valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 24 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

மூன்தூர் நாள்கள் கழிந்தன; நான்காது நாள் பொழுது விடிந்தது. என்ன நடந்தது என்பதைக் கவனமாகக் கேளுங்கள். 

கான்தேச் என்னுமிடத்தில் குடியேறிவிட்ட அவருடைய நண்பரொருவர் தற்செயலாக சாயி தரிசனத்துக்காக ஷீரடிக்கு வந்தார். 

ஒன்பது வருடங்களுக்கு பிறகு அவரை சந்தித்த டாக்டரின் மகிழ்ச்சிக்கு அளவே இல்லை. உடனே! டாக்டரும் நண்பருடன் மசூதிக்கு சென்றார்; 

போனவுடனே, டாக்டர் பாபாவுக்கு நமஸ்காரம் செய்தார். பாபா கேட்டார். "ஆக, டாக்டரே! உம்மைக் கூப்பிட யாராவது வந்தார்களா? முதலில் எனக்குச் சொல்லும்; ஏன் வந்தீர் இங்கு?"

பாணம் போன்ற இந்தக் கேள்வியை கேட்டு டாக்டர் உணர்ச்சிவசப் பட்டார். அவருடைய  சங்கல்பம் ஞாபகத்திற்கு வந்து, குற்றவுணர்ச் சியால் சோகமாடைந்தார். 

ஆனால், அன்றே நள்ளிரவில் பாபாவினுடைய   அருள் அவர் மீது பொழிந்தது. தூக்கத்திலேயே பரமாந்தமான நிலையின் மதுரத்தை அனுபவித்தார். 

பிறகு, டாக்டர் தம்முடைய சொந்தக் கிராமத்திற்குத் திரும்பிச் சென்றாராயினும், அடுத்த பதினைந்து நாள்களுக்கு பரிபூரணமான ஆத்மானந்தத்தை அனுபவித்தார். சாயியின் மீது அவருடைய பக்தி வளர்ந்தது. 

ஒன்றை விட இன்னொன்று அதிக அற்புதமானதாக இம்மாதிரியான சாயி அனுபவங்கள் எத்தனை எத்தனையோ! அவையனைத்தும் இக்காவியத்துக்கு மென்மேலும் பெருமை சேர்க்கு மெனினும், விரிவுக் கஞ்சி என்னையே நான் கட்டுபடுத்திக் கொள்கிறேன். 

செவி மடுப்பவர்கள் இவ்வத்தியாயத்தின் முக்கிய பகுதியான முலே சாஸ்திரியின்   காதையைக் கேட்டு வியப்படைந்திருக்க வேண்டும். அதனுடைய சாரத்தை, அக்காதை சொல்லும் படிப்பினையை அவர்கள் அறிந்து கொள்ள வேண்டும். 

"ஒருவருடைய குரு எவராக இருந்தாலும் அவர்   மீது திடமான விசுவாசம் வைக்க வேண்டும். வேறெங்கிலும் அவ்விசுவாசத்தை வைக்கலாகாது. " இதுதான் இக்காதையில் மறைந்திருக்கும் பொருள்; இதை மனதில் பதிக்க வேண்டும். 

இந்த அற்புதமான லீலைக்கு வேறு நோக்கமேதும் இருப்பதாக தெரியவில்லை. மற்றவர்கள் இதை எப்படிப் புரிந்து கொண்டாலும் சரி, இதுவே இக்காதையின் படிப்பினை. 

மற்ற குருமார்களுடைய கீர்த்தி மிகப் பெரியதாக இருக்கலாம். நம் குருவுக்கு அத்தகைய கீர்த்தி எதுமில்லாதிருக்கலாம். ஆயினும், நம்முடைய முழு விசுவாசமும் நம் குருவின் மேல்தான் இருக்க வேண்டும். இதுவே இக்காதையின் உபதேசம். 

எத்தனை இதிகாசங்களையும் புராணங்களையும் புரட்டினாலும் தத்துவ உபதேசத்தை பொறுத்தவரை அவையனைத்தும் ஒன்றே. இவ்வனுபவதைப் போல நேரிடையான நிரூபணம் கிடைக்காதவரை, விசுவாசம் எளிதாக ஏற்படுவதில்லை. 

உறுதியான விசுவாசமில்லாமல், 'நான் ஆத்ம நிஷ்டன்" (தன்னையறிந்தவன்) என்று பீத்துபவர்கள் வாழ்நாள் முழுவதும் கஷ்டத்தையே அனுபவிக்கிறார்கள். இதைத் திரும்ப திரும்பப் பலமுறைகள் பார்த்தாகிவிட்டது. 

No comments:

Post a Comment