ஷீர்டி சாயி சத்சரிதம்
சாவடி ஒத்துக்கொள்ளுமா என்ற சந்தேகம் இருந்திருக்கலாம். ஆனால், அமீர், சாயியின் சங்கத்தை மஹா பிரசாதமாகக் கருதினார். சாயியின் திருவாய்மொழியையே அருமருந்தாக எடுத்துக்கொண்டார். ஆகவே, அவர் சாவடியில் தங்குவதையே சுகமாக ஏற்றுக்கொண்டார்.
அமீர்சக்கர் ஒன்பது மாதங்கள் முழுமையாக சாவடியில் தாங்கினார். படியேறி உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் அறையில் படுக்கை விரித்துத் தூங்கினார்.
முடக்குவாதம் அவருடைய உடம்பில் குடிகொண்டுவிட்டது; அல்லது வெளிப்பார்வைக்கு அவ்வாறு தெரிந்தது. நிவாரணமோ முற்றும் விபரீதமாகத் (நேர்மாறாக) தெரிந்தது! ஆயினும், உள்ளே இருந்த நம்பிக்கையும் விசுவாசமும் அசைக்க முடியாததாக இருந்ததால், நன்மையும் இனிமையும் ஆன முடிவே ஏற்பட்டது.
அமீர் ஒன்பது மாதங்களுக்குச் சாவடியில் தங்கும்படி ஆணையிடப் பட்டிருந்தார். தரிசனத்திற்காக மசூதிக்குச் செல்வதற்கு கூடத் தடைவிதிக்கப் பட்டிருந்தது.!
அமீருக்கு விதிக்கப்பட்ட இடம் சாவடியே. அங்கேயே அவருக்கு சிரமம் ஏதுமின்றி பாபாவின் தரிசனம் கிடைத்தது.
காலை மாலை இரண்டு வேளைகளிலும் தரிசனம் கிடைத்தது. ஒன்றுவிட்ட ஒரு நாளைக்குச் சாவடி ஊர்வலத் திருவிழாவையும் அமீர் திருப்தியாக கண்டு மகிழ்ந்தார்.
தினமும் காலை நேரத்தில் பிச்சை எடுக்கச் செல்லும்போது, பாபா சாவடியின் வழியாகத்தான் செல்வார். ஆகவே, பாபா போகும்போதும் திரும்பி வரும்போதும் இடத்தை விட்டு நகராமலேயே சுலபமாக தரிசனம் கிடைத்தது.
அதுபோலவே, தினமும் மாலை நேரத்தில் பாபா சாவடிக்கெதிரே வந்து நிற்பார். தலையையும் ஆட்காட்டி விரலையும் ஆட்டிக்கொண்டே பரவச நிலையில் எல்லா திசைகளுக்கும் வந்தனம் செய்வார்.
அங்கிருந்து புட்டிவாடாவின் மூலைக்கு வருவார். பிறகு அங்கிருந்து பக்தர்கள் சூழ மசூதிக்கு திரும்பிவிடுவார்.
சாவடிக்கு ஒருநாள் விட்டு மறுநாள் இரவில் வருவார். சாவடியில் இருவருக்கும் இடையே (பாபா - அமீர் சக்கர்) மரப்பலகை களாலான தடுப்பு ஒன்று, கதவு என்ற பெயரில் இருந்தது. இருவருமே சம்பாஷணை செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
பூஜையும் ஹாரதியும் இதரச் சடங்குகளும் சாவடியில் நடந்தன. இவையனைத்தும் முடிந்தபிறகு, பக்தர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்றனர். அதன் பிறகு இவர்கள் இருவருமே சாவகாசமாகப் பரஸ்பரம் பேசிக்கொண்டனர்.
வெளிப்பார்வைக்கு அடைப்பட்ட வாசன்தான். ஆயினும், சாயியிடம் நெருக்கமான அனுபவம் கிடைத்தது. மஹா பாக்கியம் செய்யாமல், இது கிடைப்பது துர்லபம். (அரிது) .
இருப்பினும், அமீர் சலிப்படைந்தார். ஒரேயிடத்தில் இருப்பதை அவர் சிறைவாசமாக உணர்ந்தார். வேறு எங்காவது போய்விட வேண்டும் என்று நினைத்தார்.
