ஷிர்டி சாயி சத்சரிதம்
ஒரு தம்பிடி கொடுக்கப்பட்டால் பாபா அதைத் தம் ஜோபியில் போட்டுக் கொள்வார். ஆனால், எவராவது இரண்டு பைசா நாணயத்தை வைத்தால், அதை யார் வைத்தாரோ அவரிடமே திருப்பிக் கொடுத்துவிடுவார். வெகுகாலம் இதுவே அவருடைய கிரமமாக இருந்தது.
சில காலத்திற்குப் பிறகு, பாபாவின் மகாத்மியம் பரவியது. பக்தர்களுடைய கூட்டம் ஷீரடியில் குழுமியது. சாஸ்திர விதிகளோடு கூடிய பூஜையும் ஆரம்பிக்கப் பட்டது.
சாஸ்திர விதிகளின்படி, எந்தப் பூஜையும் பொன்னும் மலர்களும் தக்ஷினையும் சமர்ப்பணம் செய்யப் படாமல் நிறைவு பெறாது. இதை நித்திய வழிபாடு செய்தவர்கள் அறிந்திருந்தனர் .
மன்னனுக்கு ராஜாபிஷேகம் செய்யும்போதும் பாதபூஜை செய்யும்போதும் குடிமக்கள் பரிசுகளையும் வெகுமதிகளையும் கொண்டுவருகின்றனர். அதுபோலவே, குரு பூஜைக்கும் தக்ஷிணை சமர்ப்பணம் செய்யப் படவேண்டும்.
தக்ஷிணை கொடுப்பவர்கள் உயர்ந்த பதவியை அடைகின்றனர். பொருளை தட்சிணையாக கொடுப்பவர்கள் உயர்ந்த ஞானந்தை அடைகிறார்கள்; பொன்னை தட்சிணையாக கொடுப்பவர்கள் மனத்தூய்மையை அடைகிறார்கள்; என்று வேதம் மொழிகிறது.
அரைத்த சந்தனத்தை தெய்வத்திற்கு பூசுவதால் மங்களம் உண்டாகிறது. அக்ஷதை சமர்ப்பணம் செய்வதால் ஆயுள் விருத்தியாகிறது. மலர்களும் தாம்பூலமும், செல்வதையும் அஷ்ட ஐசுவரியங்களையும் அளிக்கின்றன. அதுபோலவே, தக்ஷிணை நிறைந்த செல்வத்தை அளிக்கிறது.
எப்படிச் சந்தனமும் அக்ஷதையும் மலர்களும் தாம்பூலமும் பூஜை திரவியங்களில் முக்கியமானவையோ, அப்படியே தக்ஷினையும் சுவர்ணபுஷ்பமும் மிகுந்த செல்வத்தை அடைய முக்கியமானவை.
தெய்வ பூஜைக்கு தக்ஷிணை அவசியமானது; ஒரு விரதத்தை முடிக்கும்போது தக்ஷிணை கொடுக்கப் படவேண்டும்.
உலகியல் விவகாரங்களைஎல்லாம் பணத்தைக் கொடுத்தும் வாங்கையுமே நடக்கின்றன.தங்களுடைய புகழையும் கௌரதையும் தக்க வைத்துக்க கொள்ள, மக்கள் அம்மாதிரியான சமயங்களில் தாராளமாகவே செலவு செய்கின்றனர். (கலியாணம், கிருகப் பிரவேசம் போன்றவை)
'ஹிரண்ய கர்ப்ப கர்பஸ்தம்' என்று ஆரம்பிக்கும் மந்திரத்தை ஓதி, ஒரு தெய்வத்தின் பூஜையில் தக்ஷிணை அளிக்க வேண்டுமென்பது வழக்கமாக இருக்கும்போது, ஒரு ஞானியைப் பூஜை செய்யும்போது ஏன் தக்ஷிணை கொடுக்கக் கூடாது?
ஒரு மகானை தரிசனம் செய்யப் போகும்போது அவரவர்களுடைய ஞானத்திற்கு ஏற்றவாறு பலவிதமான எண்ணங்களுடன் நோக்கங்களுடனும் மக்கள் செல்கின்றனர். இது விஷயத்தில் ஒருமையை எதிர்பார்க்க முடியாது.
சிலர் பக்தியுடனும் செல்கின்றனர். சிலர் ஞானியுனுடைய சக்தியை சோதனை செய்யச் செல்கின்றனர். சிலர் தங்களுடைய மனதில் என்ன இருக்கிறது என்பதைக் கண்டுபிடிக்க முடிந்தால்தான் அவர் ஞானி என்று நினைக்கின்றனர்.
No comments:
Post a Comment