ஷீர்டி சாயி சத்சரிதம்
அதைப்பற்றிச் சிறிது நேரம் யோசித்த மூதாட்டிக்கு திடீரென்று ஞாபகம் வந்தது. மூதாட்டி பிதலேவிடம் கூறினார், "ஆ, இப்பொழுது ஞாபகம் வந்துவிட்டது. பாபா சொன்னது சாத்தியமே!-
"இப்பொழுது நீ உன் புதல்வனை பாபாதரிசனம் செய்வதற்காக ஷிர்டிக்கு அழைத்துக்கொண்டு சென்றாய். இதுபோலவே, நீ சிறுவனாக இருந்தபொழுது, உன் தகப்பனாரும் உன்னை அக்கல்கோட்டிற்கு அழைத்துச் சென்றார். -
"அக்கல்கோட் மஹராஜ் ஒரு சித்தர்; பரோபகாரி; அந்தரஞானி; அறிவொளி படைத்த யோகி; மிகப் பிரசித்தமானவர். உன் தகப்பனாரும் தூயவர்; நல்லலொழுக்கம் மிகுந்தவர். -
"உன் பிதா செய்த பூஜையைக் கண்டு மகிழ்ந்த யோகிராஜா, பிரசாதமாக இரண்டு ரூபாய்களை (நாணயங்கள்) அளித்து அவற்றைப் பூஜித்துவரச் சொன்னார். -
"ஏற்கெனவே கொடுக்கப்பட்ட அந்த இரண்டு ரூபாய்களுங்கூட, பிரசாதமாகவும் நித்திய பூஜைக்காகவுமே அக்கல்கோட் சுவாமியால் கொடுக்கப்பட்டன. -
"அந்த இரண்டு ரூபாய்கள் இல்லத்து வழிபாட்டு விக்கிரங்களுடன் வைக்கப்பட்டு நியம நிஷ்டையுடன் பூஜிக்கப்பட்டன. -
"இது விஷயமாக உன் தந்தைக்கிருந்த பக்தியும் சிரத்தையும் எனக்கு மட்டுமே தெரியும். இந்த நம்பிக்கைதான் அவருக்கு அன்றாட நடவடிக்கைகளில் வழிகாட்டியது. அவருக்கு பிறகு, பூஜை சாமான்கள் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களாகிவிட்டன. -
"கடவுள் நம்பிக்கை தேய்ந்துபோய், பூஜை செய்வதென்பது கூச்சப்படும் செயலாகிவிட்டது. குழந்தைகள் பூஜை செய்ய ஏவப்பட்டனர். அந்நிலையில் , ரூபாய் நாணயங்கள் இரண்டைப் பற்றி யாருக்கென்ன கவலை ?-
"பல வருடங்கள் இவ்வாறு உருண்டோடின. ரூபாய் நாணயங்கள் அலட்சியம் செய்யப்பட்டன. காலப்போக்கில் அவற்றைப் பற்றிய நினைவே அழிந்து போயிற்று. இவ்விதமாக அந்த ரூபாய் நாணயங்கள் இரண்டும் தொலைந்துபோயின.-
"இருந்தபோதிலும் உன்னுடைய பாக்கியம் பெரிது. நீ சாயி ரூபத்தில் அக்கல்கோட் மஹாராஜையே சந்தித்திருக்கிறாய். பல்லாண்டுகளாக மறந்துபோன விஷயத்திற்குப் புத்துயிர் அளிக்கவும் தீங்குகளை விலக்கவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. -
"ஆகவே, இப்பொழுதிலிருந்தாவது சந்தேகங்களையும் தர்க்கவாதத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு முன்னோர்கள் சென்ற பாதையில் நடப்பாயாக. உலக விவகாரங்களில் குறுக்குவழி வேண்டா.-
"இந்த ரூபாய் நாணயங்களை முறைதவறாது வழிபட்டு வருவாயாக. ஞானி அளித்த இந்த பிரசாத்தை ஓர் ஆபரணமாகக் கருதுவாயாக. சமர்த்த சாயி உன்னுடைய பக்தியைப் புனருஜீவனம் (மறுபடி உயிர்பெறச்) செய்வதற்கு இதை ஒரு சூசமாக அளித்திருக்கிறார்.
