valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 7 September 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஸ்ரீ ராமருடைய கதை மேலும் மேலும் சுவாரசியமடைந்து, பிரவசனம் செய்பவரும் கதை கேட்பவர்களும் கதையில் மூழ்கிப்போயிருந்த நேரத்தில், இந்த துஷ்ட ஐந்து அவ்வானந்தமான சூழ்நிலையை பங்கப்படுத்தியிருக்கும்.

ஆயினும், ஸ்ரீராம கதையின் மகிமையின் எதிரில் விக்கினங்கள் சக்தியிழந்துவிடும். துஷ்ட உயிரினங்களும் சுபாவத்தை மறந்து கதையை ரசிக்கும்.

துஷ்ட ஜந்துவின் தற்காலிகமான நற்குணத்தை நான் நம்பாத தயாராக இல்லை. நிலைமை கட்டுக்கடங்காமல் போவதற்கு முன், தேளை லாவகமாக எடுத்து, வெளியே வீசிவிடவேண்டும் என்று என் புத்தியில் தோன்றியது ஸ்ரீராமனின் கிருபையே.

ஆகவே, மிக ஜாக்கிரதையாக என்னுடைய மேல்துண்டின் இரண்டு நுனிகளையும் ஒன்று சேர்த்துத் தேளை துண்டிற்குள் சுருட்டித் தோட்டத்திற்கு எடுத்துக்கொண்டு போய்த் துண்டைப் பிரித்துத் தேளை விடுதலை செய்தேன்.

தேள் பயங்கரமான பிராணி; எதிர்பாராத வேளையில் தன சுபாவத்தை காட்டிவிடும். இவ்விதமாக நான் பயந்த போதிலும், இது விஷயமாக பாபாவின் ஆணை உறுதியாக இருந்தது. ஆகவே, நான் எப்படித் தேளைக் கொல்வேன்!

செவிமடுப்பவர்கள் இங்கு, 'தேள் கொல்லப்பட வேண்டிய விஷ ஜந்து தானே? அது கொட்டினால் சுகமாகவா இருக்கும்? ஏன் அதைக் கொல்லக் கூடாது ?' என்ற கேள்விகளை எழுப்பலாம்.

பாம்புகளையும் தேள்களையும் மற்ற நச்சு உயிரினங்களையும் யாரும் அலட்சியம் செய்யமாட்டார்கள். பாபா ஏன் அவற்றைத் தொந்தரவு செய்யாமல் விட்டுவிடும்படி சொல்கிறார்?

கதை கேட்பவர்கள் எழுப்பும் இந்த சந்தேகம் நியாயமானதே. எனக்கே இந்த சந்தேகம் இருந்தது. ஏற்கெனெவே இம்மாதிரியானதொரு சந்தர்ப்பத்தில் பாபா தெரிவித்த கருத்தைக் கேளுங்கள்.

அது இதைவிடக் கடினமான கேள்வியாகும். ஒரு சமயம் தீக்ஷிதர் வாடா (சத்திரம்) மாடியில் ஜன்னலருகில் பயங்கரமான பாம்பொன்று காணப்பட்டது.

ஜன்னல் சட்டத்திற்கு கீழேயிருந்த துவாரத்தின் வழியாக அறைக்குள் புகுந்திருக்கலாம். விளக்கொளி கண்ணைக் கூசியதால் சுருட்டிக்கொண்டு அங்கேயே உட்கார்ந்திருந்தது.

விளக்கின் பிரகாசத்தால் திகைத்துப் போயிருந்த பாம்பு, மனித நடமாட்டத்தை கண்டு அஞ்சியது. கூச்சலையும் குழப்பத்தையும் கண்டு திடுக்கிட்டுச் சிறிது நேரம் ஆடாமல் அசையாமல் இருந்தது.

முன்னுக்கும் நகரவில்லை; பின்னுக்கும் நகரவில்லை; தலையை மட்டும் மேலும் கீழும் ஆடியது. இதனால், பாம்பை எப்படிக் கொல்வது என்பது பற்றிய கலவரம் அங்கு ஏற்பட்டது.

சிலர் குச்சிகளையும் சிலர் கழிகளையும் எடுத்துக்கொண்டு விரைந்தனர். பாம்பு இருந்த இடம் குறுகலாகவும் இடக்கு முடக்காகவும் இருந்ததால், பாம்பை அடிக்க முயன்றவர்கள் மூளையைக் கசக்கினர்.


No comments:

Post a Comment