ஷிர்டி சாய் சத்சரிதம்
நற்செயல்களுக்கும் தீச்செயல்களுக்கும் இறைவனே சூத்ரதாரி. அவனே காப்பவன். அவனே அழிப்பவன். அவன் ஒருவனே செயலாளி.
பாடீல் சாந்தொர்கருக்கு எழுதினார், "எனக்கு மருந்து தின்று தின்று அலுத்துப் போய்விட்டது; வாழ்கையே வெறுத்துவிட்டது. இவ்வுலகமே எனக்கு சோகமயமாகிவிட்டது.
"இந்த வியாதியைக் குணப்படுத்துவது சாத்தியமில்லை என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். வைத்தியர்களுக்கும் ஹகீம்களுக்கும் கூட, மேற்கொண்டு யோசனை ஏதும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை அதலபாதாளத்தில் விழுந்துவிட்டது.
"ஆகவே, நான் ஒரே ஓர் உதவியை வினயத்துடன் கடைசியாக கேட்கிறேன்! என்னுடைய மனதில் இருக்கும் ஒரே பலமான ஆசை உங்களை நிச்சயமாக சந்திக்க வேண்டுமென்பதுதான்."
கடிதத்தை படித்த சாந்தோர்கரின் மனம் சோகத்தில் ஆழ்ந்தது. பீமாஜி பாடீல் ஓர் உயர்ந்த மனிதர் என்று அவருக்குத் தெரிந்திருந்ததால், நானா மனமுருகிப் போனார்.
நானா எழுதினார், "உங்களுடைய கடிதத்திற்கு பதிலெழுதும் வகையில் நான் ஓர் உபாயத்தை பரிந்துரை செய்கிறேன். சாயி பாபாவின் பாதங்களை பற்றிகொள்ளுங்கள்! அவரே நம் அன்னையும் தந்தையும்!-
"அவரே அனைவருக்கும் கருணைமயமான அன்னை; கூவி அழைக்கும்போது ஓடிவந்து அனைத்து கொள்வாள். தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிவாள்.-
"கொடிய குஷ்டரோஹம் அவருடைய தரிசனத்தால் குணமாகிவிடுகிறது எனில், க்ஷய ரோஹாம் என்ன பெரிய பிரச்சினை? எள்ளளவும் சந்தேஹம் வேண்டா; போய் சாயியின் திருவடிகளை கெட்டியாக பற்றிக்கொள்ளுங்கள். -
"யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். இது அவருடைய உறுதிமொழி; இதற்கு கட்டுப் பட்டவர் அவர். ஆகவே, நான் கூறுகிறேன், துரிதமாக சென்று சாயி தரிசனம் செய்யவும்.-
"மரண பயத்தைவிட பெரிய பயம் என்ன இருக்கிறது? சென்று, சாயியின் பாதங்களை பற்றிக் கொள்ளும். அவரால்தான் உங்களுடைய பயத்தை போக்க முடியும். "
பொறுக்க முடியாத அவதியாலும் அந்திமகாலம் நெருங்கிவிட்டதொவென்ற பயத்தாலும் பொறுமையிழந்த பாடீல் நினைத்தார், "நான் எப்பொழுது சாயினாதரை தரிசிப்பேன்? எப்பொழுது எனக்கு காரிய சித்தி ஆகும்?"
பாடீலுடைய படபடப்பு மிக அதிகமாக இருந்தது. "உடனே வேண்டியதையெல்லாம் மூட்டை கட்டுங்கள்; நாளைக்கே கிளம்ப ஆயத்தம் செய்யுங்கள். சீக்கிரமாக ஷிர்டிக்குப் போவோம்".
நற்செயல்களுக்கும் தீச்செயல்களுக்கும் இறைவனே சூத்ரதாரி. அவனே காப்பவன். அவனே அழிப்பவன். அவன் ஒருவனே செயலாளி.
பாடீல் சாந்தொர்கருக்கு எழுதினார், "எனக்கு மருந்து தின்று தின்று அலுத்துப் போய்விட்டது; வாழ்கையே வெறுத்துவிட்டது. இவ்வுலகமே எனக்கு சோகமயமாகிவிட்டது.
"இந்த வியாதியைக் குணப்படுத்துவது சாத்தியமில்லை என்று டாக்டர்கள் கைவிரித்துவிட்டனர். வைத்தியர்களுக்கும் ஹகீம்களுக்கும் கூட, மேற்கொண்டு யோசனை ஏதும் தெரியவில்லை. என்னைப் பொறுத்தவரை நம்பிக்கை அதலபாதாளத்தில் விழுந்துவிட்டது.
"ஆகவே, நான் ஒரே ஓர் உதவியை வினயத்துடன் கடைசியாக கேட்கிறேன்! என்னுடைய மனதில் இருக்கும் ஒரே பலமான ஆசை உங்களை நிச்சயமாக சந்திக்க வேண்டுமென்பதுதான்."
கடிதத்தை படித்த சாந்தோர்கரின் மனம் சோகத்தில் ஆழ்ந்தது. பீமாஜி பாடீல் ஓர் உயர்ந்த மனிதர் என்று அவருக்குத் தெரிந்திருந்ததால், நானா மனமுருகிப் போனார்.
நானா எழுதினார், "உங்களுடைய கடிதத்திற்கு பதிலெழுதும் வகையில் நான் ஓர் உபாயத்தை பரிந்துரை செய்கிறேன். சாயி பாபாவின் பாதங்களை பற்றிகொள்ளுங்கள்! அவரே நம் அன்னையும் தந்தையும்!-
"அவரே அனைவருக்கும் கருணைமயமான அன்னை; கூவி அழைக்கும்போது ஓடிவந்து அனைத்து கொள்வாள். தன்னுடைய குழந்தைக்கு என்ன தேவை என்பதை அறிவாள்.-
"கொடிய குஷ்டரோஹம் அவருடைய தரிசனத்தால் குணமாகிவிடுகிறது எனில், க்ஷய ரோஹாம் என்ன பெரிய பிரச்சினை? எள்ளளவும் சந்தேஹம் வேண்டா; போய் சாயியின் திருவடிகளை கெட்டியாக பற்றிக்கொள்ளுங்கள். -
"யார் எதைக் கேட்டாலும் அதை அவருக்குக் கொடுத்துவிடுகிறார். இது அவருடைய உறுதிமொழி; இதற்கு கட்டுப் பட்டவர் அவர். ஆகவே, நான் கூறுகிறேன், துரிதமாக சென்று சாயி தரிசனம் செய்யவும்.-
"மரண பயத்தைவிட பெரிய பயம் என்ன இருக்கிறது? சென்று, சாயியின் பாதங்களை பற்றிக் கொள்ளும். அவரால்தான் உங்களுடைய பயத்தை போக்க முடியும். "
பொறுக்க முடியாத அவதியாலும் அந்திமகாலம் நெருங்கிவிட்டதொவென்ற பயத்தாலும் பொறுமையிழந்த பாடீல் நினைத்தார், "நான் எப்பொழுது சாயினாதரை தரிசிப்பேன்? எப்பொழுது எனக்கு காரிய சித்தி ஆகும்?"
பாடீலுடைய படபடப்பு மிக அதிகமாக இருந்தது. "உடனே வேண்டியதையெல்லாம் மூட்டை கட்டுங்கள்; நாளைக்கே கிளம்ப ஆயத்தம் செய்யுங்கள். சீக்கிரமாக ஷிர்டிக்குப் போவோம்".
No comments:
Post a Comment