ஷீர்டி சாயி சத்சரிதம்
அதை பண்டிதர்களின் முன்பு வைத்தார். ஆஹா, ஊஹூ என்று விவாதம் நடந்தது. ஆயினும் சந்தேகத்தை யாராலும் நிவிர்த்தி செய்ய முடியவில்லை.
இதன் நடுவே தாசகணு ஏதோ வேலையாக ஷீர்டி செல்ல நேர்ந்தது. அவருடைய சந்தேகம் சுலபமாக நிவாரணமடைந்தது.
அவர் சாயி தரிசனம் செய்யச் சென்றார்; பாபாவின் பாதங்களில் நெற்றியை வைத்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்; மனமகிழ்ச்சி அடைந்தார்.
ஞானிகளின் கிருபை கனிந்த பார்வை, திருவாய்மொழி, மலர்ந்த முகம் - இவையே பக்தகோடிகளுக்கு சகல மங்களங்களையும் கொண்டுவரும்.
தரிசனமாத்திரத்திலேயே சகல தோஷங்களும் அழியும். அவ்வாறிருக்க, ஞானிகளுடைய சந்நிதியிலேயே இருப்பவர்களின் புண்ணியத்தை யாரால் வர்ணிக்க முடியும்?
"ஓ, தாசகணுவா! எங்கிருந்து திடீரென்று வந்தீர்? சௌக்கியமாக இருக்கிறீரா? எப்பொழுதும் திருப்தியுடனும் மனமகிழ்ச்சியுடனும் இருக்கீறீரா?" என்று பாபா குசலம் விசாரித்தார்.
தாஸ்கணு பதிலுரைத்தார், "உங்களுடைய கிருபையென்னும் குடையின்கீழ் வாழும்எனக்கு என்ன குறை இருக்க முடியும்? ஆனந்தம் நிரம்பியவனாக இருக்கிறேன்.-
"ஆயினும் உங்களுக்கு அனைத்தும் தெரிந்திருந்தும், உலகியல் உபசாரத்திற்காக இக் கேள்விகளை கேட்கிறீர், நீங்கள் ஏன் குசலம் விசாரிக்கிறீர்கள் என்று என் மனதுக்கும் தெரிந்திருக்கிறது-
"நீங்களே என்னை ஒரு வேலையை ஆரம்பிக்க வைக்கிறீர்கள். வேலை ஓர் அளவிற்க்கு உருவெடுக்கும்போது திடீரென்று ஒரு தடங்கலை ஏற்படுத்துகிறீர்கள். யார், எவ்வளவு முயன்றாலும் தடங்கலை விலக்க முடியவில்லை!"
இவ்வாறாக சம்பாஷணை தொடர்ந்தது. தாசகணு பாபாவின் பாதங்களை பிடித்து விட்டுக்கொண்டே மெதுவாக, 'ஈசாவாஸ்ய பாவார்த்த போதினி' சம்பந்தப்பட்ட கேள்வியைக் கேட்டார்.
"பாபா, ஈசாவாஸ்ய பாவார்த்த போதினியை நான் உட்கார்ந்து எழுதத் தொடங்கும்போது, என்னுடைய எழுதுகோல் ஸந்தேஹங்களாலும் குழப்பங்களாலும் தடைபடுகிறது. பாபா, என்னுடைய சந்தேகங்களுக்கு விளக்கமளியுங்கள் !"
பிறகு, என்ன நடந்ததென்பதை தாசகணு பாபாவுக்கு விவரமாக பயபக்தியுடன் விளக்கினார். நிவாரணமடையாத தம்முடைய சந்தேத்தையும் பாபாவின் பாதங்களில் வைத்தார்.
தாஸ்கணு சாயிநாதரை கெஞ்சினார், " பாபா, நான் இந்நூலை எழுத எடுத்த முயற்சிகளெல்லாம் வீணாகப் போய்க்கொண்டிருக்கின்றன. என்னுடைய ஈசாவாஸ்ய கதை உட்பட சகலமும் நீங்கள் அறிந்ததே.-
"இந்த சந்தேகம் நிவிர்த்தியாகாவிட்டால் இந்த கிரந்தத்தின் (நூலின்) சூக்குமமான அர்த்தம் விளங்காது". மஹராஜ் அவரை ஆசீர்வதித்தார், "நீர் பிரசன்னமான (மலர்ந்த) மனமுடையவராக இரும்"-
அதை பண்டிதர்களின் முன்பு வைத்தார். ஆஹா, ஊஹூ என்று விவாதம் நடந்தது. ஆயினும் சந்தேகத்தை யாராலும் நிவிர்த்தி செய்ய முடியவில்லை.
