valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 21 September 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

ஒருவர் கையில் புகையிலையைக் கசக்கிக்கொண்டு இருந்தார். இன்னொருவர் பாபாவின் புகை பிடிக்கும் மண் குழாயை (சில்லிம்மை) நிரப்பிக் கொண்டிருந்தார். சிலர் பாபாவின் கைகளையும் பாதங்களையும் பிடித்துவிட்டுக் கொண்டிருந்தனர். இந்த ரீதியில் சேவை நடந்துகொண்டிருந்தது.

பாபா எல்லாருடைய என்ன ஓட்டங்களையும் அறிந்திருந்தார். மெல்லிய குரலில் ஒரு கேள்வி கேட்டார், 'வாடாவில் நேற்றிரவு என்ன வாதப்பிரதிவாதம் நடந்தது?'

நான் என்ன நடந்தது என்பதை நடந்தவிதமாகவே எடுத்துச் சொன்னேன். அம்மாதிரியான சூழ்நிலையில் பாம்பைக் கொல்லலாமா, கொல்லக் கூடாதா என்றும் கேட்டேன்.

பாபாவிடம் ஒரே பதில்தான் இருந்தது. பாம்பானாலும், தேளானாலும் எல்லா உயிர்களிலும் இறைவன் உறைகின்றான். ஆகவே, எல்லா உயிர்களிடத்தும் பிரேமை உடையவர்களாக இருங்கள்.

இறைவனே இவ்வுலகின் சூத்ரதாரி; அவனுடைய ஆணைப்படியே அனைத்துயிர்களும் செயல்படுகின்றன. பாம்பாயினும் சரி, அவனுடைய ஆணையை மீறிச் செயல்படாது.

ஆகவே, எல்லா உயிர்களிடத்தும் பிரேமை செலுத்துங்கள்; தயை புரியுங்கள். சாகசச் செயல்களை விடுத்துப் பொறுமையையும் சகிப்புத்தன்மையையும் நாடுங்கள். ஸ்ரீஹரியே அனைவரையும் காப்பாற்றுபவன்.

பாபா சம்பந்தப்பட்ட எண்ணற்ற கதைகளில் நான் எத்தனை கதைகளை சொல்வேன்? ஆகவே, கதை கேட்பவர்கள் எல்லாக் கதைகளில் இருந்தும் சாரத்தையும் தத்துவத்தையும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்.

அடுத்த அத்தியாயம் மேலும் சுவாரசியமானது. பாபாவின் சிறந்த பக்தரான தீட்சிதர் பாபாவின் ஆணைப்படி ஓர் ஆட்டை வெட்ட வேண்டிய இக்கட்டை சந்திக்க வேண்டியிருந்தது. தீட்சிதருடைய பக்தியையும் குருவாக்கிய பரிபாலனத்தையும் எடுத்துக்காட்டும் கதை அது.

எல்லாருக்கும் க்ஷேமம் உண்டாகட்டும்! ஞானிகளாலும் சான்றோர்களால் உணர்வூட்டப்பட்டு, சாயி பக்தன் ஹேமாட் பந்தால் இயற்றப்பட்ட, 'ஸ்ரீ சமர்த்த சாயி சத் சரித்திரம்' என்னும் காவியத்தில், 'மரண விபத்துக்களை நீக்கி அருள் செய்தது' என்னும் இருபத்திரண்டாம் அத்தியாயம் முற்றும்.

                    ஸ்ரீ சத் குரு சாயி நாதருக்கு அர்ப்பணம் ஆகட்டும்.

                                             சுபம் உண்டாகட்டும்.


No comments:

Post a Comment