ஷீர்டி சாயி சத்சரிதம்
மரண விபத்துக்களை விலக்கி அருள் செய்த படலம்
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்ற! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
ஜய ஆனந்தம் நிரம்பியவரே சத்தகுருவே! ஞானத்தின் சொரூபமே! தூய்மையின் வடிவே! பிறவிப் பயத்தை ஒழிப்பவரே! பரிபூரணரே! கலியின் மலங்களை எரிப்பவரே ஜய ஜய!
பலவிதமான உணர்ச்சிகளும் எண்ணங்களும் மேல்மட்டத்தில் அலைகளாக எழும் ஆனந்தக் கடல் தாங்களே! உண்மையான பக்தர்களின் மீதுள்ள கிருபையினால், தேவரீர், தேவரீர் மாத்திரமே, அவ்வலைகளை கட்டுப்படுத்துகிறீர்.
அறையிருளில் பாம்புபோல் தெரிவது வெளிச்சம் வந்தவுடன் தானாகவே கயிறாகிவிடுகிறது. அறையிருளையும் வெளிச்சத்தையும் சிருஷ்டி செய்பவர் நீரே.
முதலில் பாம்பு போன்ற உருவ பிரமையை சிருஷ்டி செய்து பயத்தை உண்டுபண்ணுகிறீர். கடைசியில் அந்த பயத்தை நிவாரணம் செய்வபவரும் நீரே.
ஆதியில் அந்தகாரத்தில் (இருளில்), பாம்பும் இல்லாத, கயிறும் இல்லாத நிலையில், கயிற்றை பார்த்துப் பாம்பென்று மயக்கம் அடைவதற்கு இடமேயில்லாத சூழ்நிலையில், உருவமற்ற அவ்விருட்டை வியாபித்தவரும் நீரே.
உருவமற்ற நிலையில் இருந்து மங்கிய ஒளியில் உருவமொன்று தோன்றியபோது பாம்பெண்ணும் பிரமை உண்டாகியது. அந்த மயக்கமும் உம்முடைய சிருஷ்டியே.
ஒருகணத்தில் தெரியும் தோற்றம் மறுக்கணத்தில் மறைந்துவிடுவதும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத தோற்றங்களும் உண்மையில் நீர் கண்ணாம்பூச்சி ஆடும் பிரபாவமே. இந்நிலையில் மாற்றமில்லாது இருந்தாலும், எவராலும் இதை ஆழங்கான முடியவில்லை.
தங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் வேதங்கள் மௌனமடைந்து விட்டன. ஆதிசேஷன் தம்முடைய ஆயிரம் வாய்களால் போற்றியும், தங்களுடைய வாஸ்தவமான சொரூபத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. இவ்விதமிருக்க, நான் எப்படித் தங்களை புரிந்துகொள்ள முடியும்?
பாபா! தங்களுடைய தெய்வீகமான சொரூபத்தை தரிசனம் செய்வதைத் தவிர வேறெதிலும் என் மனம் ருசி தேடவில்லை. எந்நேரமும் தியானம் செய்து அதை என் மனக்கண்முன் நிறுத்தவே விரும்புகிறேன்.
மரண விபத்துக்களை விலக்கி அருள் செய்த படலம்
ஓம் ஸ்ரீ விநாயகனே போற்ற! ஸ்ரீ சரஸ்வதியே போற்றி!
ஸ்ரீ குருமஹாராஜனே போற்றி! குலதேவதைக்கும் ஸ்ரீ சீதாராமச்சந்திரனுக்கும் என்னுடைய பணிவான வணக்கங்கள். பூஜ்யகுரு ஸ்ரீசாயிநாதனை பக்தியுடன் சிரம் தாழ்த்தி வணங்குகிறேன்.
ஜய ஆனந்தம் நிரம்பியவரே சத்தகுருவே! ஞானத்தின் சொரூபமே! தூய்மையின் வடிவே! பிறவிப் பயத்தை ஒழிப்பவரே! பரிபூரணரே! கலியின் மலங்களை எரிப்பவரே ஜய ஜய!
பலவிதமான உணர்ச்சிகளும் எண்ணங்களும் மேல்மட்டத்தில் அலைகளாக எழும் ஆனந்தக் கடல் தாங்களே! உண்மையான பக்தர்களின் மீதுள்ள கிருபையினால், தேவரீர், தேவரீர் மாத்திரமே, அவ்வலைகளை கட்டுப்படுத்துகிறீர்.
அறையிருளில் பாம்புபோல் தெரிவது வெளிச்சம் வந்தவுடன் தானாகவே கயிறாகிவிடுகிறது. அறையிருளையும் வெளிச்சத்தையும் சிருஷ்டி செய்பவர் நீரே.
முதலில் பாம்பு போன்ற உருவ பிரமையை சிருஷ்டி செய்து பயத்தை உண்டுபண்ணுகிறீர். கடைசியில் அந்த பயத்தை நிவாரணம் செய்வபவரும் நீரே.
ஆதியில் அந்தகாரத்தில் (இருளில்), பாம்பும் இல்லாத, கயிறும் இல்லாத நிலையில், கயிற்றை பார்த்துப் பாம்பென்று மயக்கம் அடைவதற்கு இடமேயில்லாத சூழ்நிலையில், உருவமற்ற அவ்விருட்டை வியாபித்தவரும் நீரே.
உருவமற்ற நிலையில் இருந்து மங்கிய ஒளியில் உருவமொன்று தோன்றியபோது பாம்பெண்ணும் பிரமை உண்டாகியது. அந்த மயக்கமும் உம்முடைய சிருஷ்டியே.
ஒருகணத்தில் தெரியும் தோற்றம் மறுக்கணத்தில் மறைந்துவிடுவதும் கண்ணுக்குத் தெரிந்தும் தெரியாத தோற்றங்களும் உண்மையில் நீர் கண்ணாம்பூச்சி ஆடும் பிரபாவமே. இந்நிலையில் மாற்றமில்லாது இருந்தாலும், எவராலும் இதை ஆழங்கான முடியவில்லை.
தங்களை அறிந்துகொள்ளும் முயற்சியில் வேதங்கள் மௌனமடைந்து விட்டன. ஆதிசேஷன் தம்முடைய ஆயிரம் வாய்களால் போற்றியும், தங்களுடைய வாஸ்தவமான சொரூபத்தை அறிந்துகொள்ள முடியவில்லை. இவ்விதமிருக்க, நான் எப்படித் தங்களை புரிந்துகொள்ள முடியும்?
பாபா! தங்களுடைய தெய்வீகமான சொரூபத்தை தரிசனம் செய்வதைத் தவிர வேறெதிலும் என் மனம் ருசி தேடவில்லை. எந்நேரமும் தியானம் செய்து அதை என் மனக்கண்முன் நிறுத்தவே விரும்புகிறேன்.
No comments:
Post a Comment