இதன் நடுவே தாசகணு ஏதோ வேலையாக ஷீர்டி செல்ல நேர்ந்தது. அவருடைய சந்தேகம் சுலபமாக நிவாரணமடைந்தது.
அவர் சாயி தரிசனம் செய்யச் சென்றார்; பாபாவின் பாதங்களில் நெற்றியை வைத்து சாஷ்டாங்கமாக நமஸ்காரம் செய்தார்; மனமகிழ்ச்சி அடைந்தார்.
ஞானிகளின் கிருபை கனிந்த பார்வை, திருவாய்மொழி, மலர்ந்த முகம் - இவையே பக்தகோடிகளுக்கு சகல மங்களங்களையும் கொண்டுவரும்.
தரிசனமாத்திரத்திலேயே சகல தோஷங்களும் அழியும். அவ்வாறிருக்க, ஞானிகளுடைய சந்நிதியிலேயே இருப்பவர்களின் புண்ணியத்தை யாரால் வர்ணிக்க முடியும்?
"ஓ, தாசகணுவா! எங்கிருந்து திடீரென்று வந்தீர்? சௌக்கியமாக இருக்கிறீரா? எப்பொழுதும் திருப்தியுடனும் மனமகிழ்ச்சியுடனும் இருக்கீறீரா?" என்று பாபா குசலம் விசாரித்தார்.
தாஸ்கணு பதிலுரைத்தார், "உங்களுடைய கிருபையென்னும் குடையின்கீழ் வாழும்எனக்கு என்ன குறை இருக்க முடியும்? ஆனந்தம் நிரம்பியவனாக இருக்கிறேன்.-
"ஆயினும் உங்களுக்கு அனைத்தும் தெரிந்திருந்தும், உலகியல் உபசாரத்திற்காக இக் கேள்விகளை கேட்கிறீர், நீங்கள் ஏன் குசலம் விசாரிக்கிறீர்கள் என்று என் மனதுக்கும் தெரிந்திருக்கிறது-
"நீங்களே என்னை ஒரு வேலையை ஆரம்பிக்க வைக்கிறீர்கள். வேலை ஓர் அளவிற்க்கு உருவெடுக்கும்போது திடீரென்று ஒரு தடங்கலை ஏற்படுத்துகிறீர்கள். யார், எவ்வளவு முயன்றாலும் தடங்கலை விலக்க முடியவில்லை!"
இவ்வாறாக சம்பாஷணை தொடர்ந்தது. தாசகணு பாபாவின் பாதங்களை பிடித்து விட்டுக்கொண்டே மெதுவாக, 'ஈசாவாஸ்ய பாவார்த்த போதினி' சம்பந்தப்பட்ட கேள்வியைக் கேட்டார்.
"பாபா, ஈசாவாஸ்ய பாவார்த்த போதினியை நான் உட்கார்ந்து எழுதத் தொடங்கும்போது, என்னுடைய எழுதுகோல் ஸந்தேஹங்களாலும் குழப்பங்களாலும் தடைபடுகிறது. பாபா, என்னுடைய சந்தேகங்களுக்கு விளக்கமளியுங்கள் !"
பிறகு, என்ன நடந்ததென்பதை தாசகணு பாபாவுக்கு விவரமாக பயபக்தியுடன் விளக்கினார். நிவாரணமடையாத தம்முடைய சந்தேத்தையும் பாபாவின் பாதங்களில் வைத்தார்.
தாஸ்கணு சாயிநாதரை கெஞ்சினார், " பாபா, நான் இந்நூலை எழுத எடுத்த முயற்சிகளெல்லாம் வீணாகப் போய்க்கொண்டிருக்கின்றன. என்னுடைய ஈசாவாஸ்ய கதை உட்பட சகலமும் நீங்கள் அறிந்ததே.-
"இந்த சந்தேகம் நிவிர்த்தியாகாவிட்டால் இந்த கிரந்தத்தின் (நூலின்) சூக்குமமான அர்த்தம் விளங்காது". மஹராஜ் அவரை ஆசீர்வதித்தார், "நீர் பிரசன்னமான (மலர்ந்த) மனமுடையவராக இரும்"-
No comments:
Post a Comment