valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Monday 20 January 2020

ஷீர்டி சாயி சத்சரிதம்

அந்த ரம்மியமான இடத்தையும் பளிங்கு போன்ற சுத்தமான நீரையும் மந்தமாருதத்தையும் (தென்றலையும்) கண்டு மிக்க மகிழ்ச்சியடைந்தார்.

சாயியால் ஆணையிடப்பட்டிருப்பினும், சாயியை எங்கோ வைத்துக்கொண்டு, அவர் விதித்தவாறும் சொல்லிக்கொடுத்த முறையிலும் மாங்கர் தம்முடைய தவத்தை ஆரம்பித்தார்.

பாபா புரிந்த விந்தையைப் பாருங்கள்! அந்தக் கோட்டையில் மாங்கர் தவத்தில் மூழ்கி இருந்தபோது, பாபா பிரத்யக்ஷமாக தரிசனம் அளித்தார். மாங்கர், கண்களுக்கு எதிரே பாபாவை தரிசனம் செய்தார்.

சமாதி நிலையில் தரிசனம் கிடைப்பதில் ஆச்சரியம் ஏதுமில்லை. ஆனால், மாங்கரோ ஆசனத்தில் அமர்ந்திருந்தபோது விழித்த நிலையிலேயே  சமர்த்தரைக் கண்டார்.

கண்ணால் கண்டது மட்டுமல்லாமல், பாலராம் சாயியைக் கேட்டார், "பாபா, என்னை ஏன் இங்கு அனுப்பினீர்கள்?" பாபா என்ன பதில் கூறினார் தெரியுமா?

"ஷிர்டியில் இருந்தபோது அநேக எண்ணங்கள் உமது மனத்தில் அலைகளாக எழும்பி மோதின. ஆகவே, உம்முடைய சஞ்சலமற்ற மனத்தைக் கோட்டைக்குப் போகும்படி நியமித்தேன். -

"நிலம், நீர்  ஆகிய பஞ்ச பூதங்களால் ஆகியதும் மூன்றரை முழம் நீளமுள்ளதுமான இவ்வுடலுக்கு வெளியேயோ, ஷிர்டிக்கு வெளியேயோ நான் இல்லை என்று நினைத்திருந்தீர்.-

"ஆனால், இப்பொழுது உம்மெதிரில் நிற்கும் நான்தான் ஷிர்டியிலும் இருக்கிறேன். இதை நீரே அமைதியான மனத்துடன் நிதானமாக நன்கு பார்த்துக்கொள்ளும். இந்நிமித்தமாகவே உமக்கு இப்பாடம் புகட்டினேன் என்றும் அறிவீராக."

உத்தேசம் செய்த காலம் கடந்தபின், மாங்கர் மச்சீந்திரக்கட்டை விடுத்துத் தம்முடைய இடத்திற்கு கிளம்பினார்.

அவருடைய வாசஸ்தலமான பாந்த்ராவிற்கு போகலாம் என்று நினைத்தார். ஆகவே, பூனாவிலிருந்து தாதர்வரை ரயில்வண்டியில் பயணம் செய்ய முடிவுசெய்தார்.

பூனா ரயில் நிலையத்தை அடைந்தார். பயணசீட்டு வாங்கவேண்டிய நேரம் வந்தவுடன், சீட்டு வாங்கும் முகப்புக்குச் சென்றபோது ஓர் அற்புதம் நிகழ்ந்தது!

இடுப்பில் லங்கோடு கட்டி ஒரு கம்பளியைப் போர்த்துக்கொண்டு விவசாயியை போல் ஆடையணிந்திருந்த, முன்பின் தெரியாத பிரயாணி ஒருவரை முகப்புக்கருகில் கண்டார்.

பயணசீட்டு வாங்கிக்கொண்டு விவசாயி திரும்பியபோது அவருடைய பார்வை பாலாராமின் பார்வையைச் சந்தித்தது. விவசாயி பாலாராமை நோக்கி நடந்தார்.

"நீங்கள் எங்கே போகிறீர்கள்" என்று விவசாயி பாலாராமைக் கேட்டார். "தாதருக்கு" என்று பாலாராம் சொன்னவுடன், "இதை நீங்கள் எடுத்துக்கொள்ளுங்கள்" என்று சொல்லிக்கொண்டே பாலாராமிடம் பயணசீட்டைக் கொடுத்தார். அவர் மேலும் சொன்னார், -


No comments:

Post a Comment