valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 30 April 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

பக்தர்கள் சஹஜமாகப் பரமபிராப்தியை அடைவர். கேட்பவர்கள் பக்தியையும் முக்தியையுமடைவர் . எளிமையும் விசுவாசமுடையவர்கள் சாந்தியையும் சுகத்தையும் அடைவர். எல்லாருமே கடைமுடிவான அடைக்கலத்தை அடைவர்.

குருவினுடைய திருவாய்மொழியாக வெளிப்பட்ட கதைகளைக் கேட்கக் கேட்கப் பிறவிபயம் விலகும். தம்முடைய ஆத்மாவை அறிந்துகொள்ளும் அனுபவத்தால் இதயத்தில் ஆனந்தமடைவர்.

இந்த அத்தியாயத்தில், அன்பார்ந்த பக்தர்கள் எவ்விதமாகப் பிரார்த்தனை செய்கிறார்கள் என்பதையும் சாயி அவர்களுக்கு எவ்விதமாக தரிசனம் தருகிறார் என்பதையும் விவரிக்கிறேன்.

ஒரு பூனை அப்பொழுதுதான் தன்  குட்டிகளுக்குப் பாலூட்டிவிட்டு வெளியே வரலாம். உடனே திரும்பிப்போனாலும், குட்டிகள் அன்புடன் தாயின்மேல் விழுந்து விளையாடி மறுபடியும் பாலுண்ண  முயலும்.

தாய்ப்பூனை தொண்டையில் 'குர்குர்' என உறுமும்; குட்டிகளும் சிறிது நேரம் அடங்கியனபோல் தோன்றும். எனினும், தாய் ஓய்வெடுப்பதைப்  பார்த்தால் போதும்; குட்டிகள் சுற்றிச் ஓடித் தாயிடம் பால் குடிக்க ஆரம்பித்துவிடும்.

குட்டிகள் வேகமாக விழுங்கிப் பாலை உறிஞ்சும்போது, அன்பினால் தாய்ப்பூனையின் முளைக்காம்புகளிளிருந்து பால் பெருகுகிறது. பூனையும், அசதியால் முன்பு உருமியதையெல்லாம்  பிரீதியுடன் தரையில் கால்களை  நீட்டிகொண்டு  படுத்துக் கொள்கிறது.

அசதியெல்லாம்  எங்கோ ஓடி விட்டது; மாறாகத் தாயன்பு முலைகளின் வாயிலாகப் பாய்கிறது. நான்கு கால்களாலும் குட்டிகளை அமுக்கிப் பிடித்துக் கொண்டு அனிச்சை செயலாக அவற்றை நக்குகிறது. தாயன்பிற்கு நிகராக இவ்வுலகில் வேறெதுவும் உண்டோ!

குட்டிகளின் கூரான நகங்கள் தாயினுடைய வயிற்றை  எவ்வளவு ஆழமாக கீறுகின்றனவோ, அவ்வளவு வேகமாகத் தாயன்பு பல தாரைகளாக  பாழாகிப் பெருகுகிறது.

தாயைத் தவிர வேறெதையும் நாடாத குட்டிகளின் உணர்வு, எவ்வாறு மேலும் மேலும் தாய்பூனையினுடைய முலைகளில் பாலின் உற்பத்தியைப் பெருக்குகிறதோ, அவ்வாறே சாயி பாதங்களின்மீது உங்களுக்கிருக்கும் பாசமும் நேசமும் சாயியின் உள்ளத்தை உருகவைத்து விடும்.

ஒருசமயம் தானே நகரத்து மக்கள் கௌபீனேசுவரர் சந்நிதியில் ஹரிபக்தி பாராயண நிகழ்ச்சியாக, கேட்பதற்கு இனிமையான தாசகணுவின் கீர்த்தனத்திற்கு ஏற்பாடு செய்திருந்தனர்.

சான்றோர்களின்  வற்புறுத்தலுக்கு இணங்கி, தாசகணு  கீர்த்தனம் செய்வதற்கு பணிவுடன் ஒப்புக்கொள்வார். ஒரு பைசாவும் எதிர்பார்த்தாரில்லை ; நிர்பந்தம் கீர்த்தனைக்காகக்  கிடைக்குமென்று ஒரு பைசாவையும் எதிர்பார்க்கவில்லை. இடுப்பில் வேட்டியை பஞ்சகச்சமாக கட்டிக்கொண்டு, உடலின் மேற்பாகத்தில் ஏதும் அணியாமல், தலைப்பாகையுமில்லாமல் தாசகணு  கதாகீர்த்தனம்  செய்வார். ஆயினும் கதை கேட்பதற்கு வரும் கூட்டத்தைச் சமாளிக்க முடியாது.

No comments:

Post a Comment