valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 31 March 2016

ஷிர்டி சாயி சத் சரிதம்

அந்த பக்தரின் வரலாறும் அவ்வாறே; வாழ்க்கையில் அவர் அடைந்த தளர்ச்சியைக் கண்ட சில நண்பர்கள், அவருக்கு இதமானதொரு பரிந்துரை வழங்கினார். அதைக் கேளுங்கள்.

"ஷீரடிக்கு சென்று சமர்த்த சாயியை தரிசனம் செய்யலாமே. அவசியம் அங்கே சென்று தயாசாகரமான அந்த ஞானியிடம் பிரார்த்தனை செய்யுங்கள்.

"ஞானிகளுடைய சந்நிதியில் ஒரு கணம் இருந்தாலும் அலைபாயும் மனம் அமைதியுறுகிறது. உடனே ஹரிபாதங்களை நாடுகிறது. பிறகு அங்கிருந்து மனதைத் திரும்ப இழுப்பது கடினமாகிவிடுகிறது. -

"பல தேசங்களில் இருந்து மக்கள் அங்கே குழுமுகின்றனர். சாயியின் பாத தூளியில் புரளுகின்றனர். மகாராஜ் அளிக்கும் உபதேசங்களுக்குப் பணிவுடன் கீழ்ப் படிகின்றனர். அவருக்கு சேவை செய்து, விரும்பியவற்றை பெறுகின்றனர். -

"இதுவே அவருடைய பிரசித்தியான கீர்த்தி, குழந்தைகளில் இருந்து கிழவர்கள் வரை அனைவரும் அவரை அறிவர். அவர் உம்மீது கருணை வைத்தால் உம்முடைய துக்கம் நிவிர்த்தியாகிவிடும். -

"இக் காலத்தில் ஷிர்டி ஒரு க்ஷேத்திரம் ஆகிவிட்டது. இரவு பகலாக யாத்ரிகர்கள் வந்து கொண்டே இருக்கின்றனர். ஞானிகளின் தரிசனம் எவ்வளவு நன்மை செய்கிறது என்பதை நீங்களும் சொந்த அனுபவத்தில் உணரலாம்."

வறட்சியால் ஆட்பட்ட தரித்திரனுக்கு திடீரென்று பெய்யும் கனமழை எப்படியோ, பசியால் வாடிப் பிராணன் போய்விடும் போன்ற நிலையில் இருப்பவனுக்கு அறுசுவை உணவு கிடைப்பது எப்படியோ-

அவ்வாறு இருந்தது நண்பர்களின் வார்த்தை அந்த பக்தருக்கு. அவர் அந்த அனுபவத்தை பெறவேண்டுமென்று முடிவுசெய்து, ஷிர்டி செல்லும் பாதையில் பயணமாகக் கிளம்பிவிட்டார்.

ஷிர்டி கிரமாத்திற்கு வந்து சேர்ந்தார்; பாபாவின் பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்தார். உடனே அவருடைய கண்களில் அமைதி தவழ்ந்தது; மனதில் சமாதானம் நிரம்பியது.

பூரணமானதும் சனாதனமானதும் மாசற்றதும் சுய ஜோதியுமான சாயியின் உருவத்தைப் பார்த்தவுடன் அவருடைய மனம் மகிழ்ச்சியால் நிரம்பியது.

பூர்வ ஜன்மத்தில் சம்பாதித்த பாக்கியத்தாலேயே தாம் சாயியை தரிசனம் நேர்ந்து, சாந்தியையும் கலக்கம் இல்லாத மனதையும் பெற்றதாக நினைத்தார்.

இந்த பக்தருடைய குடும்ப பெயர் ஸாடே. மனத்திண்மை மிக்க இவர், நியம நிஷ்டையுடன் குரு சரித்திர பாராயணத்தை ஆரம்பித்தார்.

சப்தாஹம் (ஒரு வாரத்திற்குள் பாராயணம் செய்து ஒரு சுற்று முடித்தல்) முடிந்த அன்று இரவே, பாபா சாடேவின் கனவில் தோன்றி, புத்தகமும் கையுமாக அவருக்கு அர்த்தத்தை விளக்கிக் கூற ஆரம்பித்தார்.

பாபா அமைதியாக தம்முடைய ஆசனத்தில் உட்கார்ந்து கொண்டு சாடேவை தமக்கெதிரில் உட்கார வைத்து, குருசரித்திரம் புத்தகத்தை கையில் வைத்துகொண்டு பிரவசனம் செய்வதற்குத் தயாராக இருந்தார்.


No comments:

Post a Comment