ஷீர்டி சாய் சத்சரிதம்
நாசிக்கில் 'காலாராமர் கோயிலுக்குச் சென்றபோது எதிர்பாராமல் நரசிங்க மஹராஜ் என்னும் ஞானியை தரிசனம் செய்தனர்.
பக்தர்கள்
குழாம் சூழ்ந்திருந்தபோதிலும், மஹராஜ் சட்டென்று எழுந்துவந்து கர்னிக்கின்
மணிக்கட்டைப் பிடித்துக்கொண்டு, "என்னுடைய ரூபாயைக் கொடு" என்று கேட்டார்.
கர்னிக் ஆச்சரியமடைந்து, மிகுந்த ஆனந்தத்துடன் ரூபாயைக்
கொடுத்தார். தாம் முன்னம் மனத்தளவில் சமர்ப்பணம் செய்த ஒரு ரூபாயை சாயியே
இப்பொழுது வாங்கிக்கொண்டார் என்று உணர்ந்தார்.
'சாயி
வாங்கிக்கொண்டார்' என்று சொல்வது முற்றிலும் சரி என்று சொல்லமுடியாது.
கொடுப்பதைப்பற்றிய எண்ணம் மனத்தின் மூலையில் எங்கோ அடங்கியிருக்கும்
சமயத்தில், சாயி பலாத்காரமாகப் பிடுங்கிக்கொள்கிறார். அதுதான் இங்கு
நடந்தது!
மனிதனின் நெஞ்சத்தில் எத்தனையோ சங்கற்பங்களும்
விகற்பங்களும் அலைமேல் அலையாக ஓடுகின்றன. முதலில் ஒரு நல்ல எண்ணம்
தோன்றுகிறது; ஆனால், அதைச் செயல்படுத்தும் தருணம் வரும்போது எத்தனையோ
கற்பனைகள் குறுக்கிடுகின்றன.
ஆயினும் ஆரம்பித்தில் தோன்றிய அலைதான், அது ஒரு நல்ல எண்ணமாக இருக்கும் பட்சத்தில், ஊட்டம் பெற்று மங்களமான செய்கையாக முடிகிறது.
அந்த
நல்ல திட்டத்தின்மேல் மனத்தைக் குவிக்கவேண்டும்; திடமாக அப்பியாசம்
செய்யவேண்டும்; திரும்பத் திரும்ப மனத்தில் உருட்ட வேண்டும்; அதை மறந்துபோக
விடக்கூடாது; எப்பாடுபட்டாவது வாக்கை (திட்டத்தை) நிறைவேற்றவேண்டும்.
ஆப்பாசாஹேப்
ஒரு நேரத்தில் அந்த வார்த்தைகளை சொல்லிவிட்டு, பிறகு மறந்துபோகும்
வாய்ப்பு இருக்கவே செய்தது. ஆகவே அந்த வார்த்தைகள் சொல்லப்பட்ட தினத்தன்றே
அவற்றை நிறைவேற்றிவைத்து பக்தியின் பெருமையை இவ்வுலகம் அறியும்படி செய்தார்
சாயி!
மொத்தமாகப் பத்தொன்பது ரூபாய் கைக்கு வந்தபின், அவர் ஏன்
ஒன்பது ரூபாயைத் திருப்பிக் கொடுக்கவேண்டும்? ஏனெனில், ஆப்பாவின் நிறைவேறாத
விருப்பம் பாத்து ரூபாய்க்கு குறையாமல் கொடுக்கவேண்டும் என்பதே!
பாபாவின்
கையால் தொடப்பட்ட இந்த ஒன்பது ஆணிப்பொன் நாணயங்களால் ஆன அட்டிகை,
வாஸ்தவத்தில் அவர் பக்தகோடிகளுக்கு நவவிதபக்தி என்னும் ஆன்மீகப் பாதையை
ஞாபகப்படுத்தும் சாதனமே.
பாபா தேகவியோகம் அடைந்த கதையை கேட்கும்போது, கடைசி நேரத்தில் அவர் ஒன்பது ரூபாய் தானம் செய்த புதுமையைப்பற்றிக் கேட்பீர்கள்.
ஆப்பாவின்
மனைவி உடலாலும் வாக்காலும் மனத்தாலும் ஒன்றி, ஒரே ஒரு ரூபாயை தக்ஷிணையாக
அளித்தார். அதை பாபா மிகுந்த திருப்தியுடன் ஏற்றுக்கொண்டார். மேலும்
வேண்டுமென்று அவரைக் கேட்கவேயில்லை.
ஆனால், ஆப்பாவோ, தம் மனைவி
கொடுத்த தக்ஷிணை அற்பமான தொகை என்று நினைத்தார். "நான் வீட்டில்
இருந்திருந்தால் அந்தப் பக்கீருக்கு அங்கேயே அப்பொழுதே அதைப் போல்
பத்துமடங்கு அளித்திருப்பேன்" என்று அவர் நினைத்தார்; சொன்னார்.
No comments:
Post a Comment