ஷீர்டி சாயி சத்சரிதம்
இந்தப் பதவியை மக்கள் ஒருகாலத்தில் பெரிதும் மதித்தனர். உத்தியோகஸ்தர்களுக்கும் இப் பதவியின் அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்ற பெருவேட்கை அப்பொழுது இருந்தது. பரஸ்பரம் ஆனந்தமடைந்தனர். ஆனால், அக்காலம் இப்பொழுது மலையேறிவிட்டது.
தற்காலத்தில் இப் பதவியில் இருக்கும் சிரமத்தையும் பிடுங்கல்களையும் யாரால் விவரிக்க முடியும்? இப் பதவி சுகமான உத்தியோகமாக இருந்தது பழைய காலம். இப்பொழுதோ பொறுப்புகளின் சுமையே அதிகம். வருமானமென்னவோ நிறைய உண்டு.
மேலும், எவ்வளவு கடுமையாகவும் நேர்மையாகவும் உழைத்தாலும், மாமலத்தார் பதவிக்கு டெபுடி கலெக்டருக்கு இணையாக முன்பிருந்த மரியாதையும் காம்பீர்யமும் தற்பொழுது இல்லாமற்போய் விட்டன.
மேலும், இந்த அதிகாரமான பதவியை அடைவதில் பணம் செலவு செய்யாமலும் சிரமப்பட்டு தொடர்முயற்சியாக படிக்காமலும் யாரால் வெற்றிபெற முடியும்?
முதலில் பி.ஏ. பரீட்சையில் வெற்றிபெற வேண்டும். பிறகு, வரிவசூல் இலாகாவில் மாதம் ரூ. 30 /- சம்பளத்தில் குமாஸ்தா வேலை கிடைக்கும். பிறகு, இந்த மார்க்கத்தில் மெதுவாக முன்னேற வேண்டும்.
காலம் வந்தபோது அவர் மலைகளைத் தாண்டி (மேற்குத் தொடர்ச்சி மலைகள்) கிழக்கு நோக்கிச் சமவெளிக்குப் போகவேண்டும். நிலங்களை அளக்கும் பயிற்சி பெறவேண்டும். சர்வேயர்களுடன் தங்கியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் இலாகாவின் துறைத் தேர்வுகளில் வெற்றிபெறமுடியும்.
பிறகு, உயர்பதவிகளில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் வைகுண்ட பதவி அடைவதால் ஏற்படும் காலியிடம் இவருடைய முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.
போதும் இந்த வத வதவென்ற விவரணம். உளறிக்கொண்டே போவதில் பிரயோஜனம் என்ன? இம்மாதிரியான அதிகாரிகளில் ஒருவர் சாயியை சந்தித்த காதையைக் கேளுங்கள்.
பெல்காமிற்கு சமீபத்தில் வட்காங்வ் என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கு, ஓர் சமயம் சர்வேயர் (நில அளவு செய்பவர்கள்) பிரிவு ஒன்று வந்து முகாமிட்டது.
அந்த கிராமத்தில் ஒரு ஞானி இருந்தார். டாகூர் அந்த ஞானியை தரிசனம் செய்து பாதங்களில் வணங்கி, ஆசீர்வாதமும் பிரசாதமும் பெற்றார்.
அந்த சமயத்தில் அந்த ஞானி, நிச்சலதாஸர் இயற்றிய விசார சாகரம் எனும் நூலைப் படித்துக்கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து, டாகூர் விடைபெறுவதற்காக எழுந்தபோது அந்த ஞானி மகிழ்ச்சியுடன் அவரிடம் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.
இந்தப் பதவியை மக்கள் ஒருகாலத்தில் பெரிதும் மதித்தனர். உத்தியோகஸ்தர்களுக்கும் இப் பதவியின் அதிகாரத்தை அனுபவிக்க வேண்டும் என்ற பெருவேட்கை அப்பொழுது இருந்தது. பரஸ்பரம் ஆனந்தமடைந்தனர். ஆனால், அக்காலம் இப்பொழுது மலையேறிவிட்டது.
தற்காலத்தில் இப் பதவியில் இருக்கும் சிரமத்தையும் பிடுங்கல்களையும் யாரால் விவரிக்க முடியும்? இப் பதவி சுகமான உத்தியோகமாக இருந்தது பழைய காலம். இப்பொழுதோ பொறுப்புகளின் சுமையே அதிகம். வருமானமென்னவோ நிறைய உண்டு.
மேலும், எவ்வளவு கடுமையாகவும் நேர்மையாகவும் உழைத்தாலும், மாமலத்தார் பதவிக்கு டெபுடி கலெக்டருக்கு இணையாக முன்பிருந்த மரியாதையும் காம்பீர்யமும் தற்பொழுது இல்லாமற்போய் விட்டன.
மேலும், இந்த அதிகாரமான பதவியை அடைவதில் பணம் செலவு செய்யாமலும் சிரமப்பட்டு தொடர்முயற்சியாக படிக்காமலும் யாரால் வெற்றிபெற முடியும்?
முதலில் பி.ஏ. பரீட்சையில் வெற்றிபெற வேண்டும். பிறகு, வரிவசூல் இலாகாவில் மாதம் ரூ. 30 /- சம்பளத்தில் குமாஸ்தா வேலை கிடைக்கும். பிறகு, இந்த மார்க்கத்தில் மெதுவாக முன்னேற வேண்டும்.
காலம் வந்தபோது அவர் மலைகளைத் தாண்டி (மேற்குத் தொடர்ச்சி மலைகள்) கிழக்கு நோக்கிச் சமவெளிக்குப் போகவேண்டும். நிலங்களை அளக்கும் பயிற்சி பெறவேண்டும். சர்வேயர்களுடன் தங்கியிருக்க வேண்டும். அப்பொழுதுதான் இலாகாவின் துறைத் தேர்வுகளில் வெற்றிபெறமுடியும்.
பிறகு, உயர்பதவிகளில் இருப்பவர்களில் யாராவது ஒருவர் வைகுண்ட பதவி அடைவதால் ஏற்படும் காலியிடம் இவருடைய முன்னேற்றத்திற்கு உதவியாக இருக்கும்.
போதும் இந்த வத வதவென்ற விவரணம். உளறிக்கொண்டே போவதில் பிரயோஜனம் என்ன? இம்மாதிரியான அதிகாரிகளில் ஒருவர் சாயியை சந்தித்த காதையைக் கேளுங்கள்.
பெல்காமிற்கு சமீபத்தில் வட்காங்வ் என்றொரு கிராமம் இருக்கிறது. அங்கு, ஓர் சமயம் சர்வேயர் (நில அளவு செய்பவர்கள்) பிரிவு ஒன்று வந்து முகாமிட்டது.
அந்த கிராமத்தில் ஒரு ஞானி இருந்தார். டாகூர் அந்த ஞானியை தரிசனம் செய்து பாதங்களில் வணங்கி, ஆசீர்வாதமும் பிரசாதமும் பெற்றார்.
அந்த சமயத்தில் அந்த ஞானி, நிச்சலதாஸர் இயற்றிய விசார சாகரம் எனும் நூலைப் படித்துக்கொண்டிருந்தார்.
சிறிது நேரம் கழித்து, டாகூர் விடைபெறுவதற்காக எழுந்தபோது அந்த ஞானி மகிழ்ச்சியுடன் அவரிடம் என்ன சொன்னார் என்பதைக் கேளுங்கள்.
No comments:
Post a Comment