valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 31 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

அவர்கள் இகத்திலும் இல்லை; பரத்திலும் இல்லை. ஒரு கணமும் நிம்மதியோ சாந்தியோ இன்றி, சஞ்சலங்களிலும் கவலைகளிலும் ஜன்மம் முழுவதும் மூழ்கிப் போகின்றனர். இவ்வாறு இருந்த போதிலும் முக்தியடைந்து கொண்டிருப்பதாக தம்பட்ட மடிக்கின்றனர். 

அடுத்த அத்தியாயம் இந்த அத்தியாயத்தை விட சுவாரஸ்யமானது. சாயி தரிசனம் மேலும் மேலும் செய்யச் செய்ய, எல்லையில்லாத ஆனந்த அனுபவத்தை அளிக்கும். 

பக்தர் பீமாஜி பாடீல் எவ்வாறு க்ஷய ரோகத்திலிருந்து நிவாரண ளிக்கப் பட்டார் என்பதையும் அவருக்குச் சாந்தோர்கரிடம் இருந்த நம்பிக்கையை ஒரு காட்சியளித்து எவ்வாறு பாபா உறுதிப் படுத்தினார் என்பதையும் விவரிக்கிறேன். 

சாயி தரிசனம் நம்முடைய பாவங்களையும் நிவிர்த்தி செய்து, இவ்வுலக சுகங்களையும் மேலுலக சுகங்களையும் சமிருத்தியாக அளிக்கும் சக்தி வாய்ந்தது. 

மகா யோகிகளால் கண்வீச்சாலேயே  நாஸ்திகர்களையும் பாவத்தில் இருந்து விடுதலை செய்ய முடியுமென்றால், ஆஸ்திகருடைய நிலை என்ன? அவர்களுடைய பாவம் மிக சுலபமாக அளிக்கப்படுகிறதன்றோ?  

பிரம்ம சாக்ஷாத்காரம் பெற்று பிரம்மத்திலேயே லயித்த மனமுடைய மகாத்மா, தம்முடைய கண்நோக்காலேயே கடக்க முடியாத கொடிய பாவங்களையும் அழித்து விடுகிறார். 

பாபாவினுடைய புரிந்து கொள்ள முடியாத லீலைகள் இவ்வாறே. பாபாவுக்கு உங்கள் மீது அன்பு இருக்கிறது. ஆகவே, பண்டிதராயினும் சரி, பாமரராயினும் சரி, நீங்களனைவரும் பாபாவினுடைய காதைகளை நிர்மலமான இதயத்துடன் கேளுங்கள். 

எங்கே பக்தியும் பிரேமையும் இருக்கிறதோ, எங்கே பாபாவின்   
மீது பிரியமான ஈர்ப்பு இருக்கிறதோ, அங்கேதான் உண்மையான தாகம் உருவெடுக்கிறது. அங்கேதான் அவருடைய காதைகளைக் கேட்கும் தூய மகிழ்ச்சியை பார்க்க முடியும். 

அனன்னியமாக சரணடைந்தவர்களுக்கு வஜ்ஜிரம் போன்ற அடைக்கலமும் அளவற்ற சக்தியை உடையதுமான சாயியின் திருவடிகளில் ஹெமாத் நமஸ்காரம் செய்கின்றேன். இவ்வுலக வாழ்க்கையின் பயங்களை அறவே ஒழிக்கும் சக்தியுடையவை சாயியின் பொன்னடிகள். 

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களாலும் உணர்வூட்டப்பட்டு,  சாயி பக்தன் ஹேமாட்பந்தால் இயற்றப் பட்ட, ' ஸ்ரீ சமர்த்த சாயி சத்சரிதம்' என்னும் காவியத்தில், 'குரு கோலப் தரிசனம் - ஸ்ரீராம தரிசனம்' என்னும் பன்னிரண்டாவது அத்தியாயம் முற்றும். 

ஸ்ரீ சத்குரு சாயிநாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும். 

சுபம் உண்டாகட்டும். 

No comments:

Post a Comment