valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 14 May 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

கீர்த்தனைக்காக கிடைக்குமென்று ஒரு பைசாவையும் எதிர்பார்க்கவில்லை. இடுப்பில் வேட்டியைப் பஞ்சமாகக் கட்டிக்கொண்டு, உடலின் மேற்பாகத்தில் ஏதும் அணியாமல், தலைப்பாகையும் இல்லாமல் தாசகனு கதாகீர்த்தனம் செய்வார். ஆயினும் கதை கேட்பதற்கு வரும் கூட்டத்தைச் சமாளிக்க முடியாது.

தாசகனு இவ்வளவு எளிமையாக உடை உடுத்துக் கொண்டு கீர்த்தனம் செய்ததன் பின்னணியை கவனமாகக்  கேட்டால் சிரிப்பு வரும். சாவகாசமாக கேட்டு பாபாவின் செயல்முறைகளை பார்த்து ஆச்சரியம் அடையுங்கள்.

ஒருசமயம் தாசகனு ஷீரடியில் கதாகீர்த்தனம்  செய்வதற்காக நீளமான கோட்டைப் போட்டுகொண்டு, மேலே அங்கவஸ்திரம் அணிந்து, தலைப்பாகையும் கட்டிக்கொண்டு அலங்காரமாக வந்தார்.

நற்பழக்கத்தின் பிரகாரம் பாபாவுக்கு நமஸ்காரம் செய்ய மகிழ்ச்சியுடன் வந்தார். பாபா கூறியது காதில் கேட்டது, "ஆஹா , மணமகனைப் போன்று அலங்காரம் செய்துகொண்டு வந்திருக்கிறீர்!-
"இவ்வளவு அலங்காரத்துடன் எங்கே செல்லப் போகிறீர்?" என்று பாபா வினவினார். தாசகணு , தாம் கதாகீர்த்தனம்  செய்யப் புறப்பட்டுக் கொண்டிருப்பதாகச் சொன்னார்.

பாபா மேலும் வினவினார், "எதற்காக இந்த நீளமான கோட்டு ? எதற்காக இந்த அங்கவஸ்திரமும் தலைப்பாகையும்? எதற்காக இந்தப் பிரயாசையெல்லாம் ? நமக்கு இதெல்லாம் தேவையில்லை!-

" இவை அனைத்தையும் இப்பொழுதே, என் முன்னிலையிலேயே கழற்றிவிடும். இந்தச் சுமையை எதற்காக உமது உடம்பில் மேல் ஏற்றக் கொள்ள விரும்பிகிறீர்?" பாபாவினுடைய  ஆக்ஞைக்கு கீழ்படிந்து, தாசகணு  எல்லா அலங்கார ஆடைகளையும் கழற்றி பாபாவின் பாதங்களில் வைத்துவிட்டார்.

அன்றிலிருந்து இன்றுவரை, தாசகணு  ஆரோக்கியமான உடலின் திறந்த மார்புடனும் கழுத்தில் மாலையுடனும் கையில் சப்பளாக்கட்டையுடனும் கதா கீர்த்தனம் செய்துவருகிறார்.

இந்தப் பாணி தற்காலப் பழக்கத்திற்கு வித்தியாசமாக இருப்பினும், இதற்குத் திடமானதும் தூய்மையானதுமான  ஓர் அஸ்திவாரம் இருக்கிறது. ஞானவிழிப் படைந்தவர்களிலேயே மிகச் சிறந்த நாரத முனிவருடைய பாணியாகும் இது.

இந்தப் பாணி, நாரத முனிவரால் ஆரம்பிக்கப்பட்டது. அவரை மூலமாகக் கொண்டே ஹரிதாசர்களுடைய பரம்பரை வளர்ந்தது. ஆடை அலங்காரங்கள் போன்ற ஆடம்பரங்களால் அவர்கள் உபாதிபடவில்லை; அவர்களுடைய நாட்டமெல்லாம் அந்தரங்க தூய்மையையே நோக்கியது.

இடுப்புக்கு கீழ்தான் உடை, கைகள் வீணையையும்  சப்பலாக்கட்டையையும் ஒலித்துக் கொண்டிருக்கும், வாயோ ஹரி நாமத்தை உரக்கப் பாடிக்கொண்டிருக்கும். நாரதருடைய இந்த உருவத்தை அனைவருமே அறிவரல்லரோ!

சமர்த்த சாயியின் அருளால், தாசகணுவே  ஞானிகளின் வாழ்க்கையைப் பாடல்களாக இயற்றி கீர்த்தனம் செய்தார். கீர்த்தனம் செய்வதை இலவசமாகவே செய்தார்; கீர்த்தனங்களினால்  அவருடைய புகழ் பரவியது.

 

No comments:

Post a Comment