ஷீர்டி சாயி சத்சரிதம்
மேலும், இவ்வுடல் சாசுவதமாக இருக்கும் என்று ஒரு கணமும் நினைப்பதற்கில்லை. ஆகவே, இக் கதையின் இனிமையைச் சுவைக்குமாறு நான் உங்களை இரு கைகளையும் கூப்பி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாருமே தமாஷையும் கேலியையும் விரும்புவர். ஆயினும், அனைவருக்கும் நன்மையளிக்குமாறு, கேலியாலும் ஹாஸ்யத்தாலும் தம்முடைய உபதேசத்தை பக்தர்களுடைய மனத்தில் நன்கு பதியச் செய்த பாபாவின் வழிமுறைகள் இவ்வுலக ரீதிக்கு அப்பாற்பட்டவையல்லவா!
யாருமே தமாஷைப் பெரிதுபடுத்த மாட்டார்கள். பாபாவின் தமாஷை அனைவரும் விரும்பினர்; தங்களுடைய வாய்ப்பு எப்பொழுது வரும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.
தாங்கள் கேலிக்கு இலக்காவதை பொதுவாக மக்கள் விரும்புவதில்லை. ஆனால், பாபா தமாஷ் செய்வதை பக்தர்கள் பெரிதும் விரும்பினர். விகடத்துடன் அபிநயமும் சேர்ந்துகொண்டபோது எதிர்பார்த்த விளைவு உடனே ஏற்பட்டது.
பாபாவினுடைய விகடமும் கேலியும் பிரயாசையின்றி சகஜமாகவும் புதினமாகவும் வெளிப்பட்டது. புன்னகை தவழும் முகமும் கண்களில் விளையாடிய பாவமும் தமாஷின் சுவையைப் பன்மடங்காகக்கின. அச்சுவையை வர்ணிப்பதென்பது இயலாத காரியம்.
போதனையும் புதினமும் நிரம்பிய அனுபவமொன்றைச் சொல்கிறேன், கேளுங்கள். நையாண்டியும் தமாஷுமாக வெளிவந்து, சிறந்த ஆன்மீக போதனை அளித்த திருவாய் மொழியைக் கேளுங்கள்.
ஷிர்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வாரச்சந்தை பெரியதாக கூடும். மைதானத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, வாங்குவதும் விற்பதுமான நடவடிக்கை மும்முரமாக நடக்கும்.
சாலையின் இருபுறங்களிலும் காய்கறிகளும் கீரைவகைகளும் அம்பாரமாகக் கொட்டி விற்கப்படும். சாளை சந்திப்புகளில் எண்ணெய், வெற்றிலை, பாகு, புகையிலை இன்னோரன்ன பிற பொருள்களை விற்கும் அநேக வியாபாரிகள் உட்கார்ந்துகொண்டு வியாபாரம் செய்வர்.
இம்மாதிரியான ஞாயிற்றுக்கிழமை ஒன்றில், பிற்பகல் நேரத்தில், நான் பாபாவினுடைய பாதங்களை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நூதனமான நிகழ்ச்சி ஏற்பட்டது!
எப்பொழுதுமே பிற்பகல் நேரத்தில் பாபாவினுடைய தர்பாரில் கூட்டம் அதிகமாக இருக்கும். போதாதற்கு அன்று ஞாயிற்றுக்கிழமை, சந்தை நாள் வேறு. ஏகப்பட்ட ஜனங்கள் மசூதியில் குழுமியிருந்தனர்.
நான் பாபாவினுடைய வலப்பக்கம் உட்கார்ந்துகொண்டு அவரை நோக்கியவாறு தலையைக் குனிந்துகொண்டு அவருடைய பாதங்களை பிடித்துக்கொண்டு மனதுக்குள்ளேயே நாமஜபம் செய்துகொண்டிருந்தேன்.
மாதவ்ராவ் பாபாவுக்கு இடப்பக்கத்திலும் வாமன்ராவ் பாபாவுக்கு வலப்பக்கத்திலும் இருந்தனர். ஸ்ரீமான் கோபால் ராவ் புட்டியும் அங்கே பாதசேவை செய்வதற்கு தம்முடைய வாய்ப்பு வருவதற்குக் காத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
மேலும், இவ்வுடல் சாசுவதமாக இருக்கும் என்று ஒரு கணமும் நினைப்பதற்கில்லை. ஆகவே, இக் கதையின் இனிமையைச் சுவைக்குமாறு நான் உங்களை இரு கைகளையும் கூப்பி மன்றாடி கேட்டுக்கொள்கிறேன்.
