valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 12 May 2016

ஷிர்டி சாயி சத்சரிதம்

(ஸ்ரீமத் பகவத் கீதை, ஸ்ரீமத் பாகவதம் இரண்டுமே சம்ஸ்க்ருத மொழியில் வியாச முனிவரால் எழுதப்பட்டவை. ஸ்ரீமத் பகவத் கீதை மகாபாரதத்தில் உத காண்டத்தில் இடம் பெறுகிறது. )

ஆகவே, பாகவத தர்மத்தைக்  கடைபிடிக்கும் வகையில் நானும் தினமும் ஏகநாத பாகவதத்தைப் படித்துக் கொண்டிருந்தேன். ஆனால, அன்று என்னுடைய தினசரி நடைமுறையில் ஒரு தடங்கல் ஏற்பட்டுவிட்டது.

ஒரு கதையைப் பாதி படித்துக் கொண்டிருந்தபோது, சுற்றியிருப்பவர்கள் மசூதிக்குக் கிளம்பிக்கொண்டிருந்ததை கவனித்தேன். போதி படிப்பதைப் பாதியில் நிறுத்திவிட்டு , அவர்களோடு நானும் மசூதிக்கு விரைந்தேன்.

நான் என்னவோ, பாபா சொல்லும் கதைகளைக் கேட்க விருப்பப்பட்டேன்; ஆனால், பாபா வேறு விதமாக நினைத்தார். நான் பாகவதம் படிப்பதை நிறுத்திவிட்டு வேறெதையும் செய்வது பாபாவுக்குப் பிடிக்கவில்லை போலும்!

இக் காரணத்திற்காகவே, நான் அன்று படிக்கவேண்டிய பகுதியை பாபா பூர்த்தி செய்யவைத்தார் என்றே இந்த சம்பவத்தின் மூலம் உணர்ந்தேன். பாபாவினுடைய அற்புதமான வழிமுறைகள் இவ்வாறே! இது ஞாபகத்திற்கு வரும்போது, மனம் பிரேமையால் பொங்கிவழிகிறது.

ஏக நாத பாகவதத்தின் விளக்கம் இங்கு முடிகிறது; சம்பந்தப்பட்ட நிகழ்ச்சிகளும் முடிவடைகின்றன. மாதவராவ் பூஜையை முடித்துவிட்டு வெளியில் வந்தார். நான் சொன்னேன், -

"பாபா உமக்கு ஒரு செய்தி அனுப்பி இருக்கிறார்; அதைச் சொல்லத்தான் நான் வந்திருக்கிறேன். 'சாமாவிடம் இருந்து பதினைந்து ரூபாய் தக்ஷிணை வாங்கிக் கொண்டு வாரும்' என்பது எனக்கிடப் பட்ட ஆணை.-

"நான் அவருடைய பாதங்களை பிடிதுவிட்டுக் கொண்டிருந்தேன். திடீரென்று அவருக்கு உம்முடைய ஞாபகம் வந்தது. 'சாமாவிடம் போம்; தக்ஷிணையுடன் திரும்பி வாரும்' என்று சொன்னார்.

"அவருடன் சிறிது நேரம் அமர்ந்து பெசிகொண்டிரும்; இருவரும் பேசி முடித்தபின் நீர் திரும்பி வாரும்' என்று சொன்னார். "

மாதவராவ் இதைக் கேட்டு மிக ஆச்சரியம் அடைந்து சொன்னார், "பணத்திற்குப் பதிலாக என்னுடைய நமஸ்காரங்களை தட்சிணையாக அளியுங்கள்".

"அதுசரி, உங்களுடைய பதினைந்து நமஸ்காரங்களை என்னுடன் எடுத்துக் கொண்டுவிட்டேன். அது விஷயம் முடிந்து விட்டது! இப்பொழுது சீக்கிரமாக வந்து என்னுடன் உரையாடுங்கள்" என்று நான் அவரிடம் சொன்னேன்.

"என்னென்ன கதை சொல்ல விரும்புகிறீர்களோ அதையெல்லாம் சொல்லி என் காதுகளின் ஏக்கத்தை தணியுங்கள். நிர்மலமானதும் புனிதமானதுமான பாபாவின் கதைகளாகிய கங்கையில் ஆழமாக மூழ்கி நம்முடைய பாவங்கள் அனைத்தயும் ஒழிக்கலாம்".


No comments:

Post a Comment