valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 13 July 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

"இதுதான் என்னுடைய ஒரே வேண்டுகோள். எனக்கு ஏதாவது கொடுப்பதாக இருந்தால் இன்னல்களையே கொடு. அப்பொழுதுதான் உன்னுடைய நாமம் என்னுடைய தொண்டையை அலங்கரிக்கும் நிரந்தரமான ஆபரணமாக ஆகும்".

கதை கேட்பவர்களும் சொல்பவரும் சேர்ந்து, இதை, இதை மாத்திரமே, சாயியை வேண்டுவோம். "உங்களுடைய நாமத்தை நாங்கள் என்றும் மறக்காமல் இருப்போமாக; உங்களுடைய பாதங்களை எங்களுக்கு புகலிடமாக அளிப்பீராக."

அமீர் சக்கர் பாபாவை நமஸ்காரம் செய்துவிட்டு விதிமுறைகளின்படி அவருடைய கையை முத்தமிட்டார். வியாதியைப் பற்றி விஸ்தாரமாக எடுத்துச் சொல்லித் துன்பத்திலிருந்து விமோசனம் அளிக்கும்படி வேண்டினார்.

தம்மைப் பீடித்திருந்த முடக்குவாத நோய்க்குப் பரிகாரம் கேட்டார். பாபா பதில் சொன்னார், "போங்கள், போய்ச் சாவடியில் நிம்மதியாக உட்காருங்கள்."

பாபா ஒன்று விட்டு ஒருநாள் இரவை கழித்த சாவடியே அமீர் வாசிக்க வேண்டிய இடமாயிற்று.

முடக்கு வாத நோயினால் பெரும் துன்பத்துக்குள்ளான அமீர்சக்கர், ஷீர்டி கிராமத்தில் வேறு ஏதாவதொரு வீட்டில் சௌக்கியமாக தங்கிருக்கலாம்; அல்லது தம்முடைய கிராமமாகிய கொராலேவுக்கே திரும்பிச் சென்றிருக்கலாம்; வேறெந்த இடமும் ஒதுக்கி கொண்டிருக்கும்.

ஆனால், இந்தச் சாவடியோ புராதனமானது. மேற்கூரையும் கீழ்தளமும் சிதிலமடைந்திருந்தன. கட்டடமே ஜீரணமடைந்திருந்த நிலையில், பல்லியும் பாம்பும் தேளும் ஓணானும் சுதந்திரமாக வாழ்ந்து கொண்டிருந்தன.

மேலும், குஷ்டரோகிகள் சிலர் அங்கு வாழ்ந்து கொண்டிருந்தனர். எச்சிலையிலையோடு எறியப்பட்ட உணவைத் தின்று வாழ்ந்த சில நாய்களும் அங்கு இருந்தன. அமீர் சோகமடைந்தார்; ஆயினும், பாபாவின் பேச்சுக்கு எதிர்ப்பேச்சு ஏது?

சாவடியின் பிற்பாகத்தில் இடிபாடுகள் கொட்டப்பட்டு முழங்கால் ஆழத்திற்குப் பல குழிகள் இருந்தன. அமீர் சக்கருடைய வாழ்க்கை நாயினும் கேவலமானதாகி விட்டது; ஜன்மமே பயனற்ற யாத்திரைபோல் தெரிந்தது.!

கூரையிலிருந்து மழை நீர் ஒழுக்கு; தரையிலோ தண்ணீர் ஓதம்! தரை மேடும் பள்ளமும் குழிகளுமாக இருந்தது. இது போதாதென்று குளிரும் வாடைக்காற்றும் உடலை வாட்டின. அமீர் சக்கர் மனமுடைந்து போனார்.

மழையும் காற்றும் உண்டுபண்ணிய நிரந்தரமான ஓதத்தையும் குளிரையும் தங்க முடியாமல், அவருடைய உடம்பின் மூட்டுக்களெல்லாம்  விறைத்துப் போயின. மருந்து என்னவென்று பார்த்தால், பாபாவினுடைய சொல்லைத்தவிர வேறெதுவும் இல்லை!

பாபா அவரிடம் கண்டிப்பாகச் சொல்லியிருந்தார், "மழை பெய்யலாம், ஓதமாக இருக்கலாம்; தரை மேடும் பள்ளமும் குழிகளுமாக இருக்கலாம். ஆனால், நீர் அதை பற்றியெல்லாம் நினைக்கவே நினைக்காதீர். " 


No comments:

Post a Comment