valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 29 January 2015

ஷிர்டி சாயி சத்சரிதம் 

"இவ்வுலகில் ஒவ்வொருவருக்கும் யாரோ இருக்கிறார்; யாராவது ஒருவர் இருக்கிறார். ஆனால், எனக்கோ இங்கு யாருமே இல்லை; அல்லா, அல்லா மட்டும்தான் இருக்கிறார்.-

"என்னைத் தம்முடைய ஜீவப்பிராணனை விட அதிகமாக எவர் நேசிக்கிறாரோ அவரே எனக்கு வேண்டும். அப்பேர்ப்பட்டவர்க்கு  ஆர் ஒரு குணம் (மடங்கு) கொடுத்தால் நான் நூறு குணம் (மடங்கு) திருப்பியளிப்பேன். "

கோடீச்வரராக இருக்கலாம், அவரும் எங்காவது ஏழை எளியவர்களிடம் தக்ஷிணைக்காக கடன் வாங்கிக்கொண்டு வரும்படி ஆணையிட்டார். 

செல்வரோ, ஆண்டியோ, ஏழையோ, பலமில்லாதவரோ, பணமில்லாதவரோ- சாயி அவர்களுக்குள்ளே ஒருவர் முக்கியமானவர், மற்றவர் முக்கியம் அல்லர் என்று பேதம் பார்த்ததில்லை. 

இவ்வாறு, யாராக இருந்தாலும் சரி, தம்முடைய கௌரவத்தை எல்லாம் இறக்கி வைத்துவிட்டு பாபாவின் ஆக்ஞையை சிரமேற்கொண்டு, ஏழைகளின் வீடுகளுக்குச் சென்று பாபாவுக்கு தக்ஷிணை கொடுப்பதற்காகப் பிச்சை எடுத்தனர். 

சுருங்கச்  சொன்னால், தக்ஷிணை கேட்டு வாங்கும் சாக்கில் பாபா அவர்களுக்குப் பணிவை போதனை செய்தார். 

ஒரு சாதுவுக்குப் பணம் எதற்காக வேண்டும் என்று எவருக்கும் சந்தேஹம் எழலாம். ஆனால், ஆழமாகச் சிந்தித்தால், மிக எளிதாக இந்த சந்தேஹம் நிவிர்த்தியாகும். 

சாயி பூர்ணகாமர் (எல்லா ஆசைகளும் முழுமையாக நிறைவேறியவர்) என்றால் அவர் தக்ஷிணை எதற்காக கேட்கவேண்டும்? பக்தர்களை பணம் கேட்பவரை, விருப்பமேதும் இல்லாதவர் என்று எவ்வாறு சொல்ல முடியும்?

எவருக்கு வைரமும் சிக்கிமுக்கிகல்லும் ஒன்றோ, எவருக்குத் தாமிரக் காசும் தங்க மெஹராவும் ஒன்றோ, அவர் எதற்காகப் பணத்துக்காக கை நீட்டுகிறார்?

வயிற்றுப் பிழைப்புக்காகப் பிச்சை எடுப்பவர், ஏழ்மையும் பற்றற்ற வாழ்வையும் விரதமாக கொண்டவர், ஆசைகள் ஏதுமின்றி வைராக்கியத்துடன் வாழ்பவர் எதற்காக தக்ஷிணை எதிர்பார்க்கிறார்?

எவருடைய வாசலில் அஷ்டசித்திகளும் காத்துக் கொண்டிருக்கின்றனவோ, எவருடைய ஆணையை நவநிதிகளும் எதிர்பார்த்துக்கொண்டிருகின்றனவோ அவருக்குப் பணம் தேவைப்படும் இழிநிலை ஏன்?

இவ்வுலக இன்பங்களைத் 'தூ' வென்று உதறியவர்களுக்கு, பரவுலக வாழ்வையும் வெறுத்து லட்சியம் செய்யாதவர்களுக்கு, எங்கு நன்மை இருக்கிறது என்பதை நன்கறிந்த பற்றற்ற சாதுக்களுக்குப் பணம் எதற்காக தேவைப்படுகிறது?

பக்தர்களின் க்ஷேமத்திற்கும் மங்களத்திர்காக்கவுமே வாழும் ஞானிகளுக்கும் சாதுக்களுக்கும் சான்றோர்களுக்கும் செல்வம் எதற்காக?

சாதுக்கள் எதற்காக தக்ஷிணை கேட்கிறார்கள்? அவர்களுடைய மனம் ஆசையற்று இருக்கவேண்டும். பக்கீராக ஆகியும் பணத்தாசை விடாமல் பைசாவை ஏன் நித்திய ஆராதனை செய்கிறார்கள்?  


No comments:

Post a Comment