valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 9 February 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

இவ்வுலகத்தைப் பற்றிய இந்த விவேகம் மனதிற்கு ஏற்புடையதாகவிட்டாலும், பணத்தையும் பொன்னையும் தேடி அலைவதையாவது விட்டுவிடு.

இதையும் செய்யமுடியாவிட்டால், நீ சாகும்வரை, நூறு வருடங்களாயினும் சரி, கர்மம் செய்துகொண்டிருப்பதற்குத்தான் தகுதியுடையவன்!

அந்தக் கர்மமும் சாஸ்திரங்களில் விதிக்கப்பட்டவாறு உன்னுடைய வர்ணத்திற்கும் ஆசிரமத்திற்கும் ஏற்றவாறே செய்யவேண்டும். அக்கினிஹோத்திரம் போன்ற கர்மாக்களை விதிகளின்படி சடங்குபூர்வமாக மனம் பரிசுத்தமடையும் வரை செய்ய வேண்டும்.

தன்னைத் தூய்மைப்படுத்திக்கொள்ள இது ஒரு வழி(கர்ம யோகம்); இரண்டாவது வழி சர்வ சங்க பரித்யாகம் (எல்லாத் தொடர்புகளையும் துறந்துவிடுதல் - துறவறம்). இவ்விரண்டையும் அனுசரிக்கமுடியாத நிலையில், வாழ்க்கையின் சுகங்களையும் துக்கங்களையும் விதி வழங்கியவாறு அனுபவித்துக்கொண்டு, உழல வேண்டியதுதான்.

ஒவ்வொரு பக்தனுடைய ஆன்மீக அதிகாரத்தை நன்கு அறிந்த சத்குரு, பிரம்ம வித்தையான உபநிஷத ஞானத்தை எல்லாருக்கும் கொடுத்துவிட மாட்டார். ஏனெனில், அபேத பாவத்தை அடையாதவனுக்கு உபநிஷதம் வெறும் சொற்களே.

ஆயினும், ஞானத்தை தேடுபவர்கள் முதற்கட்டத்தில் இதையே கேட்பதால், 'சொல்லுக்குச் சொல் நிலை' ஞானத்தையும் அளிக்கவேண்டியிருக்கிறது. ஆகையினால்தான், 'வேலைகாரச் சிறுமி விளக்கமளிப்பாள்' என்று சொல்லி, பாபா அவரைத் திருப்பி அனுப்பினார்.

பாபாவே விளக்கமளித்து அனுப்பிவிட்டிருந்தால், இந்த சுவையான நிகழ்ச்சி நடைபெற்றிருக்காது. 'இருப்பது ஒன்றே; அதைத் தவிர வேறெதுவுமே இல்லை' என்ற தத்துவம் தாசகனவின் மனதில் பதிந்திருக்காது.

காகா வீடு வேலைகாரச் சிறுமியும் நான் அல்லேனோ? 'நான்தான் அவள்' என்றும் குறிப்பை பாபா அவருக்களித்து, அவருடைய நேரிடை அனுபவத்தாலேயே உபநிஷதத்தின் தாத்பரியத்தை விளக்கினார்.

பரமேச்வரனுடைய அனுக்கிரஹம் சிறிதளவும், சத் குருவினுடைய அனுக்கிரஹம் விஷேஷமாகவும் இல்லாவிட்டால், ஆத்மஞான மார்க்கத்தில் பிரவேசிக்க முடியாது. ஒரு சித்தரின் உபதேசம் தேவை.

ஆத்மஞானத்தைப் பற்றிய சாஸ்திரங்களையே காதால் கேளுங்கள். 'நான் அனைத்திலும் வியாபித்திருக்கிறேன்; என்னைத் தவிர எங்குமே வேறெதுவுமில்லை' என்ற சிந்தனை செய்யுங்கள்.

இவ்வாறாக, ஆத்ம தத்துவத்தை அறிந்துகொண்டு, நானும் என்னுடைய ஆத்மாவும் ஒன்றே என்ற கருத்தை தியானம் செய்பவனுக்கு ஆத்மா பிரசன்னமாகும் (காட்சியளிக்கும்).

இவ்வாறாக ஆத்ம நிரூபணம் நடக்கும்போது, ஆத்மாவுடன் நிச்சலமான சேர்க்கை ஏற்படும்போது, பரமாத்மா கையில் அகப்படுகிறது.
 


No comments:

Post a Comment