ஷிர்டி சாயி சத்சரிதம்
"ஏற்கனெவே அம் மூதாட்டி உலர்ந்துபோன கட்டையைபோல் இருக்கிறார். பிடிவாதியாகவும் அட வாதியாகவும் முரடாகவும் இருக்கிறார். உபவாசம் தொடர்ந்ததால் உயிர் போய்விடும்போலத் தோன்றுகிறது. -
"அவ்வாறு நேர்ந்துவிட்டால், 'அந்த மூதாட்டி உபதேசம் பெறவேண்டுமென்ற தீவிர ஆவலுடன் பாபாவை தரிசனம் செய்யச் சென்றார்; ஆனால், சாயி கருணை காட்டாமல் அவரை இறந்துபோகும்படி விட்டுவிட்டார்" என்று மக்கள் பேசுவர். -
"பாபா! மக்கள் இவ்வாறாக அவதூறு பேசும்படி விட்டுவிடாதீர்கள். ஏன் அவருக்கு நீங்கள் பயனளிக்கும்படியான உபதேசம் அளிக்கமாட்டேன் என்கிறீர்? அவதூறு வாராதவாறு செய்துவிடுங்கள்.-
"அவருக்கு போராடத் திராணியில்லாமல் போய்விட்டது. துன்பப்பட்டே இறந்து போகப் போகிறார் அம்மூதாட்டி. உங்களுக்குக் கெட்ட பெயர் வரும். -
"அவருடைய தொல்லைப் பிடித்த உபவாசம் எங்களுக்கெல்லாம் கவலையைத் தருகிறது. துரதிருஷ்டவசமாக, அம்மூதாட்டி இறந்துபோனால் பெரிய அசம்பாவிதம் விளையும். -
"நீங்கள் கிருபை செய்யவில்லையெனில் உயிரை விட்டுவிட்டதாக அம மூதாட்டி அடம் பிடிக்கிறார். அவர் ஒன்றும் தேறுவார் என்று எனக்குத் தோன்றவில்லை ! நீங்களே அவருக்கு ஏதாவது சொல்லுங்கள்!"
இந்த அத்தியாயத்தின் எல்லைக்கு இங்கு வந்துவிட்டோம். கேட்பவர்களுக்கு மேற்கொண்டு என்ன நிகழ்ந்தது என்று அறிந்துகொள்வதில் இருக்கும் ஆவல், பிரேமை பொங்கும் அடுத்த அத்தியாயத்தில் நிறைவரும்.
பாபா அம் மூதாட்டிக்கு அளித்த பிரேமை மிகுந்த உபதேசமும் பரிந்துரையும் பயபக்தியுடன் செவிமடுக்கப்பட்டால், அஞ்ஞானமனைத்தையும் போக்கிவிடும்.
ஹெமாத் சாயியின் பொற்கமல பாதங்களில் சரணமடைகின்றேன். கதை கேட்பவர்களுக்கு நமஸ்காரம் செய்கிறேன். சம்சார சாகரத்தை எளிதாகக் கடக்கும் திறமையைப் பெரும் வகையாக இக் காதைகளை பயபக்தியுடன் கவனமாகச் செவிமடுக்க வேண்டுமென்று கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹெமாத் பந்தால் இயற்றப்பட்ட, "ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்" என்னும் காவியத்தில், 'எனக்கு அனுக்கிரஹம்' என்னும் பதினெட்டாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத்குரு சாயினாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
No comments:
Post a Comment