valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 3 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

பிறகு, அவர் மசூதியின் படிகளில் ஏறித் தம் குருவின் (கோலப் நாத்) பாதங்களிலேயே வணங்கிவிட்டு, இரு கைகளையும் கூப்பிக் கொண்டு பேச்சற்று மௌனமாக நின்றார். 

குரு கோலப் சுவாமியை சந்நியாசிகளின் காவி உடையில் பார்த்தவுடனே, முலே சாஸ்திரி ஓடிச் சென்று அவருடைய பாதங்களை கட்டிக் கொண்டார். 

ஒரே கணத்தில் அவருடைய ஜாதி அபிமானம் ஒடிந்து வீழ்ந்தது. குருவை நேரில் கண்டதால் ஞானமென்னும் மையைப் பூசிக் கொண்டு அவருடைய கண்கள் பரிசுத்தமாயின. நிரஞ்சனரான (மாசில்லாத) குருவை கண்டவுடன் அவருடைய ஆத்மா ஞானத்தால் நிரம்பி வழிந்தது. 

கோணல் சிந்தனைகளும் சந்தேகங்களும் ஒழிந்தன; பாபாவின் மேல் அன்பு பீறிட்டது. பாதி மூடிய கண்களால் பாபாவினுடைய திருவடிகளையே உற்றுப் பார்த்துக் கொண்டு நின்றார். 

பல ஜன்மங்களில் செய்த நற்செய்கைகள் பழுத்து, அவருக்கு சாயி தரிசனம் கிடைத்தது. சாயிபாதம் என்னும் புண்ணிய தீர்த்தத்தில் அவர் ஸ்நானம் செய்த பொது, தெய்வ அனுக்கிரஹம் தமக்குக் கிடைத்ததை உணர்ந்தார். 

'சிறிது தூரத்திலிருந்தே பாபாவின் மீது பூச்சொரிந்தவர், திடீரென்று எப்படி பாபாவின் திருவடிகளில் தலை சாய்த்து வணங்கினார்?' கூடியிருந்தவர்கள் அனைவரும் ஆச்சரியத்தில் மூழ்கினர். 

மற்றவர் எல்லாரும் பாபாவின் ஹாரதிப் பாட்டை பாடிக் கொண்டிருந்த போது, முலே சாஸ்த்ரி மட்டும் குரு கோலப்பின் ஹாரதிப் பாட்டை உச்சஸ்வரத்தில் பாடினார். பாடப் பாட மேலும் மேலும் அவருக்கு குருவின் மேல் பிரேமை பொங்கியது. 

சிறப்பான மடி ஆசார நியதிகள் பற்றிய கர்வம் பிசுபிசுத்துப் போயிற்று. மேல்ஜாதிக்காரனை  தொடலாம், கீழ் ஜாதிக்காரனை தொடக் கூடாது என்னும் பிடிவாதம் உருகிப் போய்விட்டது. மாறாக, ஆனந்தத்தில் கண்களை மூடிக் கொண்டு சாஷ்டங்கமாக பாபாவுக்கு  தண்டனிட்டார். 

கண்களை திறந்து பார்த்தபோது, கோலப் சுவாமி மறைந்து விட்டிருந்தார். அவருடைய இடத்தில் பாபா உட்கார்ந்து கொண்டு  தக்ஷிணை கேட்டதை பார்த்தார்!

------------------------------------------------------------------------------------------------------------

134 - 2. வேத அங்கங்கள் (வேதாங்கம்) ஆறு 

1. சிக்ஷா - வேத மந்திரங்களின் சரியான உச்சரிப்பு, ஓதும் பொது ஸ்வரத்தை எங்கு உயர்த்துவது, எங்கே தாழ்த்துவது, எங்கே சாதரணமாக ஒலிப்பது என்பது பற்றிய கல்வி. 

2. சந்தஸ் - விருத்தம் அல்லது மெட்டு பற்றிய கல்வி. சமஸ்கிருத மொழியில் சுலோகங்கள், பல மெட்டுகளில் இயற்றப் பட்டிருக்கின்றன. 

3. வியாகரணம் - சமஸ்கிருத பாஷையின் இலக்கணக் கல்வி. 

4. நிருக்தம் - கடினமான பதங்களுக்கு அர்த்தம் - சொல்மூலம், சொல் வடிவம், இவை பற்றிய கல்வி. 

5. கல்பம் - வேத மந்திரங்களை பிரயோகம் செய்து வைதீகச் சடங்குகளை எப்படிச் செய்வது என்பது பற்றிய கல்வி. 

6. ஜ்யோதிஷம் - வான சாஸ்திரம், சோதிடம், நல்ல நேரத்தையும் நல்ல நாளையும் கண்டறிவது, இவை பற்றிய கல்வி. 


No comments:

Post a Comment