ஷீர்டி சாயி சத்சரிதம்
சமர்த்த சாயியினுடைய நடத்தை மனத்திற்கும் புத்திக்கும் வாக்குக்கும் அப்பாற்பட்டது. அவருடைய செயல்களோ கற்பனைக்கும் எட்டாதவை; எதிர்பார்க்க முடியாதவை.
அவருடைய முகத்தை எவ்வளவு நேரம் பார்த்தாலும் மனம் திருப்தியடையாது. அவருடன் பேசுவது மேலும் மேலும் பேச ஆவலை தூண்டிவிடும். அவருடைய திருவாய்மொழியை எவ்வளவு கேட்டாலும் திருப்தி ஏற்படாது. இச் செயல்களால் ஏற்படும் சந்தோஷத்தை மனதில் அடக்க முடியாது.
காற்றை மூட்டையாக கட்டிவிடலாம்; கொட்டும் மழையின் தாரைகளையும் எண்ணிவிடலாம்; ஆனால், சாயியினுடைய அற்புதங்களை கணக்கெடுக்க கூடிய வன்மை உள்ளவர் யார்?
இப்பொழுது அடுத்த கதையை சாவகாசமாக கேளுங்கள். தம்முடைய பக்தர்களை சம்ரக்ஷணம் (நன்கு காப்பாற்றுகை) செய்ய வேண்டுமென்பதில் பாபாவுக்கு இருந்த அக்கறையும் அவர்களுக்கு சங்கடங்களும் இன்னல்களும் வாராது நிவாரணம் செய்ததும் தெரிய வரும்.
பக்தர்களுக்கு நேரப்போகும் கண்டங்களை முன்பாகவே அறிந்து, அவர்களுக்கு தைரியமூட்டி விபத்து நேராமல் தடுத்துவிடுவார். பக்தருக்களுடைய மங்களத்தையே நாடிய பாபா, அவர்களுடைய விசுவாசத்தை இவ்விதமாக நிலைபெறச் செய்வார்.
ஆர்வத்துடன் கதை கேட்பவர்களே! இது சம்பந்தமாக ஒரு கதையை கேட்டு மகிழ்ச்சியடையுங்கள். இக் கதை, சாயியின் சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் சுகத்தை அதிகரிக்கும். கபடமற்ற, எளிமையான மக்களுக்கு சிரத்தையை அளிக்கும்.
அவர்கள் தீனர்களாகவும் தள்ளிவைக்கப்பட்டவர்களாகவும் ஏழைகளாகவும் இருக்கலாம்; ஆயினும், சாயியினுடைய கதைகளில் ஆர்வம் அதிகரிக்கும். அவர்கள் சாயி நாமத்தை இடைவிடாது ஜபித்தால், சாயி அவர்களை நிச்சயமாக மறுகரை சேர்ப்பார்.
காகாசாஹெப் மிரீகர் என்பவர் அஹமத்நகர் பட்டணவாசி, அவருடைய சேவையில் மகிழ்ந்து, (பிரிட்டிஷ்) அரசாங்கம் அவருக்கு 'சர்தார்' என்ற பட்டத்தை அளித்தது.
அவருடைய மகன் சிரஞ்சீவி பாலாசாஹேப் மிரீகரும் ஒரு கடைமை வீரராகத் திகழ்ந்தார். கோபர்காங்கவிற்கு மாமலத்தாராக இருந்த அவர், சிதலீக்கு அலுவலகச் சுற்றுப்பயணமாக வந்திருந்தபோது பாபாவை தரிசனம் செய்ய ஷிர்டிக்கு வந்தார்.
மசூதிக்குச் சென்று பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அங்கு அமர்ந்தார். எல்லாருடைய ஷேமத்தையும் குசலத்தையும் (சுகத்தையும்) பற்றி பாபா அவரை விசாரித்தார்; பேச்சுத் தொடர்ந்தது.
பல பக்தர்கள் அப்பொழுது அங்கே குழுமியிருந்தனர்; மாதவராவும் அருகிலேயே இருந்தார். ஓ, நான் சொல்லும் கதையை கவனத்துடன் கேட்பவர்களே! அமிருதத்தைப் போன்ற இக் காதையை இப்பொழுது பருகுங்கள்.
