valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 24 January 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

"நான் தாதருக்கு போகவேண்டுமென்று விரும்பினேன். ஆனால், முக்கியமான வேலையொன்று இங்கிருப்பது திடீரென்று ஞாபகத்திற்கு வந்தது. ஆகவே, என்னுடைய தாதர் பயணத்தை ரத்து செய்துவிட்டேன்."

பணம் கொடுத்தாலும் வரிசையில் நின்று சிரமப்பட்டு வாங்கவேண்டிய பயணச் சீட்டு சுலபமாக கைக்கு வந்ததுபற்றி மாங்கர் மகிழ்ச்சியடைந்தார்.

சீட்டுக்குப் பணம் கொடுப்பதற்காகாப் பாக்கெட்டிலிருந்து பணத்தை எடுத்துக்கொண்டுஇருந்தபோது, விவசாயி திடீரென்று கூட்டத்தினுள் முண்டியடித்துப் புகுந்து காணாமல் போய்விட்டார். அவர் எங்கே சென்றார் என்பதை மாங்கரால் கண்டுபிடிக்க முடியவில்லை.

விவசாயியைத் தேட பாலாராம் பலமாகப் பிரயத்தனம் செய்தார். அனைத்து முயற்சிகளும் பயனற்றுப் போயின. இதற்கிடையே ரயில் வண்டி வந்துவிட்டது.

காலில் செருப்பில்லாமல், தலையில் ஒரு வேட்டியை முண்டாசாகக் கட்டிக்கொண்டு, கம்பளியைப் போர்த்துக்கொண்டு வந்த அந்த விவசாயி சகோதரர் யார்?

பயணச் சீட்டின் கட்டணம் சிறிதென்று சொல்லமுடியாது. அதையும் அவர் ரொக்கமாகத் தம்முடைய பாக்கெட்டில் இருந்து எடுத்துக்கொடுத்தார். ஏன், ஓ, எதற்காக இந்த தாட்சிண்ணியத்தின் பளுவை நான் சுமக்க வேண்டும்? இந்தப் புதிர் எனக்குப் புரியவில்லையே!

தோற்றத்தில் விவசாயி, ஆயினும் இவ்வளவு உதார குணமா! பணத்தாசை என்பதே கிடையாதா? யார் இந்த விவசாயி? கடைசிவரை இப்புதிர் விடுபடவே இல்லை;  மாங்கரின் மனம் குடைந்தது.

ஆச்சரியத்தில் நிரம்பிய மாங்கர், விவசாயி எந்நேரமும் வரலாம் என்ற நம்பிக்கையுடன் ரயில் புறப்படும்வரை ரயில் பெட்டியின் கதவுக்கு அருகில் வெளியே நின்று கொண்டிருந்தார்.

ரயில் புறப்பட்டபோது, இனிமேல் தேடிப் பயனில்லை என்று தெரிந்து கைப்பிடிக்கம்பியை பிடித்து, எகிறிக்குதித்துப் பெட்டியில் ஏறினார்.

கோட்டையில் பிரத்யக்ஷமான சந்திப்பு. வேறுவிதமாக இருந்தபோதிலும் இங்கும் சாயி சந்திப்பு. விவசாயி அணிந்திருந்த விசித்திரமான உடை மாங்கரின் மனத்தைக் குறுகுறுக்க செய்தது.

பின்னர், இந்த சத்தான பக்தர் சாயி பாதங்களில் பூரணமாக காதல் கொண்டு, திடமான சிரத்தையுடனும் பக்தியுடனும் அவருடைய வாழ்நாளை ஷிர்டியில் கழித்தார்.

ரீங்காரம் செய்துகொண்டே தாமரை மலையின் மகரந்தத்தை சுவைக்கச் சுற்றிச் சுற்றி வரும் தேனியைப் போல, சாயி நாமத்தைச் சொல்லிக்கொண்டே சாயியை சுற்றிச் சுற்றி வந்தார். பாலராம்ஜி அவ்விதமாகவே ஷிர்டியில் வாழ்ந்தார்.

எப்பொழுதாவது பாபாவின் அனுமதி பெற்றுக்கொண்டு முக்தாராம்ஜி என்ற சக பக்தருடன் ஷிர்டியை விட்டு வெளியே செல்வார்.

No comments:

Post a Comment