சாவடி ஒத்துக்கொள்ளுமா என்ற சந்தேகம் இருந்திருக்கலாம். ஆனால், அமீர், சாயியின் சங்கத்தை மஹா பிரசாதமாகக் கருதினார். சாயியின் திருவாய்மொழியையே அருமருந்தாக எடுத்துக்கொண்டார். ஆகவே, அவர் சாவடியில் தங்குவதையே சுகமாக ஏற்றுக்கொண்டார்.
அமீர்சக்கர் ஒன்பது மாதங்கள் முழுமையாக சாவடியில் தாங்கினார். படியேறி உள்ளே நுழைந்தவுடன் இருக்கும் அறையில் படுக்கை விரித்துத் தூங்கினார்.
முடக்குவாதம் அவருடைய உடம்பில் குடிகொண்டுவிட்டது; அல்லது வெளிப்பார்வைக்கு அவ்வாறு தெரிந்தது. நிவாரணமோ முற்றும் விபரீதமாகத் (நேர்மாறாக) தெரிந்தது! ஆயினும், உள்ளே இருந்த நம்பிக்கையும் விசுவாசமும் அசைக்க முடியாததாக இருந்ததால், நன்மையும் இனிமையும் ஆன முடிவே ஏற்பட்டது.
அமீர் ஒன்பது மாதங்களுக்குச் சாவடியில் தங்கும்படி ஆணையிடப் பட்டிருந்தார். தரிசனத்திற்காக மசூதிக்குச் செல்வதற்கு கூடத் தடைவிதிக்கப் பட்டிருந்தது.!
அமீருக்கு விதிக்கப்பட்ட இடம் சாவடியே. அங்கேயே அவருக்கு சிரமம் ஏதுமின்றி பாபாவின் தரிசனம் கிடைத்தது.
காலை மாலை இரண்டு வேளைகளிலும் தரிசனம் கிடைத்தது. ஒன்றுவிட்ட ஒரு நாளைக்குச் சாவடி ஊர்வலத் திருவிழாவையும் அமீர் திருப்தியாக கண்டு மகிழ்ந்தார்.
தினமும் காலை நேரத்தில் பிச்சை எடுக்கச் செல்லும்போது, பாபா சாவடியின் வழியாகத்தான் செல்வார். ஆகவே, பாபா போகும்போதும் திரும்பி வரும்போதும் இடத்தை விட்டு நகராமலேயே சுலபமாக தரிசனம் கிடைத்தது.
அதுபோலவே, தினமும் மாலை நேரத்தில் பாபா சாவடிக்கெதிரே வந்து நிற்பார். தலையையும் ஆட்காட்டி விரலையும் ஆட்டிக்கொண்டே பரவச நிலையில் எல்லா திசைகளுக்கும் வந்தனம் செய்வார்.
அங்கிருந்து புட்டிவாடாவின் மூலைக்கு வருவார். பிறகு அங்கிருந்து பக்தர்கள் சூழ மசூதிக்கு திரும்பிவிடுவார்.
சாவடிக்கு ஒருநாள் விட்டு மறுநாள் இரவில் வருவார். சாவடியில் இருவருக்கும் இடையே (பாபா - அமீர் சக்கர்) மரப்பலகை களாலான தடுப்பு ஒன்று, கதவு என்ற பெயரில் இருந்தது. இருவருமே சம்பாஷணை செய்வதில் ஆர்வம் கொண்டிருந்தனர்.
பூஜையும் ஹாரதியும் இதரச் சடங்குகளும் சாவடியில் நடந்தன. இவையனைத்தும் முடிந்தபிறகு, பக்தர்கள் அவரவர் வீடுகளுக்கு சென்றனர். அதன் பிறகு இவர்கள் இருவருமே சாவகாசமாகப் பரஸ்பரம் பேசிக்கொண்டனர்.
வெளிப்பார்வைக்கு அடைப்பட்ட வாசன்தான். ஆயினும், சாயியிடம் நெருக்கமான அனுபவம் கிடைத்தது. மஹா பாக்கியம் செய்யாமல், இது கிடைப்பது துர்லபம். (அரிது) .
இருப்பினும், அமீர் சலிப்படைந்தார். ஒரேயிடத்தில் இருப்பதை அவர் சிறைவாசமாக உணர்ந்தார். வேறு எங்காவது போய்விட வேண்டும் என்று நினைத்தார்.
No comments:
Post a Comment