ஷிர்டி சாயி சத்சரிதம்
"போனால் உங்களுக்கு சுபம் உண்டாகும்; பாபாவின் வழிமுறைகள் கற்பனைக் கெட்டாதவை! 'நீரே கதி' என்று அவரை சரணம் அடையுங்கள்; நீங்கள் மங்களம் நிறைந்தவராகி விடுவீர்கள்".
இந்த யோசனை சேட்டுக்கு மிகவும் பிடித்திருந்தது; ஷிர்டி போவதென்று தீர்மானித்துவிட்டார். முடிவு செய்தவாறே சில நாள்களில் ரத்தன்ஜி ஷிர்டி வந்து சேர்ந்தார்.
தரிசனத்திற்காக மசூதிக்குச் சென்று சாயி பாதங்களில் விழுந்து நமஸ்காரம் செய்தார். புண்ணியகோடியான சாயிமஹராஜைப் பார்த்தவுடனே அவருடைய இதயத்தில் பிரேமை பொங்கியது.
ஒரு பூக்கூடையை திறந்து மாலை ஒன்றை எடுத்து அன்புடன் பாபாவின் கழுத்தில் இட்டார். பிறகு, அவர் பலவிதமான சிறந்த பழங்களை பாபாவின் பாதங்களில் சமர்ப்பணம் செய்தார்.
மிகுந்த விநயத்துடன் பாபாவின் அருகில் ரத்தன்ஜி உட்கார்ந்துகொண்டார். பயபக்தியுடன் அவர் பாபாவிடம் பிரார்த்தனை செய்ததை இப்பொழுது கேளுங்கள்.
"மக்கள் பெரிய சங்கடங்களில் மாட்டிக்கொள்ளும்போது பாபாவின் பாதங்களை நாடுகிறார்கள். பாபா உடனே அவர்களை ரட்சிக்கிறார்; இதுவே நான் கேள்விப்பட்டது.-
"ஆகவே, நான் உங்களை தரிசனம் செய்து ஒரு வேண்டுகோள் விடுக்கவே இவ்வளவு தூரம் கடந்து இங்கு வந்திருக்கிறேன். உங்களுடைய பாதங்களில் என் வேண்டுகோளை வைக்கிறேன்; மகாராஜ் என்னை நிராகரணம் (புறக்கணிப்பு) செய்துவிடாதீர்கள்!"
பாபா அவரிடம் கூறினார், "ஆக, இவ்வளவு நாள்கள் கழித்து இன்று என்னிடம் வந்திருக்கிறீர்! ஆனால், இப்பொழுது முதலில் எவ்வளவு தக்ஷிணை கொடுக்க விரும்புகிறீரோ அதைக் கொடும். அப்பொழுதுதான் உமக்குப் பலன் கிடைக்கும்."
யார் தரிசனத்திற்கு வந்து அவருடைய பாதங்களில் விழுந்து வணங்கினாலும், அவர் ஹிந்துவானாலும் சரி, முஸ்லீமானாலும் சரி, பார்சியானாலும் சரி, பாபா முதலில் அவரிடம் தக்ஷிணை கேட்பார்.
தக்ஷிணை என்ன சொல்பமான தொகையா? ஒன்றா இரண்டா அல்லது ஐந்தா? கிடையவே கிடையாது! நூறோ ஆயிரமோ லக்ஷமோ கோடியோ அவர் விரும்பிய தொகையைக் கேட்பார்.
தக்ஷிணை கொடுக்கும்போது, "மேலும் கொண்டுவா" என்று கேட்பார். கையில் பணம் தீர்ந்துவிட்டது என்று சொன்னால், 'கடன் வாங்கி கொண்டு வா' என்று சொல்வார். யாரிடமும் மேற்கொண்டு கடன் வாங்க முடியாது என்ற நிலை ஏற்பட்ட பிறகுதான் தக்ஷிணை கேட்பதை நிறுத்துவார்.
அந்நிலையில் பக்தரிடம் சொல்வார், "சிறிதும் கவலைப்படாதீர்! நான் உமக்கு மூட்டை மூட்டையாக பணம் தருகிறேன். அமைதியாக என்னருகில் நிச்சிந்தையாக உட்காரும்.
No comments:
Post a Comment