ஷீர்டி சாய் சத்சரிதம்
"சுகத்தை நாடி நான் சாவடியை விடுத்தேன். ஆகவே, எனக்கு தண்டனை அளித்துவிட்டீர்கள். ஆனால், இப்பொழுதோ, இந்த ஆபத்திலிருந்து என்னை விடுவித்து ஷீர்டி கொண்டுபோய்ச் சேருங்கள்."
தருமசாலையில் பிணத்தை விட்டுவிட்டுச் சட்டெனெக் கிளம்பி இரவோடு இரவாக ஷிர்டிக்கு விரைந்தார்.
'பாபா பாபா' என்று சொல்லிக்கொண்டே, அவருடைய மன்னிப்பை வேண்டியவாறே சாவடிக்கு வந்து சேர்ந்தார். அதன் பிறகுதான் மனம் நிம்மதியடைந்தது.
அமீர் சரியான பாடம் கற்றுக்கொண்டார். அந்நாளில் இருந்து அமீர் துன்மார்க்கத்தை அறவே ஒழித்து சன்மார்க்க ஒழுக்கத்தை கடைப்பிடித்தார்.
அவருடைய நம்பிக்கையும் விசுவாசமும் குணமளித்தன. முடக்குவாத நோயில் இருந்து விடுபட்டார். வலிகள் மறைந்தன. அதற்குப் பிறகு நடந்த சம்பவமொன்றை கேளுங்கள்.
சாவடி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. தென்கிழக்குப் பகுதிதான் பாபாவின் இருப்பு. அப்பகுதி நான்கு பக்கங்களிலும் மரப்பலகைகளால் தடுக்கப்பட்டிருந்தது. பாபா அங்கேதான் தூங்குவார்.
இரவு முழுவதும் விளக்குகள் எரிந்தன; பாபா விளக்கொளியில்தான் தூங்குவார். வெளியில் இருட்டில் பக்கீர்களும் பைராகிகளும் பிச்சைக்காரர்களும் அமர்ந்திருப்பர்.
அமீர் அவர்களில் ஒருவராகத்தான் நடத்தப்பட்டார். இதர மனிதர்கள் சிலரும் அங்கிருந்தனர். அவர்களும் அவ்விடத்திலேயே உறங்கினர். இவ்விதமாக, அங்கே பல மக்கள் இருந்தனர்.
பற்றற்றவரும் விசுவாசமும் நிறைந்த பக்தருமான அப்துல், பாபாவுக்குப் பின்னால் தட்டுமுட்டுச் சாமான்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில, கூப்பிட்ட குரலுக்குப் பனி செய்யத் தயாராக இருந்தார்.
ஒரு சமயம் நடுராத்திரியில் பாபா திடீரென்று அப்துலை உறக்கக் கூவியழைத்து, "என்னுடைய படுக்கைக்கருகில் ஒரு பிசாசு நின்று கொண்டிருக்கிறது பார்!" என்று சொன்னார்.
திரும்பத் திரும்பக் கூவி அழைக்கவே, கையில் விளக்குடன் அப்துல் அங்கு விரைந்து வந்தார். பாபா அவரிடம் உறக்கச் சொன்னார். "அது சற்று நேரத்திற்கு முன்பு இங்கேதான் இருந்தது!"
அப்துல் சொன்னார், "எல்லா இடங்களிலும் பார்த்துவிட்டேன். என் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை." பாபா பதில் கூறினார், "கண்களை அகல விரித்து சகல இடங்களிலும் உன்னிப்பாக பார்."
அப்துல் மறுபடியும் மறுபடியும் பார்த்தார். பாபா தரையை தம்முடைய சட்காவால் (குறுந்தடியால்) தட்ட ஆரம்பித்தார். வெளியில் உறங்கி கொண்டிருந்த மக்களனைவரையும் விழித்துக்கொண்டு என்ன நடக்கிறதென்று பார்த்தனர்.
அமீர் சக்கரும், "இதென்ன இன்று இவ்வளவு கலாட்டா? எதற்காக இந்த நடுநிசியில் சட்காவால் மேலும் மேலும் தட்ட வேண்டும்?" என்று கேட்டுக் கொண்டே எழுந்தார்.
