல்லைவரை இழுத்து விடுகிறார். அவனுடைய பக்திக்கும் பிரேமைக்கும் கடுமையான பரீக்ஷை வைத்து விடுகிறார். அதன்பிறகே அவனுக்கு உபதேசம் அளிக்கிறார்."
உபதேசம் என்கிற வார்த்தை என் காதில் விழுந்தவுடனே என் மனத்துள்ளே ஒரு மின்னல் பாய்ந்தது. உடனே எனக்கு சாடேவின் குரு சரித்திர பாராயண நிகழ்ச்சி ஞாபகத்திற்கு வந்தது.
No comments:
Post a Comment