valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 19 October 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

எவ்வளவு துர்நாற்றம் அடித்தாலும், எத்தனை சிறிய நீர்நிலையாக இருந்தாலும், ஒரு பன்றிக்கு அதுவே சொர்க்கம் என்பதில் சந்தேகம் ஏதும் உண்டோ?

ஜீவாத்மாவுக்கும் கிளிக்கும் ஓர் ஒற்றுமையுண்டு; இரண்டுமே சிறைப்பட்டிருக்கின்றன. ஒன்று மனித உடலில்; மற்றொன்று கூண்டில். சுதந்திரத்தை இழந்தபோதிலும் கிளிக்கு கொண்டே சொர்க்கம்!

சுதந்திரத்தின் குதூகலம் அறியாத கிணற்றுத் தவளையைப் போல், கிளி தன கூண்டிலேயே எல்லா சுகங்களையும் காண்கிறது; ஆசைகள் நிரம்பிய ஜீவாத்மாவும் அவ்வாறே.

ஆஹா, என்னுடைய கூண்டு எவ்வளவு அழகாக இருக்கிறது! தங்கத்தாலான குறுக்குத்தண்டிலிருந்து இங்குமங்கும் சிறகடிப்பது எவ்வளவு ஆனந்தம்! தலைகீழாக தூங்கினாலும் கால் நழுவி விழுந்துவிடுவோமோ என்ற பயம் இல்லையே!

இக்கூண்டில் இருந்து வெளியேறினால், என்னுடைய சுகங்கள் அனைத்தையும் இழப்பேன். அது, தன்னுடைய சுகத்தைத் தானே அழித்துக் கொள்ளும் செய்கையாகிவிடும்! மாதுளம் முத்துக்களோ சுவையான மிளகாய்ப் பழமோ கிடைக்காது.

ஆயினும், நேரம் வரும்போது, அன்பாகத் தட்டிக்கொடுத்து கண்களுக்கு ஞானமெனும் மையை இட்டு சுதந்திரத்தின் உல்லாசத்தை உணர வைக்கும் அற்புதம் நிகழ்கிறது.

அன்பான தட்டு, (கையால் தொட்டு குரு அளிக்கும் தீட்சை) கிளியின் இயல்பான சுதந்திரத்தை உணர்வை எழுப்பி விடுவதால் கிளி பறந்தோடி விடுகிறது. திறந்த கண்ணோட்டத்துடன் சுதந்திரமாக வானமெங்கும் சிறகடித்து சந்தோஷமாக பறக்கிறது. அதைத் தடுத்து நிறுத்த யாரால் முடியும்?

இவ்வுலகமே கிளியை வா, வா என்றழைக்கிறது. பழத்தோப்புகளில் மாதுளையும் கொய்யாவையும் வயிறு புடைக்கும் வரை தின்னலாம். எல்லையற்ற வானில் எங்கும் பறந்து திரியலாம். புதிதாக கண்டெடுத்த சுதந்திரத்தை அமோகமாக அனுபவிக்கலாம்.

ஜீவாத்மாவின் நிலையம் இதுவே! இறைவனின் கருணையால் ஒரு குரு கிடைத்தவுடன் பந்தங்களில் இருந்து விடுபடுவது மட்டும் அல்லாமல் சுதந்திரத்தின் முக்தியையும் அனுபவிக்கிறான்.

கதை கேட்கும் அவதான சீலர்களே! (கவனத்துடன் பின் தொடரும் நற்குணவான்களே) சுத்தமான பிரேமையின் ரசமான ஒரு கதையை முழு கவனத்துடன் இப்பொழுது கேட்பீர்களா?

கடந்த அத்தியாயத்தில், சாமாவையும் உடன் சேர்த்து மிரீகரைச் சிதலீக்கு அனுப்பிய சமத்காரத்தைப் (திறமை மிக்க செயலைப்) பார்த்தீர்கள்.

நடக்கப் போவதை முன்கூட்டியே அறிந்து, நீளமான ஆசாமியால் (பாம்பால்) நேரக்கூடிய ஆபத்தைப் பற்றிச் சரியான நேரத்தில் மிரீகருக்கு எச்சரிக்கை விடுத்தார். 


No comments:

Post a Comment