ஷீர்டி சாயி சத்சரிதம்
இப் பாட்டு, தாசகணு அளித்த விதமாகவே ஏற்கனவே இந்நூலின் 4 வது அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை மறுபடியும் படித்தால் முதல் தடவை கேட்டபோது அடைந்தவாறே ஆச்சரியம் அடைவீர்கள்.
சாகா சந்திர நியாயத்தின்படி தம்முடைய கால்கட்டைவிரலை கையினுடைய நடுவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் மத்தியில் வைத்து, தரிசனம் செய்வதற்கு ஒரு சுலபமான வழி காட்டினார் பாபா.
இது, "உன்னுடைய அபிமானங்களை விட்டுவிட்டு சகல ஜீவராசிகளையும் வணங்கி என்னுடைய கால் காட்டை விரலின் மீது தியானம் செய். இது பக்தியின் எளிய சாதனை" என்று பாபா நமக்கு குறிப்பால் உணர்த்துவதுபோல் தோன்றுகிறது.
இப்பொழுது, முன்பு சொன்ன கதைக்கு போவோம். அருள்மழை பொழிந்தது பற்றிய பிரவசனம் முடிந்தது. இப்பொழுது அபூர்வமான கதையொன்று தொடர்கிறது; கவனமாக கேளுங்கள்.
பாபா அங்கு வாசம் செய்ததால், ஷீர்டி புண்ணியஷேத்திரம் ஆகியது. இரவு பகலாக மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். புண்ணியத்தைத் தேடிய பல மக்கள் அங்கே கூடினர்.
பத்துத் திசைகளிலும் வியாபித்திருக்கும் .கற்பகத்தருவைப் போன்று நேரிடையாகவும் மறைமுகமாகவும் வரங்களை அள்ளிவீசும் சாயிபாபா ஷிர்டியில் அவதரித்துவிட்டார்.
ஏழையையும் பணக்காரனையும் சமசமானமாகப் பாவித்தார். கற்பனை செய்தும் பார்க்கமுடியாத லீலைகளால் பக்தர்களுக்கு மங்களம் அளித்தார்.
ஓ, எவ்வளவு கரைகாணாத பிரேமை! என்னே இந்த இயல்பான பிரம்ம ஞானம்! எல்லா உயிர்களிலும் உறைபவன், ஒன்றான இறைவனே என்பதில்தான் அவருக்கு எவ்வளவு அமோகமான நம்பிக்கை! பாபாவை அனுபவித்தவர் பாக்கியசாலி.
சிலசமயங்களில் திடமான மௌனமே அவர் பிரம்மத்தை (முழுமுதற் பொருளை) பற்றிச் செய்த வியாக்கியானமாக அமைந்தது. சிலசமயங்களில் ஆத்மானந்தமாகிய இம்மேகத்தை பக்தர்கள் சூழ்ந்து கொண்டிருந்தனர்.
சில சமயங்களில் அவருடைய திருவாய்மொழி மறைபொருளாகவும் கனமான அர்த்தம் நிரம்பியதாகவும் இருந்தது. சிலசமயங்களில் அவர் மென்மையாகவும் பரிஹாஸமாகவும் பேசினார். சில சமயங்களில் அவர் எப்பொழுதும் பேசும் மறைபொருளடங்கிய பேச்சை விடுத்துக் கோபம் வந்தது போல் பாசாங்கு செய்தார்.
சிலசமயங்களில் குறிப்பால் உணர்த்தியும், சிலசமயங்களில் விவேகத்தால் புரிந்துகொள்ளுமாறும், சிலசமயங்களில் வெளிப்படையாகத் தெளிவாகவும், அவர் அநேக பக்தர்களுக்கு அநேக விதங்களில் உபதேசம் அளித்தார்.
இப் பாட்டு, தாசகணு அளித்த விதமாகவே ஏற்கனவே இந்நூலின் 4 வது அத்தியாயத்தில் கொடுக்கப்பட்டிருக்கிறது. அதை மறுபடியும் படித்தால் முதல் தடவை கேட்டபோது அடைந்தவாறே ஆச்சரியம் அடைவீர்கள்.
சாகா சந்திர நியாயத்தின்படி தம்முடைய கால்கட்டைவிரலை கையினுடைய நடுவிரலுக்கும் ஆட்காட்டி விரலுக்கும் மத்தியில் வைத்து, தரிசனம் செய்வதற்கு ஒரு சுலபமான வழி காட்டினார் பாபா.
இது, "உன்னுடைய அபிமானங்களை விட்டுவிட்டு சகல ஜீவராசிகளையும் வணங்கி என்னுடைய கால் காட்டை விரலின் மீது தியானம் செய். இது பக்தியின் எளிய சாதனை" என்று பாபா நமக்கு குறிப்பால் உணர்த்துவதுபோல் தோன்றுகிறது.
இப்பொழுது, முன்பு சொன்ன கதைக்கு போவோம். அருள்மழை பொழிந்தது பற்றிய பிரவசனம் முடிந்தது. இப்பொழுது அபூர்வமான கதையொன்று தொடர்கிறது; கவனமாக கேளுங்கள்.
பாபா அங்கு வாசம் செய்ததால், ஷீர்டி புண்ணியஷேத்திரம் ஆகியது. இரவு பகலாக மக்கள் வந்த வண்ணம் இருந்தனர். புண்ணியத்தைத் தேடிய பல மக்கள் அங்கே கூடினர்.
பத்துத் திசைகளிலும் வியாபித்திருக்கும் .கற்பகத்தருவைப் போன்று நேரிடையாகவும் மறைமுகமாகவும் வரங்களை அள்ளிவீசும் சாயிபாபா ஷிர்டியில் அவதரித்துவிட்டார்.
ஏழையையும் பணக்காரனையும் சமசமானமாகப் பாவித்தார். கற்பனை செய்தும் பார்க்கமுடியாத லீலைகளால் பக்தர்களுக்கு மங்களம் அளித்தார்.
ஓ, எவ்வளவு கரைகாணாத பிரேமை! என்னே இந்த இயல்பான பிரம்ம ஞானம்! எல்லா உயிர்களிலும் உறைபவன், ஒன்றான இறைவனே என்பதில்தான் அவருக்கு எவ்வளவு அமோகமான நம்பிக்கை! பாபாவை அனுபவித்தவர் பாக்கியசாலி.
சிலசமயங்களில் திடமான மௌனமே அவர் பிரம்மத்தை (முழுமுதற் பொருளை) பற்றிச் செய்த வியாக்கியானமாக அமைந்தது. சிலசமயங்களில் ஆத்மானந்தமாகிய இம்மேகத்தை பக்தர்கள் சூழ்ந்து கொண்டிருந்தனர்.
சில சமயங்களில் அவருடைய திருவாய்மொழி மறைபொருளாகவும் கனமான அர்த்தம் நிரம்பியதாகவும் இருந்தது. சிலசமயங்களில் அவர் மென்மையாகவும் பரிஹாஸமாகவும் பேசினார். சில சமயங்களில் அவர் எப்பொழுதும் பேசும் மறைபொருளடங்கிய பேச்சை விடுத்துக் கோபம் வந்தது போல் பாசாங்கு செய்தார்.
சிலசமயங்களில் குறிப்பால் உணர்த்தியும், சிலசமயங்களில் விவேகத்தால் புரிந்துகொள்ளுமாறும், சிலசமயங்களில் வெளிப்படையாகத் தெளிவாகவும், அவர் அநேக பக்தர்களுக்கு அநேக விதங்களில் உபதேசம் அளித்தார்.
No comments:
Post a Comment