valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Friday 11 August 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

பாபாவின் இந்த லீலையைப் பார்த்தவுடனே அமீரின் மனதில், "பாம்பு ஒன்று நுழைந்திருக்க வேண்டும், அதை பாபா பார்த்துவிட்டார் போலிருக்கிறது' என்று தோன்றியது.

அமீருக்கு பாபாவிடம் நிறைய அனுபவம் இருந்தது; அவருடைய சுபாவமும் பேச்சின் பாணியும் தெரிந்திருந்தன. ஆகவே, அவருக்கு எல்லாம் புரிந்தது.

பக்தர்களுக்கு ஆபத்து ஏதும் நெருங்குவதாகத் தெரிந்தால், பாபா அவ்வாபத்து தம்மைச் சூழ்ந்திருப்பதாக சொல்வார். அமீருக்கு இந்த சங்கேத (குறிப்பால் உணர்த்தும்) பாஷை தெரிந்திருந்தது. ஆகவே, அவர் விஷயம் என்னவென்று அனுமானித்தார்.

திடீரென்று தம்முடைய படுக்கையினருகே ஏதோ நெளிவதை பார்த்தார். 'அப்துல்! விளக்கு, அந்த விளைக்கை கொண்டு வா சீக்கிரம்' என்று அமீர் கத்தினார்.

விளக்குக் கொண்டுவரப்பட்ட உடனே ஒரு பெரிய பாம்பு சுருட்டிக்கொண்டு படுத்திருந்ததை பார்த்தார். விளக்கொளியால் திகைத்துப்போன பாம்பு, தலையை மேலும் கீழும் ஆட்டியது.

பாம்பு அங்கே கூடியிருந்தவர்களால் சாந்தியளிக்கப்பட்டது. 'பக்தர்களை எச்சரிப்பதில் என்ன வினோதமான செயல்முறை!' என்று சொல்லிக்கொண்டே அங்கிருந்தவர்கள் பாபா செய்த மகத்தான உபகாரத்தை போற்றி நன்றி செலுத்தினார்.

பிசாசு என்ன, விளக்கென்ன! இதெல்லாம் தம் பக்தர்களுக்கு நேர்விருக்கும் ஆபத்திலிருந்து அவர்களைக் காப்பாற்றுவதற்காக பாபா செய்த சமர்த்தியான செயல்.

பாபாவினுடைய வாழ்க்கைச் சரித்திரத்தில் பாம்புகளை பற்றிய கணக்கற்ற நிகழ்ச்சிகளை எடுத்துச் சொல்லலாம். விரிவுக்கு அஞ்சி அவற்றில் சிலவே இங்கே சுருக்கமாக சொல்லப்பட்டிருக்கின்றன.

'பாம்புகளும் தேள்களும் நாராயணனே ' என்கிறார் ஞானி துக்காராம். 'ஆனால், அவற்றை தூரத்தில் இருந்து வணங்க வேண்டும். இதுவும் அவர் கூறியதே!

அவர் மேலும் கூறியதாவது, 'அவை அதர்மச் செயல்களில் ஈடுபட்டவை. ஆகவே, அவற்றை காலணிகளால்தாம் கவனிக்க வேண்டும்!' இதற்கு அர்த்தம் என்னவென்றால் பாம்புகளையும் தேள்களையும் எவ்வாறு நடத்த வேண்டுமென்பது நம் எவருக்குமே தெளிவாகத் தெரிவதில்லை என்பதே.

இங்கு அறியப்பட வேண்டிய உண்மை என்னவென்றால், ஒருவருடைய சுபாவமும் வாழ்க்கை அணுகுமுறையும் எவ்வாறோ, அவ்வாறே அவருடைய செயல்களும் அமையும் என்பதே.

பாபாவோ இந்தக் கேள்விக்கு ஒரே விடைதான் வைத்திருந்தார்.  அவர் சொல்வார், "எல்லா உயிரினங்களும் சரிசமானமே; ஆகவே, அனைத்து உயிர்களிடத்தும் அஹிம்சையும் பிரமாணம்."

பாம்பானாலும் தேளானாலும் எல்லா உயிர்களினுள்ளும் இறைவன் உறைகிறார். ஆகவே, இறைவன் விருப்பப்படாது, பாம்பாலும் தேளாலும் யாருக்காவது இன்னல் விளைவிக்க முடியுமா?



No comments:

Post a Comment