ஷீர்டி சாயி சத்சரிதம்
அந்த ஒரு ரூபாய் நாணயத்திற்காக வாமன்ராவ் அவசரமாகச் சென்று, பல இடங்களிலிருந்து பீராய்ந்துகொண்டுவந்து ரூ.25 /- ஐ பாபாவிடம் கொடுத்தார்.
"மூட்டை மூட்டையாக ரூபாயைக் கொண்டுவந்தாலும் இதற்கு ஈடாகாது. அவற்றினுடைய மதிப்பு இந்த நாணயத்தின் மதிப்பைவிடக் கம்மியே" என்று சொல்லிக்கொண்டே பாபா ரூ.25 /- ஐயும் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.
சாமாவை நோக்கி அவர் சொன்னார், "சாமா இதை நீ எடுத்துக்கொள். இது உன்னுடைய சேகரிப்பில் இருக்கட்டும். பூஜையறையில் வைத்து தினமும் வழிபடு".
அந்த சயமயத்தில், "ஏன் இவ்வாறு செய்கிறீர்?" என்று கேள்வி கேட்பதற்கு யாருக்கு தைரியம் இருந்தது? ஏனெனில், செய்யத் தக்கது எது, செய்யத் தகாதது எது என்பது சாயிக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது அன்றோ?
ஆகவே, இந்த அத்தியாயத்தை முடித்து, கேட்பவர்களுடைய மனத்திற்குச் சற்று நேரம் ஓய்வளிப்போம். இந்தக் கதைகளைத் திரும்பத் திரும்ப மனத்தில் ஓடவிட்டு சாரம் வாங்கட்டும்.
கேள்வியைச் சிந்தனை தொடராவிட்டால், கேட்டதைக் கிரகிக்க முடியாது. மேலும், கேட்டதைப் பற்றிச் சிந்தித்து தியானம் செய்யாவிட்டால், கேள்வி பயனின்றிப் போகும்.
ஹேமாட் சாயியிடம் சரணடைகிறேன். எல்லா சாதனங்களுக்கும் (உபாயங்களுக்கும்) மூலஸ்தானமான சாயி பாதங்களில் தலை சாய்க்கிறேன். மேற்கொண்டு சொல்லப்போவது, தன் வழியைத் தானே வகுத்துக்கொள்ளும்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'கனவுகள் என்னும் இருபத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
அந்த ஒரு ரூபாய் நாணயத்திற்காக வாமன்ராவ் அவசரமாகச் சென்று, பல இடங்களிலிருந்து பீராய்ந்துகொண்டுவந்து ரூ.25 /- ஐ பாபாவிடம் கொடுத்தார்.
"மூட்டை மூட்டையாக ரூபாயைக் கொண்டுவந்தாலும் இதற்கு ஈடாகாது. அவற்றினுடைய மதிப்பு இந்த நாணயத்தின் மதிப்பைவிடக் கம்மியே" என்று சொல்லிக்கொண்டே பாபா ரூ.25 /- ஐயும் பாக்கெட்டில் போட்டுக்கொண்டார்.
சாமாவை நோக்கி அவர் சொன்னார், "சாமா இதை நீ எடுத்துக்கொள். இது உன்னுடைய சேகரிப்பில் இருக்கட்டும். பூஜையறையில் வைத்து தினமும் வழிபடு".
அந்த சயமயத்தில், "ஏன் இவ்வாறு செய்கிறீர்?" என்று கேள்வி கேட்பதற்கு யாருக்கு தைரியம் இருந்தது? ஏனெனில், செய்யத் தக்கது எது, செய்யத் தகாதது எது என்பது சாயிக்கு நிச்சயமாகத் தெரிந்திருந்தது அன்றோ?
ஆகவே, இந்த அத்தியாயத்தை முடித்து, கேட்பவர்களுடைய மனத்திற்குச் சற்று நேரம் ஓய்வளிப்போம். இந்தக் கதைகளைத் திரும்பத் திரும்ப மனத்தில் ஓடவிட்டு சாரம் வாங்கட்டும்.
கேள்வியைச் சிந்தனை தொடராவிட்டால், கேட்டதைக் கிரகிக்க முடியாது. மேலும், கேட்டதைப் பற்றிச் சிந்தித்து தியானம் செய்யாவிட்டால், கேள்வி பயனின்றிப் போகும்.
ஹேமாட் சாயியிடம் சரணடைகிறேன். எல்லா சாதனங்களுக்கும் (உபாயங்களுக்கும்) மூலஸ்தானமான சாயி பாதங்களில் தலை சாய்க்கிறேன். மேற்கொண்டு சொல்லப்போவது, தன் வழியைத் தானே வகுத்துக்கொள்ளும்.
எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'கனவுகள் என்னும் இருபத்தொன்பதாவது அத்தியாயம் முற்றும்.
ஸ்ரீ சத்குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.
சுபம் உண்டாகட்டும்.
No comments:
Post a Comment