valam tharum vallal

valam tharum vallal
shri shird sai baba

Thursday 8 June 2017

ஷீர்டி சாயி சத்சரிதம்

வரப்போகும் கண்டங்களைப் பற்றி பக்தர்களை எச்சரித்து, ஆபத்திலிருந்து தப்பித்துக்கொள்ள ஒரு வழியையும் காட்டி, அவர்களை காப்பாற்றியது பாபா செய்த அற்புதம்.

அந்த சமயத்தில் பாபா திடீரென்று மிரீகரைக் கேட்ட வினோதமான கேள்வி என்னவென்று பார்ப்போம். "உங்களுக்கு நம்முடைய துவாகரமாயியைத் (தாம் வாழ்ந்த மசூதிக்கு பாபா அளித்த பெயர்) தெரியுமா?"

பாலா சாஹேப்பிற்கு, பாபா என்ன கேட்கிறார் என்றே புரியவில்லை. ஆகவே, பாபா தொடர்ந்தார், "இங்கே பாருங்கள், துவாரகாமாயீ இந்த மஸூதியே.-

"இது நம்முடைய, நமக்கே சொந்தமான துவாரகாமாயீ. இவளுடைய மடியில் நீர் அமரும்போது ஒரு குழந்தையைப் போல உம்மைப் பாதுகாக்கிறாள்; பயத்திற்கு மனத்தில் இடமேயில்லை!-

"இந்த மசூதிமாயி கிருபையையே உருவானவள்; எளியவர்களின் தாய்! யார், எவ்வளவு பெரிய ஆபத்தில் மாட்டிக்கொண்டாலும், அங்கேயே அப்பொழுதே காப்பாற்றுவாள்!-

"இவளுடைய மடியில் ஒருமுறை அமர்ந்தவர் எல்லா சங்கடங்களில் இருந்தும் விடுபட்டு விடுகிறார். இவளுடைய நிழலில் வாழ்பவர் சுகத்தையும் சாந்தியையும் அளிக்கும் சிம்மாசனத்தில் உட்கார்ந்தவர் ஆவார். -

"இதுதான் அந்த துவாரகை; துவாரவ தீ!" மிரீகர் கிளம்பியபோது பாபா உதீப் பிரசாதம் அளித்து அவருடைய தலையில் தம் அபய ஹஸ்தத்தை (காக்கும் கரத்தை) வைத்தார்.

திடீரென்று பாபா மிரீகரை ஒரு கேள்வி கேட்டார், "உங்களுடைய நீளமான ஆசாமியையும் அவனுடைய தோன்றி மறையும் விநோதத்தையும் பற்றித் தெரியுமா?"

இடக்கை விரல்களையும் உள்ளங்கையையும் வளைத்துக்கொண்டு, இடமுழங்கையை வலக்கையின் மேல் வைத்துக்கொண்டு, இடக்கையை பாம்பின் தலை ஆடுவதுபோல் அசைத்து அவர் சொன்னார், "அவன் எவ்வளவு பயங்கரமானவன் !-

"ஆயினும் அவர் நம்மை என்ன செய்துவிட முடியும்? நாம் துவாரமாயியின் குழந்தைகளன்றோ? அவளுடைய சக்தியை யாரால் அறிந்துகொள்ள முடியும்? அவளுடைய அற்புதச் செயலைக் காத்திருந்து பார்ப்போம்!-

"நம்மை ரட்சிக்கும் தாயாக துவாரகாமாயீ இருக்கும்போது, நீளமான ஆசாமியால் எப்படிக்கொல்ல முடியும்? அவனுடைய கொள்ளும் சக்தி துவாரகமாயியின் ரட்சிக்கும் சக்தியின் முன் எம்மாத்திரம்?

அந்த சமயத்தில் பாபா ஏன் இந்தப் பிரசாங்கத்தைச் செய்தார்? மிரீகருக்கும் இந்தப் பிரசங்கத்திற்கும் என்ன சம்பந்தம்? அங்கிருந்த எல்லாரும் அறிந்து கொள்ள விரும்பினார்.

ஆனால், பாபாவைக் கேட்க யாருக்குமே தைரியம் இல்லை. ஆகவே, பாபாவின் பாதங்களில் சிரம் தாழ்த்தி வணங்கிவிட்டு, "சிதலீ செல்ல நேரமாகிவிட்டது" என்று சொல்லிக்கொண்டே மிரீகர் மசூதியின் படிகளில் இறங்கினார்.

அவரும் கூடவே இருந்த மாதவராவும் சபா மண்டபத்தின் வாயிலை அடைவதற்கு முன்னரே பாபா மாதவராவை, "ஒரு கணம் இங்கு வா" என்று அழைத்தார்.  



No comments:

Post a Comment