அதைப்பற்றிச் சிறிது நேரம் யோசித்த மூதாட்டிக்கு திடீரென்று ஞாபகம் வந்தது. மூதாட்டி பிதலேவிடம் கூறினார், "ஆ, இப்பொழுது ஞாபகம் வந்துவிட்டது. பாபா சொன்னது சாத்தியமே!-
"இப்பொழுது நீ உன் புதல்வனை பாபாதரிசனம் செய்வதற்காக ஷிர்டிக்கு அழைத்துக்கொண்டு சென்றாய். இதுபோலவே, நீ சிறுவனாக இருந்தபொழுது, உன் தகப்பனாரும் உன்னை அக்கல்கோட்டிற்கு அழைத்துச் சென்றார். -
"அக்கல்கோட் மஹராஜ் ஒரு சித்தர்; பரோபகாரி; அந்தரஞானி; அறிவொளி படைத்த யோகி; மிகப் பிரசித்தமானவர். உன் தகப்பனாரும் தூயவர்; நல்லலொழுக்கம் மிகுந்தவர். -
"உன் பிதா செய்த பூஜையைக் கண்டு மகிழ்ந்த யோகிராஜா, பிரசாதமாக இரண்டு ரூபாய்களை (நாணயங்கள்) அளித்து அவற்றைப் பூஜித்துவரச் சொன்னார். -
"ஏற்கெனவே கொடுக்கப்பட்ட அந்த இரண்டு ரூபாய்களுங்கூட, பிரசாதமாகவும் நித்திய பூஜைக்காகவுமே அக்கல்கோட் சுவாமியால் கொடுக்கப்பட்டன. -
"அந்த இரண்டு ரூபாய்கள் இல்லத்து வழிபாட்டு விக்கிரங்களுடன் வைக்கப்பட்டு நியம நிஷ்டையுடன் பூஜிக்கப்பட்டன. -
"இது விஷயமாக உன் தந்தைக்கிருந்த பக்தியும் சிரத்தையும் எனக்கு மட்டுமே தெரியும். இந்த நம்பிக்கைதான் அவருக்கு அன்றாட நடவடிக்கைகளில் வழிகாட்டியது. அவருக்கு பிறகு, பூஜை சாமான்கள் குழந்தைகளின் விளையாட்டுப் பொருள்களாகிவிட்டன. -
"கடவுள் நம்பிக்கை தேய்ந்துபோய், பூஜை செய்வதென்பது கூச்சப்படும் செயலாகிவிட்டது. குழந்தைகள் பூஜை செய்ய ஏவப்பட்டனர். அந்நிலையில் , ரூபாய் நாணயங்கள் இரண்டைப் பற்றி யாருக்கென்ன கவலை ?-
"பல வருடங்கள் இவ்வாறு உருண்டோடின. ரூபாய் நாணயங்கள் அலட்சியம் செய்யப்பட்டன. காலப்போக்கில் அவற்றைப் பற்றிய நினைவே அழிந்து போயிற்று. இவ்விதமாக அந்த ரூபாய் நாணயங்கள் இரண்டும் தொலைந்துபோயின.-
"இருந்தபோதிலும் உன்னுடைய பாக்கியம் பெரிது. நீ சாயி ரூபத்தில் அக்கல்கோட் மஹாராஜையே சந்தித்திருக்கிறாய். பல்லாண்டுகளாக மறந்துபோன விஷயத்திற்குப் புத்துயிர் அளிக்கவும் தீங்குகளை விலக்கவும் வாய்ப்பு ஏற்பட்டிருக்கிறது. -
"ஆகவே, இப்பொழுதிலிருந்தாவது சந்தேகங்களையும் தர்க்கவாதத்தையும் ஒதுக்கி வைத்துவிட்டு முன்னோர்கள் சென்ற பாதையில் நடப்பாயாக. உலக விவகாரங்களில் குறுக்குவழி வேண்டா.-
"இந்த ரூபாய் நாணயங்களை முறைதவறாது வழிபட்டு வருவாயாக. ஞானி அளித்த இந்த பிரசாத்தை ஓர் ஆபரணமாகக் கருதுவாயாக. சமர்த்த சாயி உன்னுடைய பக்தியைப் புனருஜீவனம் (மறுபடி உயிர்பெறச்) செய்வதற்கு இதை ஒரு சூசமாக அளித்திருக்கிறார்.
No comments:
Post a Comment