valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 18 September 2014

ஷிர்டி சாயி சத்சரிதம்

இவ்வாறு திட நிச்சயமாக பிரமாணம் செய்துகொண்ட பாடீல், எல்லாரிடமும் விடை பெற்றுக் கொண்டு சாயி தரிசனத்திற்காக ஷீரடிக்கு பயணமானார். 

தம்முடைய உறவினர்களை அழைத்துக் கொண்டு, எப்படி ஷீரடிக்கு போய்ச் சேர்வது எனும் சஞ்சலமும் எதிர்பார்ப்பும் நிரம்பிய மனதுடன் பீமாஜி ஷீரடிக்கு கிளம்பினார். 

பாடீலுடைய வண்டி மசூதிக்கருகில்   இருந்த சவுக்குதிற்கு வந்து, பிறகு மசூதியின் வாயிலுக்கு வந்து சேர்ந்தது. நான்கு பேர்கள் பீமாஜியை கைகளால் தூக்கிக் கொண்டு வந்தனர். 

நானா சாஹேபும் அவருடன் வந்தார். எல்லாருக்கும் சுலபமாக தரிசனம் செய்து வைக்கும் மாதவராவும் ஏற்கனேவே அங்கு வந்திருந்தார்!

பாடீலை பார்த்துவிட்டு பாபா சாமாவிடம் கேட்டார், "சாமா, இன்னும் எதனை திருடர்களை என் தலையில் கட்டப் போகிறாய்? என்ன, நீ செய்வது நியாயமா?"

பீமாஜி சாயிபாதத்தில் சிரம் வைத்து வணங்கிக் கூறினார், "சாயிநாதா, இந்த அனாதைக்குக் கிருபை செய்யுங்கள்! தீனநாதா, என்னைக் காப்பாற்றுங்கள்!"

பாடீலுனுடைய துன்பத்தைப் பார்த்த சாய்நாத் பரிதாபப் பட்டார். அந்நேரத்திலேயே பாடீல் தம்முடைய துன்பத்திற்கு ஒரு முடிவு வந்து விட்டதை உணர்ந்தார். 

பீமாஜியினுடைய பரிதாபகரமான நிலையில் பார்த்த கருணா சாகரமான சமர்த சாயி மனம் நெகிழ்ந்து முகத்தில் புன்னகை தவழக் கூறினார், -

"கவலையை விட்டொழியும்; உறுதியுடன் இரும்; சிந்தனையாளர்கள் துக்கப் படுவதில்லை. ஷீரடியில் நீர் கால் வைத்த அக்கணமே உம்முடைய வியாதியையும் வலியையும் நிர்மூலமாக்கிவிடுவான். அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மைப் பாதுகாப்பான்--

"நீர் தடங்கல்கள் எனும் கடலில் கழுத்துவரை மூழ்கி இருக்கலாம். துக்கமும் வேதனையுமாகிய படுகுழியில் ஆழமாக அமிழ்ந்து போயிருக்கலாம்; ஆனால், யார் இந்த மசூதிமாயியின் படிகளில் ஏறு கிறாரோ, அவர் சுகத்தின் மீது சவாரி செய்வார் என்று அறிந்துகொள்ளும். -

"இவ்விடத்தில் இருக்கும் பக்கீர் மகா தயாளன்; உம்முடைய வியாதியையும் வலியையும் நிர்மூலமாகிவிடுவான். அனைவரின் மீதும் கருணை கொண்ட இந்தப் பக்கீர் அன்புடன் உம்மைப் பாதுகாப்பான்-  

"ஆகவே, நீர் அமைதி கொள்ளும்; பீமாபாயின் வீட்டில் தங்கும்; போய் வாரும்; இரண்டொரு நாள்களில் உமக்கு நிவாரணம் கிடைக்கும்".

ஆயுள் முடிந்துபோன ஒருவனுக்கு திடீர் அதிருஷ்டத்தால் அமுதமழை பெய்து புத்துயிர் கிடைத்தது போன்ற உணர்வு பாடீலுக்கு ஏற்பட்டது. 

சாயியின் திருமுகத்திலிருந்து வெளிவந்த இவ்வார்த்தைகளைக் கேட்ட பாடீல், மரணப் படுக்கையில் இருப்பவன் அமிருதபானத்தாலும், தாஹத்தால் நெஞ்சுலர்ந்து போனவன் நீர் கிடைத்தாலும், எவ்வளவு திருப்தியும் சந்தோஷமும் அடைவார்களோ, அவ்வளவு திருப்தியையும் சந்தோஷத்தையும் அடைந்தார்.   


No comments:

Post a Comment