ஷிர்டி சாய் சத்சரிதம்
முதல் தரிசனத்தின்போது தக்ஷிணை ஏற்றுக் கொள்கிறார்; இரண்டாவது தரிசனத்தின்போது மறுபடியும் தக்ஷிணை கேட்கிறார். விடை பெற்றுக் கொள்ளும்போது "தக்ஷிணை கொண்டு வாரும்" என்று இன்னொருமுறை கேட்கிறார். ஒவ்வொரு நிமிடமும் எதற்காக தக்ஷிணை?
சடங்குகளுடன் ஆசாரமாக செய்யும் பூஜையில் ஆசமனம் செய்வதற்கு நீர் அளிக்கப்படுகிறது. நைவேத்தியம் (படையல்) ஆனவுடன் கைகளையும் வாயையும் அலம்பிகொள்வதற்கு நீர் அளிக்கப் படுகிறது. பிறகு கைக்கு வாசனைத்திரவியம் பூசியபின் தாம்பூலம் அளிக்கப் படுகிறது. இதெல்லாம் நடந்து முடித்தபிறகு, கடைசியாகத்தான் தக்ஷிணை அளிக்கப்படுகிறது.
ஆனால், பாபாவின் கிரமமே வேறு. சந்தானம் பூசப்பட்டுக் கொண்டிருக்கும்போதே, அக்ஷதை அலங்காரம் செய்யப்படும்போதே, தக்ஷிணை உடனே கொடுக்கப்பட வேண்டுமென்று எதிர்பார்ப்பார்.
'ஓம் தத் சத் ப்ரம்மார்ப்பன மஸ்து' என்று ஓதி, பூஜையின் முடிவில் கொடுக்க வேண்டிய தக்ஷினையை 'சுக்லாம்பரதரம்' குட்டும்போதே பாபா கேட்பார்; அதை உடனே கொடுத்துவிட வேண்டும்.
இருப்பினும் இந்த சந்தேகத்தை பெருமுயற்சி ஏதும் எடுக்காமலேயே நிவிர்த்தி செய்துகொள்ளலாம். கொஞ்சம் கவனமாக கேட்பின் நீங்கள் நன்கு புரிந்துகொள்வீர்கள்.
செல்வம் சேமிப்பதன்nokkame தருமகாரியங்களில் செலவிட வேண்டும் என்பதுதான். அதற்குப் பதிலாக, அல்பமான புலனின்ப நுகர்ச்சியிலேயே அது செலவாகிவிடுகிறது;
செல்வம் தருமத்தை வளர்க வேண்டும்; தருமத்திலிருந்து இறைஞானம் தோன்றும். செல்வம் இவ்விதமாக நம்மை ஆன்மீக பாதையில் அழைத்துச்சென்று மனதிற்கு மகிழ்ச்சியையும் சாந்தியையும் அளிக்கிறது.
ஆரம்பித்தில் வெகுகால பரியந்தம் பாபா எதையும் ஏற்றுக்கொள்ளவில்லை. எரிந்துபோன தீக்குச்சிகளையே சேர்த்து ஜோபி நிறைய வைத்திருந்தார்;
பக்தரோ, பக்தரல்லாதவரோ , அவர் எவரிடமும் ஏதும் கேட்கவில்லை. யாரவது ஒருவர் அவர் முன்னால் ஒரு தம்பிடியோ துகாணியோ வைத்தால் அக்காசுக்கு புகையிலையோ எண்ணையோ வாங்கிகொள்வார்.
அவருக்குப் புகையிலையின் மேல் பிரேமை; பீடியோ அல்லது சீலிமோ (புகை பிடிக்கும் மண் குழாய்) பிடிப்பார். சிலீம் செய்த சேவை எல்லையற்றது; அது புகையாத நேரமேயில்லை.
பிறகு, யாரோ ஒருவருக்குத் தோன்றியது. ஞானியை தரிசனம் செய்ய எப்படி வெறுங்கையுடன் செல்வது? ஆகவே, அவர் கையில் சிறிது தக்ஷிணை எடுத்துக் கொண்டு சென்றார்.
No comments:
Post a Comment