ஷிர்டி சாயி சத் சரிதம்
தத்தோ பந்தினுடைய அனுபவம் அவ்வாறு இருந்தது. பாபாவினுடைய கரம் அவருடைய சிரத்தின் மீது வைக்கப்பட்டு, விபூதியையும் ஆசீர்வாதங்களையும் பெற்றுக்கொண்ட பின்னர் அவருடைய மனம் அமைதி அடைந்தது.
மகாராஜ் அவரைச் சில நாள்கள் ஷீரடியில் தங்கும்படி செய்தார். படிப்படியாக அவருஅடிய சூலை நோய் நிர்மூலமாகியது.
மகாத்மாக்கள் இவ்விதமே! அவர்களுடைய பிரபாவத்தை நான் எங்கனம் தேவையான அளவுக்கு வர்ணிப்பேன் ? நகரும் நகராப் பொருள்கள் அனைத்தின் மீதும் சத்பாவம் கொண்ட மகான்களுக்கு பரோபகாரமே நித்திய சுபாவம்.
இப்பெருமைகளை பேசிக்கொண்டிருக்கும்போதே எனக்கு மற்ற காதைகள், ஒன்றை விட மற்றொன்று அற்புதமான ஞாபகத்திற்கு வருகின்றன. ஆனால், நாம் இப்பொழுது பிரதமாமான பீமாஜியின் காதையை விட்ட இடத்தில தொடர்வோமாக!
ஆக, பாபா உதீயை கொண்டுவரச் செய்து, பீமாஜிக்கு அளித்துச் சிறிது அவருடைய நெற்றியிலும் இட்டு விட்டார். பிறகு பாபா தம்முடைய அருட்கரத்தை பீமாஜியின் தலைமேல் வைத்தார்.
தங்குமிடத்திற்குச் செல்லும்படி பீமாஜி ஆக்ஞை இடப்பட்டார். பாடீல் சில அடிகள் மெதுவாக எடுத்துவைத்த பிறகு, வண்டி வரை நடந்து சென்றார். தமக்குத் தெம்பு வந்துவிட்டதை உணர்ந்தார்.
பாபா ஆலோசனை கூறிய இடத்திற்குச் (பீமாபாயின் வீட்டிற்குச்) சென்றார். அவ்விடம் குறுகலாகவும் காற்றோட்டமின்றியும் இருந்தபோதிலும், பாபா அவ்வாறு செய்யச் சொல்லியிருந்தார்; அதுதான் முக்கியம்.
சமீபத்தில் களிமண்ணால் சமம் செய்யப்படிருந்ததால், தரை ஈரமாக இருந்தது. ஆனால், பாபாவின் ஆணைக்குக் கட்டுப்பட்டுப் பீமாஜி அவ்விடத்திலேயே தங்குவதற்கு வசதிகள் செய்துகொண்டார்.
பீமாஜிக்கு கிராமத்தில் பலர் தெரிந்து இருந்ததால், ஈரமில்லாத உலர்ந்த இடம் கிடைத்திருக்கும். ஆனா, பாபாவினுடைய திருவாய் மொழியாக வந்த இடத்திற்குப் பதிலாக, வேறு இடத்திற்கு மாற்றமுடியாது.
ஆகவே, அவர் அங்கே கோணி பைகளை தரையில் விரித்துத் தம்முடைய படுக்கையை அதன்மீது அமைத்துக் கொண்டார். மன அமைதியுடன் படுக்கையில் படுத்துக் கொண்டார்.
அன்றிறேவே பீமாஜி ஒரு கனவு காணும்படி நேர்ந்தது. கனவில் அவருடைய பால பருவத்து ஆசிரியர் தோன்றி, அவரை அடிக்க ஆரம்பித்தார்.
கையில் பிரம்பை எடுத்துக்கொண்டு, அவரைச் சில மராட்டி செய்யுள்களை மனப்பாடமாக ஒப்பிக்கவைக்க, முதுகொடிந்து போகுமாறு கடுமையாக அடிக்க ஆரம்பித்தார். சிஷ்யனுக்கு பயங்கரமான கஷ்டத்தை கொடுத்தார்.
கதை கேட்பவர்களுக்கு இச்செய்யுள்கள் யாவை என்று அறிந்து கொள்ளும் ஆவல் மிக இருக்கும். ஆகவே, நான் கேட்டதை விரிவாகவும் பதம் பதமாகவும் இங்கே தருகிறேன்.
No comments:
Post a Comment