ஷிர்டி சாயி சத்சரிதம்
கனவிலும் நனவிலும் உட்கார்ந்திருக்கும்போதும் தூங்கும்போதும் சாப்பிடும்போதும் அவர் உம் முன் தோன்றுவார். ஜனங்களிடையே நடந்து சென்றாலும் வனத்தில் நடந்து சென்றாலும் நீர் எங்கு சென்று வந்தாலும் அவர் உம்முடனேயே இருப்பார்.
இவ்வாறு அவரை நிதித்யாசனம் (ஈடுபாட்டுடன் திரும்ப திரும்பச் செய்யப்படும் தியானம்) செய்தால் உம்முடைய மனம் உள்மன நிலையில் நுழைந்து விடும். அனுதினமும் இவ்வாறு நடப்பின், உம்முடைய மனம் சச்சிதானந்தத்தில் கலந்துவிடும்.
இப்பொழுது, முந்தைய அத்தியாயத்தின் முடிவில் குறிப்பிடப்பட்ட காதையை ஆரம்பிப்போம். கேட்பவர்களே! பயபக்தியுடன் கேளுங்கள்.
பாவ பக்தியென்பது, சிராபுரீ (ரவாகேசரியும் பூரியும்) தின்பதைப் போன்றது. எவ்வளவு அதிகமாகத் தின்கிறோமோ அவ்வளவு அதிகமாக ஆவலும் பெருகும். தொண்டைவரை தின்றாலும் முழுதிருப்தி கிடைக்காது!
ஆகவே, கதை கேட்பவர்களே! இன்னுமொரு காதையை நீங்கள் பயபக்தியுடன் கேட்டால் ஞானிகளை தரிசனம் செய்வது எவ்வளவு நன்மையை அளிக்கக்கூடியது என்பதுபற்றி திடமான நம்பிக்கையை பெறுவீர்கள்.
வெளிப்பார்வைக்கு, பாபா ஏதும் செய்யாதவர் போலவே தெரிந்தார். தம்முடைய ஆசனத்தை விட்டு எங்கும் வெளியே போகவில்லை. ஓரிடத்தில் அமர்ந்துகொண்டே அவருக்கு எங்கு நடப்பதும் தெரிந்திருந்தது. சகல ஜனங்களுக்கும் இதை அவர் அனுபவத்தால் காண்பித்தார்.
சத் என அழைக்கப்படும் முழுமுதற்பொருள் நம்முள்ளே இருப்பது போன்றே பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கிறது. இதை எப்பொழுதும் மனதிற்கொண்டு, இறைவனின் சேவைக்கு உடலை அர்ப்பணம் செய்துவிடுங்கள்.
'சத்' எனும் தத்துவத்திடம் (முழுமுதற் பொருளிடம்) சரணடைந்தவர் எப்பொருளிலும் எம்மனிதரிலும் ஒன்றையே பார்ப்பார். 'பல' என்னும் தத்துவத்தை கைக்கொள்பவர் ஜனன மரணச் சூழலில் மாட்டிக் கொள்வார்.
துவதத்தை (இறைவன் வேறு, மனிதன் வேறு என்னும் தத்துவம்) நிர்த்தாரணம் செய்யும் புத்தியானது அஞ்ஞானமேயன்றி வேறெதுவும் இல்லை. குருவினிடம் செல்வதால் சித்தம் சுத்தமடைகிறது. தன்னையறியும் ஞானம் பிறக்கிறது.
அவித்யயைலிருந்து (அஞ்ஞானத்தில் இருந்து) விடுபடுவதே'இருப்பது ஒன்றே' என்ற ஞானம் பெறும் வழி. அணுவளவு பேதபுத்தி இருப்பினும், இருப்பதனைத்தும் இறைவனே என்ற நிலையை எவ்வாறு உணரமுடியும்?
ப்ரம்மாவிலிருந்து (படைக்கும் கடவுள்) நகராப் பொருள்கள்வரை அனைத்தையும் எக்கோணத்தில் பார்த்தாலும் முழு முதற்பொருளே. வெவ்வேறு பொருள்கள் வெவ்வேறு குணாதிசயங்களை காட்டுவதால், விவேகம் இல்லாதவர்களுக்கு அவை முழு முதற்பொருளில் இருந்து வேறுபட்டவனாகத் தெரியலாம்.
