ஷிர்டி சாயி சத்சரிதம்
இவ்வாறு தாசகணு மக்களிடையே சாயி பக்தியை எழுப்பினார். ஆதமானந்தத்தின் சாகரமான சாயியின் மீது ஜனங்களுக்கு அன்பும் பக்தியும் பெருகும்படி செய்தார்.
பக்தசிரோன்மனியான சாந்தோர்கருக்கும் அவருக்கு இளைத்தவரில்லை. சாயி வழிபாடு பரவியதற்குக் காரணமானவர் அவரே.
சாந்தோர்கரின் தூண்டுதலால்தான் தாசகணு பம்பாய்க்கு வந்து பல இடங்களில் சாயி பஜனையும் கதாகீர்த்தனமும் செய்ய ஆரம்பித்தார்.
புனே, சோலாப்பூர், அஹமத் நகர் ஜில்லாக்களில் வாழ்ந்த மக்கள் ஏற்கனேவே சாயி பாபாவைப் பற்றி அறிந்திருந்தனர். ஆனால், கொங்கன தேசத்தில் சாயிபக்தியைப் பரப்பியவர்கள் அவர்கள் இருவருமே.
இவ்வாறு, பம்பாய் மாகாணத்து மக்களிடையே அவ்விருவர்களுடைய முயற்சிகளால் சாயி வழிபாடு ஆரம்பித்தது. கிருபா மூர்த்தியான சாயி மகாராஜ் அவ்விருவர்களின் மூலமாக பம்பாய்க்கு வந்தார்.
அருள்மிகு கௌபீனேசுவரர் கோயிலில் அன்று நடந்த கதாகீர்த்தனத்தின்போது வெளிப்பட்ட சாயியின் அருல்பற்றிய சொற்பொழிவைக் கேட்ட சோல்கருக்கு மனத்துள் ஓர் எழுச்சி அலை பொங்கியது.
ஹரிகதா கீர்த்தனத்தைக் கேட்பதற்குப் பலர் வந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ருசி; அவற்றைப் பாராட்டும் வகையில் மக்கள் வந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ருசி; அவற்றைப் பாராட்டும் வகையில் மகள் வந்திருந்தனர். சிலர் தாசகணுவின் சாஸ்திர ஞானத்தை ரசித்தனர்; சிலர் அவருடைய பேச்சுத்திறனுடன் கூடிய அங்க அசைவுகளையும் அபிநயத்தையும் மெச்சினர்.
சிலர் அவருடைய அமுத கானத்தைப் பாராட்டினர். "ஓ, அதி உன்னதம்! தாசகணுவின் பாட்டு எவ்வளவு அற்புதமாக இருக்கிறது! விட்டல் நாமத்தில் எப்படி அமிழ்ந்து போகிறார்! கதை சொல்லும்போது பரவசத்தில் எப்படி நடனமாடுகிறார்!"
சிலர் முக்கியமான கதைக்கு முன்னுரையாகச் சொன்ன விஷயங்களை ரசித்தார்கள். சிலர் பிரதமமான கதையை ரசித்தார்கள். சிலர் தாசகணு கதை சொல்லும்போது மற்றவர்களுடைய நடை, உடை, பாவனையைப் போலவே நடித்துக் காட்டும் கேலியை ரசித்தனர்; சிலர் உவமைக் கதைகளையும் உருவகக் கதைகளையும் ரசித்தனர்.
ஹரிதாசர் சம்ஸ்கிருத மொழிவல்லுனராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பதம் பதமாகப் பிரித்து வாக்கியம் வாக்கியமாக அர்த்தம் சொல்லக்கூடிய திறமையுள்ளவராக இருந்தாலும், அல்லது பொழிப்பான கருத்தை மட்டும் எடுத்துச் சொல்வதில் திறமைசாலிகளாக இருந்தாலும், கதை கேட்பவர்களுடைய ஆர்வம் குறையவில்லை.
இப்படி பலவிதமான மனிதர்கள் கதை கேட்கிறார்கள். ஆயினும், கதையைக் கேட்டு இறைவனிடமோ ஞானியிடமோ பக்தியையும் சிரத்தையையும் வளர்த்துக்கொள்ளும் மக்கள் மிகச் சிலரே!