எல்லாருமே தமாஷையும் கேலியையும் விரும்புவர். ஆயினும், அனைவருக்கும் நன்மையளிக்குமாறு, கேலியாலும் ஹாஸ்யத்தாலும் தம்முடைய உபதேசத்தை பக்தர்களுடைய மனத்தில் நன்கு பதியச் செய்த பாபாவின் வழிமுறைகள் இவ்வுலக ரீதிக்கு அப்பாற்பட்டவையல்லவா!
யாருமே தமாஷைப் பெரிதுபடுத்த மாட்டார்கள். பாபாவின் தமாஷை அனைவரும் விரும்பினர்; தங்களுடைய வாய்ப்பு எப்பொழுது வரும் என்று ஆவலுடன் எதிர்நோக்கி இருந்தனர்.
தாங்கள் கேலிக்கு இலக்காவதை பொதுவாக மக்கள் விரும்புவதில்லை. ஆனால், பாபா தமாஷ் செய்வதை பக்தர்கள் பெரிதும் விரும்பினர். விகடத்துடன் அபிநயமும் சேர்ந்துகொண்டபோது எதிர்பார்த்த விளைவு உடனே ஏற்பட்டது.
பாபாவினுடைய விகடமும் கேலியும் பிரயாசையின்றி சகஜமாகவும் புதினமாகவும் வெளிப்பட்டது. புன்னகை தவழும் முகமும் கண்களில் விளையாடிய பாவமும் தமாஷின் சுவையைப் பன்மடங்காகக்கின. அச்சுவையை வர்ணிப்பதென்பது இயலாத காரியம்.
போதனையும் புதினமும் நிரம்பிய அனுபவமொன்றைச் சொல்கிறேன், கேளுங்கள். நையாண்டியும் தமாஷுமாக வெளிவந்து, சிறந்த ஆன்மீக போதனை அளித்த திருவாய் மொழியைக் கேளுங்கள்.
ஷிர்டியில் ஒவ்வொரு ஞாயிறும் வாரச்சந்தை பெரியதாக கூடும். மைதானத்தில் கூடாரங்கள் அமைக்கப்பட்டு, வாங்குவதும் விற்பதுமான நடவடிக்கை மும்முரமாக நடக்கும்.
சாலையின் இருபுறங்களிலும் காய்கறிகளும் கீரைவகைகளும் அம்பாரமாகக் கொட்டி விற்கப்படும். சாளை சந்திப்புகளில் எண்ணெய், வெற்றிலை, பாகு, புகையிலை இன்னோரன்ன பிற பொருள்களை விற்கும் அநேக வியாபாரிகள் உட்கார்ந்துகொண்டு வியாபாரம் செய்வர்.
இம்மாதிரியான ஞாயிற்றுக்கிழமை ஒன்றில், பிற்பகல் நேரத்தில், நான் பாபாவினுடைய பாதங்களை பிடித்துவிட்டுக் கொண்டிருந்தபோது ஒரு நூதனமான நிகழ்ச்சி ஏற்பட்டது!
எப்பொழுதுமே பிற்பகல் நேரத்தில் பாபாவினுடைய தர்பாரில் கூட்டம் அதிகமாக இருக்கும். போதாதற்கு அன்று ஞாயிற்றுக்கிழமை, சந்தை நாள் வேறு. ஏகப்பட்ட ஜனங்கள் மசூதியில் குழுமியிருந்தனர்.
நான் பாபாவினுடைய வலப்பக்கம் உட்கார்ந்துகொண்டு அவரை நோக்கியவாறு தலையைக் குனிந்துகொண்டு அவருடைய பாதங்களை பிடித்துக்கொண்டு மனதுக்குள்ளேயே நாமஜபம் செய்துகொண்டிருந்தேன்.
மாதவ்ராவ் பாபாவுக்கு இடப்பக்கத்திலும் வாமன்ராவ் பாபாவுக்கு வலப்பக்கத்திலும் இருந்தனர். ஸ்ரீமான் கோபால் ராவ் புட்டியும் அங்கே பாதசேவை செய்வதற்கு தம்முடைய வாய்ப்பு வருவதற்குக் காத்துக்கொண்டு அமர்ந்திருந்தார்.
No comments:
Post a Comment