valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 24 January 2013

ஷிர்டி சாயி பாபா

பாபா கனிவுடன் இயம்பினார், "வானம் மேகமூட்டமாக இருக்கிறது. ஆனால், மழை பெய்து விளைச்சலைக் கொண்டு வரும்; மேகங்கள் மறைந்து விடும்.

"எதற்காக பயப்பட வேண்டும்?" என்று சொல்லிக் கொண்டே தம்முடைய கப்ணியை இடுப்புவரை தூக்கி, சிவந்து போயிருந்த வீக்கங்களை  காண்பித்தார்.

கோழி முட்டையளவில் நான்கு சிவந்த வீக்கங்கள் நான்கு இடங்களில் பரவியிருந்தது தெரிந்தது. "பாருங்கள், உங்களுடைய உபாதைகளை எல்லாம் நான் என் மீதே எடுத்துக் கொள்ள வேண்டியிருக்கிறது" என்று பாபா கூறினார்
இந்த  தெய்வீகமான செயலைப் பார்த்து மக்கள் வியந்து போயினர். ஓ , இந்த ஞானிகள்தாம் எவ்வாறு மற்றவர்களின் அநேக உபாதைகளைத் தங்கள் மீது ஏற்றுக் கொள்கிறார்கள்!

ஞானிகளுடைய மனம் மெழுகைவிட இளக்கமானது; வெண்ணையைப் போல் உருகக் கூடியது! பக்தர்களின் மீது அவர்கள் வைக்கும் அன்பு உண்மையாகவே தன்னலமற்றது. பக்தர்கள் தாம் ஞானிகளுக்கு உற்றாரும் உறவினரும்!

ஒரு சமயம் நானா சாஹேப் சாந்தொர்க்கர் நந்தூர்பாரிளிருந்து பண்டர்பூருக்கு சென்றார்.

நானா ஒரு பரம பாக்கியசாலி! பாபாவிடம் அவர் வைத்திருந்த பக்தியும் செய்த சேவையும் பலனளித்து விட்டன. மகா விஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டம் அவருக்கு பூமியிலேயே கிடைத்து விட்டது. அவர் பண்டர்பூருக்கு மாம்லதாராக நியமிக்கப் பட்டார்.

நன்தூர்பாருக்கு வந்த உத்தரவில், உடனே பண்டர்பூருக்குச் செல்ல வேண்டும் என்று ஆணையிடப் பட்டிருந்தது. அவர் பாபாவை தரிசனம் செய்ய வேண்டுமென்ற ஆவலுடன் கிளம்பினார்.

ஷிர்டியே அவருக்கு முதல் பந்தர்பூர். ஆகவே, முதலில் பாபாவை தரிசனம் செய்து நமஸ்காரம் செய்ய வேண்டும் என்ற நோக்கத்துடன் குடும்பத்துடனும் பரிவாரத்துடனும் அவர் கிளம்பினார்.

ஆயினும், ஷிர்டிக்குக் கடிதம் எழுத வில்லை. தமது வரவு பற்றிச் செய்தியும் அனுப்ப வில்லை. மூட்டை முடிச்சுகளைக் கட்டிக் கொண்டு அவசரமாக ரயிலேறி விட்டார்.

நானா நந்தூர் பாரிலிருந்து இவ்விதமாக அவரசரமாக கிளம்பி விட்டார் என்று ஷீரடியில் யாருக்கும் தெரிந்திருக்க நியாயமில்லை. ஆனால், சாயியினுடைய கண்கள் எங்கும் இருந்ததால் அவருக்கு எல்லா நடப்புகளும் தெரிந்து இருந்தன.

நானா அவசரமாக கிளம்பி நிம்காங்க்வ் எல்லைக்கு வந்து சேர்ந்து இருப்பார். ஷீரடியில் ஓர் அதிசயம் நிகழ்ந்தது. கேளுங்கள்.

மஹால் சாபதி , ஆபா சிந்தே, காசிராம் ஆகிய பக்தர்களுடன் பாபா மசூதியில் இருந்தார்


No comments:

Post a Comment