கனவிலும் நனவிலும் உட்கார்ந்திருக்கும்போதும் தூங்கும்போதும் சாப்பிடும்போதும் அவர் உம் முன் தோன்றுவார். ஜனங்களிடையே நடந்து சென்றாலும் வனத்தில் நடந்து சென்றாலும் நீர் எங்கு சென்று வந்தாலும் அவர் உம்முடனேயே இருப்பார்.
இவ்வாறு அவரை நிதித்யாசனம் (ஈடுபாட்டுடன் திரும்ப திரும்பச் செய்யப்படும் தியானம்) செய்தால் உம்முடைய மனம் உள்மன நிலையில் நுழைந்து விடும். அனுதினமும் இவ்வாறு நடப்பின், உம்முடைய மனம் சச்சிதானந்தத்தில் கலந்துவிடும்.
இப்பொழுது, முந்தைய அத்தியாயத்தின் முடிவில் குறிப்பிடப்பட்ட காதையை ஆரம்பிப்போம். கேட்பவர்களே! பயபக்தியுடன் கேளுங்கள்.
பாவ பக்தியென்பது, சிராபுரீ (ரவாகேசரியும் பூரியும்) தின்பதைப் போன்றது. எவ்வளவு அதிகமாகத் தின்கிறோமோ அவ்வளவு அதிகமாக ஆவலும் பெருகும். தொண்டைவரை தின்றாலும் முழுதிருப்தி கிடைக்காது!
ஆகவே, கதை கேட்பவர்களே! இன்னுமொரு காதையை நீங்கள் பயபக்தியுடன் கேட்டால் ஞானிகளை தரிசனம் செய்வது எவ்வளவு நன்மையை அளிக்கக்கூடியது என்பதுபற்றி திடமான நம்பிக்கையை பெறுவீர்கள்.
வெளிப்பார்வைக்கு, பாபா ஏதும் செய்யாதவர் போலவே தெரிந்தார். தம்முடைய ஆசனத்தை விட்டு எங்கும் வெளியே போகவில்லை. ஓரிடத்தில் அமர்ந்துகொண்டே அவருக்கு எங்கு நடப்பதும் தெரிந்திருந்தது. சகல ஜனங்களுக்கும் இதை அவர் அனுபவத்தால் காண்பித்தார்.
சத் என அழைக்கப்படும் முழுமுதற்பொருள் நம்முள்ளே இருப்பது போன்றே பிரபஞ்சமெங்கும் வியாபித்திருக்கிறது. இதை எப்பொழுதும் மனதிற்கொண்டு, இறைவனின் சேவைக்கு உடலை அர்ப்பணம் செய்துவிடுங்கள்.
'சத்' எனும் தத்துவத்திடம் (முழுமுதற் பொருளிடம்) சரணடைந்தவர் எப்பொருளிலும் எம்மனிதரிலும் ஒன்றையே பார்ப்பார். 'பல' என்னும் தத்துவத்தை கைக்கொள்பவர் ஜனன மரணச் சூழலில் மாட்டிக் கொள்வார்.
துவதத்தை (இறைவன் வேறு, மனிதன் வேறு என்னும் தத்துவம்) நிர்த்தாரணம் செய்யும் புத்தியானது அஞ்ஞானமேயன்றி வேறெதுவும் இல்லை. குருவினிடம் செல்வதால் சித்தம் சுத்தமடைகிறது. தன்னையறியும் ஞானம் பிறக்கிறது.
அவித்யயைலிருந்து (அஞ்ஞானத்தில் இருந்து) விடுபடுவதே'இருப்பது ஒன்றே' என்ற ஞானம் பெறும் வழி. அணுவளவு பேதபுத்தி இருப்பினும், இருப்பதனைத்தும் இறைவனே என்ற நிலையை எவ்வாறு உணரமுடியும்?
ப்ரம்மாவிலிருந்து (படைக்கும் கடவுள்) நகராப் பொருள்கள்வரை அனைத்தையும் எக்கோணத்தில் பார்த்தாலும் முழு முதற்பொருளே. வெவ்வேறு பொருள்கள் வெவ்வேறு குணாதிசயங்களை காட்டுவதால், விவேகம் இல்லாதவர்களுக்கு அவை முழு முதற்பொருளில் இருந்து வேறுபட்டவனாகத் தெரியலாம்.
No comments:
Post a Comment