valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 24 August 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

தீட்சிதர் பாராயணம் செய்யும்போது யாராவது கேட்கவேண்டும். சாயியினுடைய கிருபையினால் எனக்கு பாகவதத்தை கேட்கும் நல்வாய்ப்புக் கிடைத்தது. அது எனக்கு சாயி செய்த் பெரிய உபகாரம்.

நான் பகலிலும் இரவிலும் இப் புனிதமான கதைகளைக் கேட்கப் போனேன். நான் சென்ற சமயம் அதிருஷ்டவசமாக ஒரு தொடர் ஆரம்பமாகியது; கேட்டுத் தூய்மையடைந்தேன்.

ஒருநாள் இரவு, அந்தப் பரமவித்திரமான கதையை கேட்டுக்கொண்டிருந்தபோது  சிறியதானாலும் விசித்திரமான சம்பவமொன்று நிகழ்ந்தது; கதை கேட்பார்களை! இக் கதையை கேளுங்கள்.

நான் என்ன செய்ய முடியும்? ஒரு கதையை விவரித்துக்கொண்டிருக்கும்போதே நடுவில் மற்றொரு கதை என் மனத்தில் தோன்றுகிறது. கேட்பதற்கு அருகதையுள்ள கதையென்று தெரிந்த பிறகும், நான் எவ்வாறு அதை அசட்டை செய்ய முடியும்?

ராமாயணத்திலிருந்து ஒரு சுவாரசியமான கதை நடந்துகொண்டிருந்தது. ஹனுமார் தம் தாயாரிடம் இருந்து ஸ்ரீராமர் யார் என்று தெரிந்துகொண்டிருந்த போதிலும், தம் சுவாமியின் சக்தியைப் பரீட்ச்சை செய்து பார்க்க முயற்சி செய்து பெருந்துன்பத்தில் மாட்டிக்கொண்டார்.

ஸ்ரீராமனுடைய அம்பின் இறகுகள் எழுப்பிய காற்று அவரை வானத்தில் புரட்டி உருட்டியதில் திக்குமுக்காடிப் போய் மூச்சுத் திணறினார். அவருடைய தகப்பனாரான வாயு பகவான் அந்த சமயத்தில் அங்கு வந்து சேர்ந்தார்.

தகப்பனாரின் புத்திமதியின்படி ஹனுமார் ஸ்ரீராமரை சரணடைந்தார். கதையின் இந்தப் பகுதி விவரிக்கப் பட்டுக்கொண்டிருந்தபோது என்ன வினோதம் நடந்ததென்று பாருங்கள்.

கேட்பவர்களுடைய கவனம் கதையில் மூழ்கிப் போயிருந்தபோது  பேராபத்தின் உருவமான தேள் ஒன்று யாருக்கும் தெரியாமல் அங்கே தோன்றியது.

தேளுக்கென்ன கதையில் அவ்வளவு ஈடுபாடு! எனக்குச் சற்றும் தெரியாமலேயே என் தோளின்மீது குதித்து அங்கே பத்திரமாக உட்கார்ந்துகொண்டு கதையின் சுவையை அனுபவித்தது.

கதை கேட்கும்போது பாபாவின் பாதுகாப்பை அனுபவித்தேன்; நடந்தது ஒன்றுமே எனக்குத் தெரியாது. ஹரிகதையை கவனமாகக் கேட்பவனை ஹரியே ரட்சிக்கிறார் அல்லரோ!

யதேச்சையாக என் பார்வை அப்பக்கம் திரும்பியது. என்னுடைய வலத்தோளின் மீதிருந்த மேல்துண்டின்மீது பயங்கரமான தேள் ஒன்று சுகமாக அமர்ந்து கொண்டிருந்தது.

தம்முடைய ஆசனத்தில் உட்கார்ந்துகொண்டு கவனமாக கதை கேட்பவரைப் போல் ஆடாது அசையாது அமைதியாக உட்கார்ந்துகொண்டிருந்தது.

வாலைச் சிறிது  அசைத்திருந்தாலும், சுபாவத்தினால் என்னைக் கொட்டிப் பெருந்துன்பம் அளித்திருக்கும். 


No comments:

Post a Comment