valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 10 July 2014

ஷிர்டி சாயி சத்சரிதம் 

பாபாவினுடைய ஆனந்தமான உருவத்தையும் அற்புதமான சக்தியையும் கண்டார். அவருடைய மனம் ஸ்தம்பித்து நின்றது. பாபாவை தாம் முதலில் அணுகிய முறையை கைவிட்டு விட்டார். 

பாபாவினுடைய அற்புதமான லீலையைப் பார்த்தவுடன், பசி, தாஹம் அனைத்தும் மறந்து போயின! தம் குருவின் தரிசனம் கிடைத்த பரவசத்தில் மூழ்கியிருந்தார். 

அவருடைய மனம் சமாதனமடைந்தது. கண்களில் ஆனந்த பாஷ்பம் பொங்க பாபாவினுடைய திருவடிகளில் நெற்றியை வைத்து வணங்கினார். 

அவர் கொண்டு வந்திருந்த தட்சிணையை பாபாவுக்கு சமர்ப்பணம் செய்தார். கண்களில் நீர் பொங்க, சந்தோஷத்தில் மயிர்க் கூச்செறிய மறுபடியும் பாபாவின் பாதங்களை வணங்கினார். 

தொண்டை அடைத்தது. "என்னுடைய சந்தேகங்களெல்லாம் நிவிர்த்தியானது மட்டுமல்லாமல், என்னுடைய குருவையும் சந்தித்து விட்டேன்" என்று அவர் கூறியபோது அஷ்டபாவம் இதயத்தை அடைத்தது. 

முலே சாஸ்த்ரி உட்பட அங்கிருந்தவர்களைனவரும் உலகில் பார்த்தறியாத இந்த பாபாவின் லீலையை கண்டு பயம் கலந்த அன்புடன் உணர்ச்சிவசப்படனர். இந்த அனுபவத்தை அடைந்த பிறகுதான் அவர்களுக்கு காவிசாயத்தின் மர்மம் விளங்கியது.!

சாயி மகாராஜ் பழையவர்தான். முலே சாஸ்திரியும் அதே நபர்தான். இவ்வாறிருக்க, குறிப்பிட்ட நேரத்தில் முலே சாஸ்திரியிடம் எதிர்பாராத மாற்றம் எப்படி ஏற்பட்டது என்றே அனைவரும் வியந்தனர். ஆனால், யாரால் மஹராஜின் சூக்குமமான வழிமுறைகளை புரிந்து கொள்ள முடியும்? அவருடைய லீலைகள் ஆராய்ச்சிக்கு அப்பாற்பட்டவை அல்லவோ!

சாயி தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவலுடன் ஒரு டாக்டர் நண்பருடன் ஷீரடிக்கு கிளம்பிய மாம்லதாருடைய அனுபவமும் இது போன்றே  அற்புதமானது. 

அந்த டாக்டர் ஒரு பிராமணர்; ஸ்ரீ ராமரை உபாசனை செய்தவர். நியம நிஷ்டையுடன் ஸ்நானம், சந்தியாவந்தனம், விரதங்கள் போன்ற சடங்குகளை எல்லாம் சாஸ்திர விதிகளின்படி நெறி தவறாது செய்தவர். 

சாயி பாபா ஒரு முஸ்லீம்; டாக்டருக்கு இஷ்ட தேவதையோ ஜானகி ராமன். ஆகவே அவர், தாம் சாயிபாபாவை வணங்க மாட்டார் என்பதைத் தம் நண்பருக்கு முதலிலேயே எச்சரித்துவிட்டார். 

"நான் ஒரு முஸ்லீமின் பாதங்களை வணங்க முடியாது; ஆகவே, ஆரம்பத்திலிருந்தே எனக்கு ஷிர்டி செல்வதில் விருப்பம் இல்லை" (என்று டாக்டர் சொன்னார்).

"உம்மை அங்கு யாரும் அவருடைய பாதங்களை தொடச் சொல்லி வற்புறுத்த மாட்டார்கள். இது விஷயமாக யாருமே துராகிரஹம் (உரிமை இல்லாவிடத்து வலிய நிகழ்த்தும் செயல்) செய்ய மாட்டார்கள். இம்மாதிரியான சிந்தனைகளை உதறிவிட்டு ஷிரிடிக்கு போவதற்கு முடிவெடுங்கள்.- 


No comments:

Post a Comment