ஷிர்டி சாயி சத் சரிதம்
பாடீல் மனமுடைந்து போனார். உயிர் நாள் கணக்கில்தான் தாங்கும் போலிருந்தது. நாளுக்கு நாள் இத்தேய்வு அதிகமாகியது. பல நாள்கள் இவ்வாறு கடந்தன.
குல தேவதைக்கும் ஆராதனைகள் செய்து பார்த்தார். பயனில்லை. குல தேவதை நால்லாரோக்கியத்தை மீட்டு தரவில்லை. ஜோதிடர்களையும் மந்திரவாதிகளையும் ஆலோசனைகள் கேட்டு கேட்டு அலுத்துப் போனார்.
சிலர் கூறினர். "இது என்ன அங்கொரஹம்! இவ்வளவு இன்னலை தரும் விதிதான் என்னே! ஓ, மானிட எத்தனம் அனைத்தும் வீண் போல இருக்கிறதே!"
டாக்டர்கள் முயன்று பார்த்தனர் ; ஹகீம்கள் (யுனானி மருத்துவர்கள்)அழைக்கப் பட்டனர். பீமாஜிக்கும் வைத்தியம் செய்தவதில் மேற்கொண்டு செய்வதென்ன என்று தெரியாது விழித்தனர். யாராலும் ஒன்றும் செய்ய முடியவில்லை; முயற்சிகள் அனைத்தும் வீணாயின.
பாடீல் தளர்ச்சியுற்று நம்பிக்கை இழந்தவராக தமக்குள்ளேயே பேசிக் கொண்டார். "ஓ பகவானே! நான் என்ன குற்றம் செய்தேன்? ஏன் எல்லா முயற்சிகளும் தோல்வியைத் தழுவி விட்டன? இம்மாதிரி இன்னல் படுவதற்கு எத்தகைய கொடிய பாவம் செய்திருக்க வேண்டும்? "
இறைவனின் லக்ஷணம் (சிறப்பியல்பு) எவ்வளவு விநோதமானது! சந்தோஷமாக இருப்பவரால் ஒரு கணம் கூட அவர் நினைக்கப் படுவதில்லை. அவருடைய லீலை ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டது.
அவர் வேண்டும்போது வரிசையாக இன்னல்களை தந்து மனிதனை தம்மை ஞாபகப் படுத்திகொள்ளும்படி செய்து, துயரத்தில், "ஓ நாராயாண! என்னைக் காப்பாற்றும்" என்று கதறும்படி செய்கிறார்.
துயரத்தில் பீமாஜி பாடீல் கதறியதை கேட்டவுடனே இறைவன் கருணை புரிந்தார். பீமாஜிக்கு திடீரென்று நானாவுக்கு (நானா சாஹேப் சந்தோர்கருக்கு ) கடிதம் எழுதவேண்டும் என்ற எண்ணம் எழுந்தது.
'மற்றவர்களால் சாதிக்க முடியாததை நானவால் சாதிகக் முடியும். பாடீல் வைத்த நம்பிக்கை அவ்வளவு உயர்வானதாக இருந்தது.'
இதுவே, பாடீலுக்கு ஒரு சுப சகுனமாகவும் அவருடைய வியாதி நிவாரணத்தின் ஆரம்பமாகவும் ஆகியது! அவர் நானாவுக்கு ஒரு விபரமான கடிதம் எழுதினார்.
நானா சாஹேபை பற்றி அந்த நேரத்தில் வந்த நினைவு சாயி நாதரின் உந்துதலே அன்றி வேறொன்றுமில்லை. அதுவே அவரது வியாதி நிவாரணத்தின் உத்பவம் (உற்பத்தி) ஆயிற்று. ஞானிகளின் செயல் முறைகள் அற்புதமானவை!
கால சக்கரத்தின் சுழற்சியிலும் கூட இறைவனின் திட்டம் இருக்கும் போல தெரிகிறது. ஆகவே, வேறு விதமான கற்பனைகள் செய்து கொண்டு வீண் பெருமை பேச வேண்டாம்.
No comments:
Post a Comment