valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 10 January 2013

ஷிர்டி சாயி சத் சரிதம்

சித்தராகிய சாயிக்கு பாகோஜியினுடைய  சேவை தேவையே இல்லை. இருப்பினும், பக்தர்களின் நல்வாழ்வுபற்றிய ஆழ்ந்த அக்கறையால், பாகோஜியை இந்த சேவையைச் செய்ய அனுமதித்தார்.

பூர்வ ஜன்மங்களில் செய்த மகா பாவங்களினால் பாகோஜி குஷ்டரோகத்தினால் பிடிக்கப் பட்டிருந்தார். சாயியின் சகவாசமாகிய விஷேசமான பாக்கியம் அவருக்குக் கிடைத்தது பெரும் புண்ணியமே.

பாபா தினமும் லெண்டிக்குப்  போய்வந்தபோது பாகோஜி அவருக்குக் குடை பிடித்துக் கொண்டே செல்வார். உடலெங்கும் குஷ்டரோகத்தினால் ஏற்பட்ட புண்கள் நிறைந்திருந்தன; ஆயினும், அணுக்கத் தொண்டர்களில் முதல்வர் அவரே!

தினந்தோறும் காலைவேளையில் பாபா துனிக்கருகில்  இருந்த தூண்மீது  சௌகரியமாகச் சாய்ந்து கொண்டு உட்கார்ந்தவுடன், பாகோஜி சேவை செய்ய வந்து விடுவார்.

கால்களிலிருந்தும் கைகளிலிருந்தும் கட்டுகளைப் பிரித்துவிட்டு, நெய் தடவிப் பிடித்துவிடுவார். இவ்விதமாக பாகோஜி  சேவை செய்தார்

பூர்வஜென்மத்தில் மகாபாபிஷ்டரான  பாகோஜி, உடல் முழுவதும் ரத்தக் குஷ்டத்தினால் பாதிக்கப்பட்ட பெரு  வியாதியஸ்தரானாலும், பாபாவின் சிறந்த பக்தராகத் திகழ்ந்தார்.

கால்விரல்கள் அனைத்தும் குஷ்டரோகத்தால் அழுகி விழுந்துவிட்டன. உடல் சகிக்க முடியாத துர்நாற்றம் அடித்தது; அவ்வளவு துர்பாகியமாக்கியமானவருக்கு பாபாவுக்கு சேவை சித்து மகிழும் மகத்தான பாக்கியம் கிடைத்தது.

ஓ , நான் எததனை அற்புதமான லீலைகளை விவரிப்பேன்! ஒருசமயம் பிளேக் கொள்ளை நோய் கிராமத்தை தாக்கியது. அப்பொழுது நடந்த அற்புதமொன்றைக் கேளுங்கள்.

தாதா சாஹேப் காபர்டேவின் பாலகன், பாபாவின் சஹாவாசத்தில் தாயாருடன் ஆனந்தமாக ஷீரடியில் இருந்தான்.

பாலகன் மிகச் சிறியவன், தாப ஜுரத்தால் தவித்தான்; (காபர்டேவின்  மனைவி - லக்ஷ்மி பாய் ) மனமுடைந்து போய்  அவஸ்தைப் பட்டாள் .

அவளுடைய இல்லம் அமராவதியில் இருந்தது; வீடு திரும்பி விட வேண்டும் என்று நினைத்தாள் . ஆகவே, சாயங்கால நேரத்தில் தகுந்த வாய்ப்பு கிடைத்தபோது பாபாவிடம் அனுமதி பெறுவதற்காக வந்தாள் .

பாபா மாலையில் சுற்றி வந்து கொண்டிருந்தபோது சத்திரத்துக்கு அருகில் வந்தார். காபர்டேவின் மனைவி பாபாவின் பாதங்களைப் பிடித்துக் கொண்டு, நடந்த விஷயத்தை சொன்னாள் .

இயல்பாகவே பெண்கள் பயந்த சுபாவமுள்ளவர்கள். குழந்தையினுடைய ஜுர  நடுக்கம் நிற்கவே இல்லை. போதாதற்கு கொடுமையான பிளேக் நோயைப் பற்றிய பீதியும் இருந்தது. குழந்தையினுடைய ஜுரத்தைப் பற்றியே மீண்டும் மீண்டும் முறையிட்டாள்.


No comments:

Post a Comment