ஷீர்டி சாயி சத்சரிதம்
"யார் இங்கு சாகாவரம் பெற்றவர்? ஆன்மீக முன்னேற்றம் எய்தியவன் கிருதார்த்தனாகிறான் (பேரு பெற்றவனாகிறான்). மற்ற ஜீவன்கள், மூச்சு விட்டுக்கொண்டிருக்கும்வரை, உயிருள்ளவனாய் இருக்கின்றன." (திருவாய் மொழி இங்கு முடிகிறது).
அருள்மொழியான இவ்வார்த்தைகள் என் செவிகளில் விழுந்தபோது, என்னுடைய நோய்கண்ட இதயம் சூதமடைந்தது; என் ஜீவனுடைய தாக்கம் அடங்கியது. நான் ஆனந்தம் நிரம்பியவனானேன்.
ஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம். ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம். ஆயினும் சாயியைப் போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம் அவசியம் வேண்டும்.
இந்த உபதேசத்தின் சாரத்தை கவனிக்கும்போது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் 'யார் என்னை எப்படி' என்று அருளியது முக்காலத்தும் உண்மை! மனிதனுடைய மொத்த பாரமும் அவனுடைய கர்மாவின்மீதே.
உன்னுடைய கர்மா எப்படியோ , அப்படியே நீ அடையும் ஞானம்; அப்படியே உன்னுடைய ஆன்மீக சாதனைகள். எப்படி அப்பியாசமோ அப்படியே பலன்கள். இதுதான் இந்த அத்தியாயத்தின் இங்கிதகவி (பாட்டுடை தலைவன் கருத்தை விளக்கும் கவி). இதுவே போதனமிருதம்.
'வேறொன்றிலும் நாட்டமில்லாமல்' என்ற கோவிந்தனின் முக்கிய உறுதிமொழி இங்கும் பிரயோகிக்க தக்கது.
இவ்வினிமையான வார்த்தைகளைக் கேட்டபொழுது, "யாகத்தால் தேவர்களை பேணுங்கள். தேவர்கள் உங்களை பேணட்டும். பரஸ்பரம் பேணிப் பெருநன்மை எய்துவீர்" என்றும் பகவத் கீதையின் சுலோகமே எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
"நீ தண்டால் (கடுமையான ஆன்மீகப் பயிற்சி) எடுக்க ஆரம்பி, பாலைப் பற்றிய (பயிச்சிக்கு பலன்)கவலை ஏதும் வேண்டா. ஏனெனில், உனக்கு பின்னாலேயே நான் தயாராக ஒரு வட்டிலில் பாலை வைத்துக்கொண்டு நிற்கிறேன்.-
"ஆனால், 'நான் தண்டால் எடுக்கிறேன், நீர் எனக்கு வட்டில் வட்டிலாக பாலைத் திருப்தியுறும் வரை கொடும்' என்று நீ கேட்டால், ஆ! அதெல்லாம் எனக்கு தெரியாது. செயல் ஆற்றுபவன் துடிப்புள்ளவனாக இருக்க வேண்டும்." (பாபா)
பாபாவின் இவ்வாக்குறுதியை சத்தியமென்று எடுத்துக்கொண்டு எவர் செயல்படுகிறாரோ அவர் இந்த உலகத்திலும் மேலுலகத்திலும் சந்தோசம் என்னும் சுரங்கத்தை கண்டுபிடித்தவராவார்.
இப்பொழுது, என்னுடைய அனுபவ பூர்வமான கதை ஒன்றை அசையாத மனதுடன் கவனமாக கேட்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். பக்தருடைய நல்ல தீர்மானங்களை பாபா எவ்வாறு நிச்சயமாகப் போஷிக்கப் போகிறார் என்பது தெளிவாகும்.
