valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 23 April 2015

ஷிர்டி சாயி சத்சரிதம்

15. சோல்கரின்  கற்கண்டு விநியோக நேர்த்தி கடன்

எவருடைய கணக்கற்ற புண்ணியச் செயல்கள் பழுத்துப் பலனளிக்க ஆரம்பித்து விட்டனவோ, அவர்தான் சாயி தரிசனத்திற்கு வரமுடியும். மூன்று விதமான தாபங்களாலும் ஆர் உபாதிப்படுவதில்லை; பரமார்த்த சாதனையில் வெற்றி பெறுவார்.

கேட்பவர்களே, கிருபை செய்யுங்கள்! ஒரு கணம் உம்முடைய குருவை தியானம் செய்துவிட்டு, என்னிடம் முழு கவனம் செலுத்தி காதையை பயபக்தியுடன் கேளுங்கள்.

"ஓ, உம்மை பற்றி தெரியாதா என்ன! ஏன் இந்த வியர்த்தமான முயற்சிகளெல்லாம்?" என்றென்னை அலட்சியப்படுத்தி விடாதீர்கள். என்னை மன்னித்துவிடுங்கள். உக்னலை சமுத்திரத்திற்கு உபமானமகாச் சொல்லலாம்.

சமுத்திரம் நிரம்பியிருந்தாலும் நதியை திருப்பயனுப்பி விடுவதில்லை. மேகங்கள் கனமாகப் பொழிந்து  பெருக்கெடுக்கும் ஆயிரமாயிரம் நீரோட்டங்களை தன்னுள் ஏற்றுகொள்ளவே செய்கிறது.

சத்ஜனங்களாகிய  நீங்களும் அவ்வாறே. உங்களுடைய தீர்த்தத்தில் நான் ஸ்நானம் செய்ய விரும்பிகிறேன். என்னை வெறுத்து ஒதுக்கிவிடாதீர்கள். தீனர்களை  புறக்கணிப்பது நன்றன்று.

கங்கையின் நிர்மலமான ஜலமாக  இருந்தாலும், கிராமத்து ஓடையின் கலங்கிய நீராக இருந்தாலும், இரண்டும் சமத்துவத்தை அடைந்து சங்கமாமகும்போது ஆரவாரம் ஏதுமின்றி கலந்துவிடுகின்றன.

ஆகவே, என்னிடம் கதை கேட்பவர்களே! ஞானிகளின் சரித்திரங்களை கேட்கவேண்டுமென்ற உங்களுடைய பேராவல், என்னுடைய முயற்சியைக் கருணையுடன் ஏற்றுகொண்டால், வெளித்தூண்டுதல் ஏதுமின்றி தானே பலனுள்ளதாகிவிடும்.

இக்கதாமிருதம் சிரத்தையுடனும்  பொறுமையுடனும் மரியாதையுடனும் கேட்கபட்டால், கேட்பவர்கள் பக்திப் பிரேமையை அனுபவிப்பர்; எல்லாப் பேறுகளையும் பெறுவார்.

No comments:

Post a Comment