valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 22 September 2016

ஷீர்டி சாயி சத்சரிதம்

பக்தர்கள் நியமமாக செய்யும் நற்செயல்கள் அவர்கள் கேட்காமலேயே எவ்வாறு உற்சாகப்படுத்தி, மஹராஜ் அனுக்கிரஹம் செய்கிறார் என்பது பற்றிக் கேளுங்கள்.

இருந்தாலும், பக்தர் வேறொன்றிலும் நாட்டமில்லாது சரணாகதி செய்துவிட்டு பக்தியின் அற்புதத்தை அனுபவிக்க வேண்டும். அப்பொழுது ஆர், பாபாவினுடைய விநோதமானதும் புதிது புதிதானதுமான வழிமுறைகளை காணலாம். பயனுறலாம்.

காலையில் தூக்கத்தில் இருந்து கண்விழிக்கும்போதே ஒருவருக்கு நற்செயல் பற்றிய எண்ணமொன்று தோன்றினால், அதை அன்று நிர்த்தாரணம் செய்ய வேண்டும்.

அம்மாதிரியான எண்ணங்கள் போஷிக்கப்பட்டால், பெரும் சந்தோசம் விளையும். புத்தியும் விகாசமடையும் (மலரும்); மனம் உவகையுறும்.

இது ஒரு ஞானியின் திருவாய் மொழி. இவ்வுண்மையை நாமும் அனுபவிப்போமே என்று நான் நினைத்தேன். நான் எதிர்பாராமலேயே இவ்வனுபவம் என்னுடைய மனத்திற்குப் பெரும் சாந்தியைக் கொணர்ந்தது.

ஷிர்டியைப் போன்ற ஷேத்திரம், வியாழக்கிழமையைப் போன்ற மங்கள நாள்! திடீரென்று, எனக்கு ராமநாமத்தை இடைவிடாது ஜபிக்க வேண்டும் என்ற எண்ணம் உதித்தது.

புதன்கிழமை இரவு படுக்கையில் படுத்தவாறே நான் ஸ்ரீ ராமனைப் பற்றிய சிந்தனையிலேயே என் மனதை மூழ்கடித்தேன். தூக்கம் வரும்வரை மௌனமாகவே ஜபம் ஓடியது.

காலையில் கண் விழித்தவுடனே, என் மனத்தில் ராமநாமம் உதித்தது. நாக்கு படைத்த பயனைப் பெற்றதை உணர்ந்தேன்.

மனதில் ராமநாம ஜபம் நிலைக்க வேண்டும் என்று நிச்சயம் செய்துகொண்டு, காலைக்கடன்களை முடித்தபின் கையில் அகப்பட்ட பூக்களை எடுத்துக்கொண்டு சாயியை காலை தரிசனம் செய்யச் சென்றேன்.

தீக்ஷித் வாடாவை (சத்திரம்) விட்டுக் கிளம்பி புட்டிவாடா அருகில் (இன்றைய சமாதி மந்திர்) வரும்போது, ஒளரங்காபாத்கர் என்பவர் பாடிக்கொண்டிருந்த இனிமையும் அழகும் வாய்ந்த பதம் ஒன்றைக் கேட்டேன்.

அதையே நான் ஓவி வடிவத்தில் (சுலோகம்) இங்கு அளித்தால் மூலத்தின் சுவையும் சூழ்நிலைப் பொருத்தமும் காணாமற் போய்விடும். கேட்பவர்கள் ஏமாறிப் போவார்கள்.

ஆகவே, நான் மூலத்தையே அக்ஷரம் அக்ஷரமாக மேற்கோளாக வடிக்கிறேன். கேட்பவர்களும் மூலத்தின் தூய்மையான உபதேசத்தை அறிந்துகொண்டு மனம் மகிழலாம்.

"புண்ணியம் செய்தேன் சகோதரா! குருவருள் ஈந்த அஞ்சனத்தால்
ராமனை தவிர வேறெவரையும் நினைப்பேனில்லை  -  பல்லவி
உள்ளிலும் ராமன், வெளியிலும் ராமன்
கனவிலும் சீதா ராமனையே காண்கிறேன் (1)

 

No comments:

Post a Comment