சமர்த்த சாயியினுடைய நடத்தை மனத்திற்கும் புத்திக்கும் வாக்குக்கும் அப்பாற்பட்டது. அவருடைய செயல்களோ கற்பனைக்கும் எட்டாதவை; எதிர்பார்க்க முடியாதவை.
அவருடைய முகத்தை எவ்வளவு நேரம் பார்த்தாலும் மனம் திருப்தியடையாது. அவருடன் பேசுவது மேலும் மேலும் பேச ஆவலை தூண்டிவிடும். அவருடைய திருவாய்மொழியை எவ்வளவு கேட்டாலும் திருப்தி ஏற்படாது. இச் செயல்களால் ஏற்படும் சந்தோஷத்தை மனதில் அடக்க முடியாது.
காற்றை மூட்டையாக கட்டிவிடலாம்; கொட்டும் மழையின் தாரைகளையும் எண்ணிவிடலாம்; ஆனால், சாயியினுடைய அற்புதங்களை கணக்கெடுக்க கூடிய வன்மை உள்ளவர் யார்?
இப்பொழுது அடுத்த கதையை சாவகாசமாக கேளுங்கள். தம்முடைய பக்தர்களை சம்ரக்ஷணம் (நன்கு காப்பாற்றுகை) செய்ய வேண்டுமென்பதில் பாபாவுக்கு இருந்த அக்கறையும் அவர்களுக்கு சங்கடங்களும் இன்னல்களும் வாராது நிவாரணம் செய்ததும் தெரிய வரும்.
பக்தர்களுக்கு நேரப்போகும் கண்டங்களை முன்பாகவே அறிந்து, அவர்களுக்கு தைரியமூட்டி விபத்து நேராமல் தடுத்துவிடுவார். பக்தருக்களுடைய மங்களத்தையே நாடிய பாபா, அவர்களுடைய விசுவாசத்தை இவ்விதமாக நிலைபெறச் செய்வார்.
ஆர்வத்துடன் கதை கேட்பவர்களே! இது சம்பந்தமாக ஒரு கதையை கேட்டு மகிழ்ச்சியடையுங்கள். இக் கதை, சாயியின் சமூகத்தில் உங்களுக்கு இருக்கும் சுகத்தை அதிகரிக்கும். கபடமற்ற, எளிமையான மக்களுக்கு சிரத்தையை அளிக்கும்.
அவர்கள் தீனர்களாகவும் தள்ளிவைக்கப்பட்டவர்களாகவும் ஏழைகளாகவும் இருக்கலாம்; ஆயினும், சாயியினுடைய கதைகளில் ஆர்வம் அதிகரிக்கும். அவர்கள் சாயி நாமத்தை இடைவிடாது ஜபித்தால், சாயி அவர்களை நிச்சயமாக மறுகரை சேர்ப்பார்.
காகாசாஹெப் மிரீகர் என்பவர் அஹமத்நகர் பட்டணவாசி, அவருடைய சேவையில் மகிழ்ந்து, (பிரிட்டிஷ்) அரசாங்கம் அவருக்கு 'சர்தார்' என்ற பட்டத்தை அளித்தது.
அவருடைய மகன் சிரஞ்சீவி பாலாசாஹேப் மிரீகரும் ஒரு கடைமை வீரராகத் திகழ்ந்தார். கோபர்காங்கவிற்கு மாமலத்தாராக இருந்த அவர், சிதலீக்கு அலுவலகச் சுற்றுப்பயணமாக வந்திருந்தபோது பாபாவை தரிசனம் செய்ய ஷிர்டிக்கு வந்தார்.
மசூதிக்குச் சென்று பாபாவுக்கு நமஸ்காரம் செய்துவிட்டு அங்கு அமர்ந்தார். எல்லாருடைய ஷேமத்தையும் குசலத்தையும் (சுகத்தையும்) பற்றி பாபா அவரை விசாரித்தார்; பேச்சுத் தொடர்ந்தது.
பல பக்தர்கள் அப்பொழுது அங்கே குழுமியிருந்தனர்; மாதவராவும் அருகிலேயே இருந்தார். ஓ, நான் சொல்லும் கதையை கவனத்துடன் கேட்பவர்களே! அமிருதத்தைப் போன்ற இக் காதையை இப்பொழுது பருகுங்கள்.
No comments:
Post a Comment