valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 25 March 2021

 ஷீர்டி சாயி சத்சரிதம்

நண்பர் சித்ரேவிடம் மூன்று ரூபாய் இருந்தது. ஆப்பா அதையும் வாங்கிப் பக்கீரிடம் கொடுத்தார். அப்பொழுதும் பக்கீர் மேலும் வேண்டுமென்று கேட்பதை நிறுத்தவில்லை.


ஆப்பாசாஹெப் பக்கீரிடம் சொன்னார், "வீட்டுக்கு வந்தால் மேலும் தருவேன்". பக்கீர் அதற்கு ஒப்புக்கொண்டார். மூவரும் ஆப்பாவின் வீட்டுக்குத் திரும்பினர்.


வீட்டுக்குத் திரும்பியவுடனே ஆப்பா மேலும் மூன்று ரூபாய் கொடுத்தார். அதுவரை மொத்தம் ஒன்பது ரூபாய் கொடுத்தாயிற்று; ஆனால், பக்கீர் அப்பொழுதும் திருப்தி அடைந்தாரில்லை!


அவர் மேலும் தக்ஷிணை கேட்டபோது ஆப்பா சொன்னார், "என்னிடம் இப்பொழுது ஒரே ஒரு பத்து ரூபாய் நோட்டுதான் இருக்கிறது.-


"சில்லறை நாணயங்கள் எல்லாவற்றையும் கொடுத்துவிட்டேன். வேறு சில்லறை இல்லை". "நோட்டைக்கொடுத்துவிடலாமே" என்று பக்கீர் சொன்னார். ஆப்பா நோட்டைக் கொடுத்துவிட்டார்.


பத்து ரூபாய் நோட்டு கைக்கு வந்தவுடன், ரூபாய் நாணயங்கள் ஒன்பதையும் திருப்பிக் கொடுத்திவிட்டுப் பக்கீர் வந்த வழியே மிக வேகமாகத் திரும்பிச் சென்றுவிட்டார்.


பக்தர்கள் தாமாகவே வெளிவிடும் வார்த்தைகள் என்னவோ, அவற்றை சாயி பரிபூரணமாக நிறைவேற்றிக்கொள்வார் என்னும் உறுதியே இக் காதையின் சாரமாகும்.


கேட்பவர்கள் உற்சாகம் கொண்டவர்களாக இருப்பதால், இந்த நேரத்தில் என் ஞாபகத்திற்கு வருகின்ற, இதே கருத்தை வெளிப்படுத்தும் இன்னொரு காதையை சொல்கிறேன். மிகுந்த பயபக்தியுடன் கேளுங்கள்.


ஹரிபாவு கர்னிக் என்ற பெயர்கொண்ட பக்தரொருவர் இருந்தார். டஹானா என்ற கிராமத்தில் வசித்த இவர், சாயியிடம் அன்னன்னிய பக்தி வைத்திருந்தார்.


1917 ஆம் ஆண்டு குரு பூர்ணிமா புண்ணிய தினத்தன்று ஷிர்டிக்கு புனித பயணமாக சென்றார். அப்பொழுது நடந்த நிகழ்ச்சியைத்தான் நான் இப்பொழுது சொல்லப்போகிறேன்.


விதிமுறைகளின்படி பூஜையை செய்தபின், உடைகளையும் தக்ஷிணையையும் அர்ப்பணம் செய்துவிட்டு அனுமதி பெற்றுக்கொண்டு கிளம்பினார். மசூதியின் படிகளில் இறங்கியபோது மனத்தில் ஓர் எண்ணம் உதித்தது.


திரும்பிச் சென்று மேலும் ஒரு ரூபாய் தக்ஷிணையாக அளிக்க வேண்டுமென்று தோன்றியது. ஆனால், அந்த எண்ணத்தைக் கைவிட்டுவிட்டு அவரே அந்த ரூபாயை வைத்துக்கொள்ளும்படி நேர்ந்தது.


எவர், வீடு திரும்ப அனுமதி பெற்றுக்கொடுத்தாரோ அவர் (மாதவ்ராவ் தேச்பாண்டே ), கர்னிக் விடைபெற்றுக்கொண்டுவிட்டதால் மேற்கொண்டு பயணத்தைத் தொடரவேண்டுமென்றும் திரும்பி வரவேண்டாமென்றும் மேலிருந்து சைகையால் தெரிவித்தார்.


சைகையை நம்பிக்கையுடன் ஏற்றுக்கொண்ட கர்னிக், இடத்தை விட்டு நகர்ந்து பயணத்தைத் தொடர்ந்தார். வீடு திரும்பும் பயணத்தில் அவரும் நண்பரும் நாசிக்கில் தங்கினர்.

 


 

No comments:

Post a Comment