"யார் இங்கு சாகாவரம் பெற்றவர்? ஆன்மீக முன்னேற்றம் எய்தியவன் கிருதார்த்தனாகிறான் (பேரு பெற்றவனாகிறான்). மற்ற ஜீவன்கள், மூச்சு விட்டுக்கொண்டிருக்கும்வரை, உயிருள்ளவனாய் இருக்கின்றன." (திருவாய் மொழி இங்கு முடிகிறது).
அருள்மொழியான இவ்வார்த்தைகள் என் செவிகளில் விழுந்தபோது, என்னுடைய நோய்கண்ட இதயம் சூதமடைந்தது; என் ஜீவனுடைய தாக்கம் அடங்கியது. நான் ஆனந்தம் நிரம்பியவனானேன்.
ஒருவருக்கு இணையில்லாத புத்திசாதுர்யம் இருக்கலாம். ஆடாத அசையாத சிரத்தையும் இருக்கலாம். ஆயினும் சாயியைப் போன்ற பலமான குரு அமைவதற்கு தெய்வபலம் அவசியம் வேண்டும்.
இந்த உபதேசத்தின் சாரத்தை கவனிக்கும்போது, பகவான் ஸ்ரீகிருஷ்ணர் பகவத் கீதையில் 'யார் என்னை எப்படி' என்று அருளியது முக்காலத்தும் உண்மை! மனிதனுடைய மொத்த பாரமும் அவனுடைய கர்மாவின்மீதே.
உன்னுடைய கர்மா எப்படியோ , அப்படியே நீ அடையும் ஞானம்; அப்படியே உன்னுடைய ஆன்மீக சாதனைகள். எப்படி அப்பியாசமோ அப்படியே பலன்கள். இதுதான் இந்த அத்தியாயத்தின் இங்கிதகவி (பாட்டுடை தலைவன் கருத்தை விளக்கும் கவி). இதுவே போதனமிருதம்.
'வேறொன்றிலும் நாட்டமில்லாமல்' என்ற கோவிந்தனின் முக்கிய உறுதிமொழி இங்கும் பிரயோகிக்க தக்கது.
இவ்வினிமையான வார்த்தைகளைக் கேட்டபொழுது, "யாகத்தால் தேவர்களை பேணுங்கள். தேவர்கள் உங்களை பேணட்டும். பரஸ்பரம் பேணிப் பெருநன்மை எய்துவீர்" என்றும் பகவத் கீதையின் சுலோகமே எனக்கு ஞாபகத்திற்கு வருகிறது.
"நீ தண்டால் (கடுமையான ஆன்மீகப் பயிற்சி) எடுக்க ஆரம்பி, பாலைப் பற்றிய (பயிச்சிக்கு பலன்)கவலை ஏதும் வேண்டா. ஏனெனில், உனக்கு பின்னாலேயே நான் தயாராக ஒரு வட்டிலில் பாலை வைத்துக்கொண்டு நிற்கிறேன்.-
"ஆனால், 'நான் தண்டால் எடுக்கிறேன், நீர் எனக்கு வட்டில் வட்டிலாக பாலைத் திருப்தியுறும் வரை கொடும்' என்று நீ கேட்டால், ஆ! அதெல்லாம் எனக்கு தெரியாது. செயல் ஆற்றுபவன் துடிப்புள்ளவனாக இருக்க வேண்டும்." (பாபா)
பாபாவின் இவ்வாக்குறுதியை சத்தியமென்று எடுத்துக்கொண்டு எவர் செயல்படுகிறாரோ அவர் இந்த உலகத்திலும் மேலுலகத்திலும் சந்தோசம் என்னும் சுரங்கத்தை கண்டுபிடித்தவராவார்.
இப்பொழுது, என்னுடைய அனுபவ பூர்வமான கதை ஒன்றை அசையாத மனதுடன் கவனமாக கேட்கும்படி உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். பக்தருடைய நல்ல தீர்மானங்களை பாபா எவ்வாறு நிச்சயமாகப் போஷிக்கப் போகிறார் என்பது தெளிவாகும்.
No comments:
Post a Comment