இவ்வாறு தாசகணு மக்களிடையே சாயி பக்தியை எழுப்பினார். ஆதமானந்தத்தின் சாகரமான சாயியின் மீது ஜனங்களுக்கு அன்பும் பக்தியும் பெருகும்படி செய்தார்.
பக்தசிரோன்மனியான சாந்தோர்கருக்கும் அவருக்கு இளைத்தவரில்லை. சாயி வழிபாடு பரவியதற்குக் காரணமானவர் அவரே.
சாந்தோர்கரின் தூண்டுதலால்தான் தாசகணு பம்பாய்க்கு வந்து பல இடங்களில் சாயி பஜனையும் கதாகீர்த்தனமும் செய்ய ஆரம்பித்தார்.
புனே, சோலாப்பூர், அஹமத் நகர் ஜில்லாக்களில் வாழ்ந்த மக்கள் ஏற்கனேவே சாயி பாபாவைப் பற்றி அறிந்திருந்தனர். ஆனால், கொங்கன தேசத்தில் சாயிபக்தியைப் பரப்பியவர்கள் அவர்கள் இருவருமே.
இவ்வாறு, பம்பாய் மாகாணத்து மக்களிடையே அவ்விருவர்களுடைய முயற்சிகளால் சாயி வழிபாடு ஆரம்பித்தது. கிருபா மூர்த்தியான சாயி மகாராஜ் அவ்விருவர்களின் மூலமாக பம்பாய்க்கு வந்தார்.
அருள்மிகு கௌபீனேசுவரர் கோயிலில் அன்று நடந்த கதாகீர்த்தனத்தின்போது வெளிப்பட்ட சாயியின் அருல்பற்றிய சொற்பொழிவைக் கேட்ட சோல்கருக்கு மனத்துள் ஓர் எழுச்சி அலை பொங்கியது.
ஹரிகதா கீர்த்தனத்தைக் கேட்பதற்குப் பலர் வந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ருசி; அவற்றைப் பாராட்டும் வகையில் மக்கள் வந்திருந்தனர். ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு ருசி; அவற்றைப் பாராட்டும் வகையில் மகள் வந்திருந்தனர். சிலர் தாசகணுவின் சாஸ்திர ஞானத்தை ரசித்தனர்; சிலர் அவருடைய பேச்சுத்திறனுடன் கூடிய அங்க அசைவுகளையும் அபிநயத்தையும் மெச்சினர்.
சிலர் அவருடைய அமுத கானத்தைப் பாராட்டினர். "ஓ, அதி உன்னதம்! தாசகணுவின் பாட்டு எவ்வளவு அற்புதமாக இருக்கிறது! விட்டல் நாமத்தில் எப்படி அமிழ்ந்து போகிறார்! கதை சொல்லும்போது பரவசத்தில் எப்படி நடனமாடுகிறார்!"
சிலர் முக்கியமான கதைக்கு முன்னுரையாகச் சொன்ன விஷயங்களை ரசித்தார்கள். சிலர் பிரதமமான கதையை ரசித்தார்கள். சிலர் தாசகணு கதை சொல்லும்போது மற்றவர்களுடைய நடை, உடை, பாவனையைப் போலவே நடித்துக் காட்டும் கேலியை ரசித்தனர்; சிலர் உவமைக் கதைகளையும் உருவகக் கதைகளையும் ரசித்தனர்.
ஹரிதாசர் சம்ஸ்கிருத மொழிவல்லுனராக இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, பதம் பதமாகப் பிரித்து வாக்கியம் வாக்கியமாக அர்த்தம் சொல்லக்கூடிய திறமையுள்ளவராக இருந்தாலும், அல்லது பொழிப்பான கருத்தை மட்டும் எடுத்துச் சொல்வதில் திறமைசாலிகளாக இருந்தாலும், கதை கேட்பவர்களுடைய ஆர்வம் குறையவில்லை.
இப்படி பலவிதமான மனிதர்கள் கதை கேட்கிறார்கள். ஆயினும், கதையைக் கேட்டு இறைவனிடமோ ஞானியிடமோ பக்தியையும் சிரத்தையையும் வளர்த்துக்கொள்ளும் மக்கள் மிகச் சிலரே!
No comments:
Post a Comment