"சுகத்தை நாடி நான் சாவடியை விடுத்தேன். ஆகவே, எனக்கு தண்டனை அளித்துவிட்டீர்கள். ஆனால், இப்பொழுதோ, இந்த ஆபத்திலிருந்து என்னை விடுவித்து ஷீர்டி கொண்டுபோய்ச் சேருங்கள்."
தருமசாலையில் பிணத்தை விட்டுவிட்டுச் சட்டெனெக் கிளம்பி இரவோடு இரவாக ஷிர்டிக்கு விரைந்தார்.
'பாபா பாபா' என்று சொல்லிக்கொண்டே, அவருடைய மன்னிப்பை வேண்டியவாறே சாவடிக்கு வந்து சேர்ந்தார். அதன் பிறகுதான் மனம் நிம்மதியடைந்தது.
அமீர் சரியான பாடம் கற்றுக்கொண்டார். அந்நாளில் இருந்து அமீர் துன்மார்க்கத்தை அறவே ஒழித்து சன்மார்க்க ஒழுக்கத்தை கடைப்பிடித்தார்.
அவருடைய நம்பிக்கையும் விசுவாசமும் குணமளித்தன. முடக்குவாத நோயில் இருந்து விடுபட்டார். வலிகள் மறைந்தன. அதற்குப் பிறகு நடந்த சம்பவமொன்றை கேளுங்கள்.
சாவடி மூன்று பாகங்களாக பிரிக்கப்பட்டிருந்தது. தென்கிழக்குப் பகுதிதான் பாபாவின் இருப்பு. அப்பகுதி நான்கு பக்கங்களிலும் மரப்பலகைகளால் தடுக்கப்பட்டிருந்தது. பாபா அங்கேதான் தூங்குவார்.
இரவு முழுவதும் விளக்குகள் எரிந்தன; பாபா விளக்கொளியில்தான் தூங்குவார். வெளியில் இருட்டில் பக்கீர்களும் பைராகிகளும் பிச்சைக்காரர்களும் அமர்ந்திருப்பர்.
அமீர் அவர்களில் ஒருவராகத்தான் நடத்தப்பட்டார். இதர மனிதர்கள் சிலரும் அங்கிருந்தனர். அவர்களும் அவ்விடத்திலேயே உறங்கினர். இவ்விதமாக, அங்கே பல மக்கள் இருந்தனர்.
பற்றற்றவரும் விசுவாசமும் நிறைந்த பக்தருமான அப்துல், பாபாவுக்குப் பின்னால் தட்டுமுட்டுச் சாமான்கள் வைக்கப்பட்டிருந்த இடத்தில, கூப்பிட்ட குரலுக்குப் பனி செய்யத் தயாராக இருந்தார்.
ஒரு சமயம் நடுராத்திரியில் பாபா திடீரென்று அப்துலை உறக்கக் கூவியழைத்து, "என்னுடைய படுக்கைக்கருகில் ஒரு பிசாசு நின்று கொண்டிருக்கிறது பார்!" என்று சொன்னார்.
திரும்பத் திரும்பக் கூவி அழைக்கவே, கையில் விளக்குடன் அப்துல் அங்கு விரைந்து வந்தார். பாபா அவரிடம் உறக்கச் சொன்னார். "அது சற்று நேரத்திற்கு முன்பு இங்கேதான் இருந்தது!"
அப்துல் சொன்னார், "எல்லா இடங்களிலும் பார்த்துவிட்டேன். என் கண்களுக்கு ஒன்றும் தெரியவில்லை." பாபா பதில் கூறினார், "கண்களை அகல விரித்து சகல இடங்களிலும் உன்னிப்பாக பார்."
அப்துல் மறுபடியும் மறுபடியும் பார்த்தார். பாபா தரையை தம்முடைய சட்காவால் (குறுந்தடியால்) தட்ட ஆரம்பித்தார். வெளியில் உறங்கி கொண்டிருந்த மக்களனைவரையும் விழித்துக்கொண்டு என்ன நடக்கிறதென்று பார்த்தனர்.
அமீர் சக்கரும், "இதென்ன இன்று இவ்வளவு கலாட்டா? எதற்காக இந்த நடுநிசியில் சட்காவால் மேலும் மேலும் தட்ட வேண்டும்?" என்று கேட்டுக் கொண்டே எழுந்தார்.
No comments:
Post a Comment